கலித்தொகை - பாலைக் கலி - 30
'அருந்தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல், அணி கொள விரிந்து ஆனாச் சினை தொறூஉம், வேண்டும் தாது அமர்ந்து ஆடி, புரிந்து ஆர்க்கும் வண்டொடு, புலம்பு தீர்ந்து எவ் வாயும், இருந் தும்பி, இறை கொள எதிரிய வேனிலான்; துயில் இன்றி யாம் நீந்த, தொழுவை அம் புனல் ஆடி, | 5 |
மயில் இயலார் மரு உண்டு, மறந்து அமைகுவான்மன்னோ 'வெயில் ஒளி அறியாத விரி மலர்த் தண் காவில் குயில் ஆலும் பொழுது' எனக் கூறுநர் உளராயின்; பானாள் யாம் படர் கூர, பணை எழில் அணை மென் தோள் மான் நோக்கினவரோடு மறந்து அமைகுவான்மன்னோ | 10 |
'ஆனார் சீர்க் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை, தேன் ஆர்க்கும் பொழுது' எனத் தெளிக்குநர் உளராயின்; உறல் யாம் ஒளி வாட, உயர்ந்தவன் விழவினுள் விறல் இழையவரோடு விளையாடுவான்மன்னோ 'பெறல் அரும் பொழுதோடு, பிறங்கு இணர்த் துருத்தி சூழ்ந்து, | 15 |
அறல் வாரும், வையை' என்று அறையுநர் உளராயின்' என ஆங்கு, தணியா நோய் உழந்து ஆனாத் தகையவள் தகை பெற, அணி கிளர் நெடுந் திண் தேர் அயர்மதி பணிபு நின் காமர் கழல் அடி சேரா | 20 |
நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 28 | 29 | 30 | 31 | 32 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - யாம், உளராயின், பொழுது&, மறந்து, ஆர்க்கும்