கலித்தொகை - நெய்தற் கலி 144
நன்னுதாஅல்! காண்டை: நினையா, நெடிது உயிரா, என் உற்றாள்கொல்லோ? இஃது ஒத்தி பல் மாண் நகுதரும் தன் நாணுக் கைவிட்டு, இகுதரும் கண்ணீர் துடையா, கவிழ்ந்து, நிலன் நோக்கி, அன்ன இடும்பை பல செய்து, தன்னை | 5 |
வினவுவார்க்கு ஏதில சொல்லி, கனவுபோல் தெருளும் மருளும் மயங்கி வருபவள் கூறுப கேளாமோ, சென்று; 'எல்லா! நீ என் அணங்கு உற்றனை? யார் நின் இது செய்தார்? நின் உற்ற அல்லல் உரை' என, என்னை | 10 |
வினவுவீர்! தெற்றெனக் கேண்மின்: ஒருவன், 'குரற்கூந்தால்! என் உற்ற எவ்வம் நினக்கு யான் உரைப்பனைத் தங்கிற்று, என் இன் உயிர்' என்று, மருவு ஊட்டி, மாறியதற்கொண்டு, எனக்கு மருவு உழிப் பட்டது, என் நெஞ்சு; | 15 |
எங்கும் தெரிந்து, அது கொள்வேன், அவன் உள்வழி பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை திங்களுள் தோன்றி இருந்த குறு முயால்! எம் கேள் இதன் அகத்து உள்வழிக் காட்டீமோ? காட்டீயாய்ஆயின், கத நாய் கொளுவுவேன்; | 20 |
வேட்டுவர் உள்வழிச் செப்புவேன்; ஆட்டி மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த என் அல்லல் தீராய்எனின்; என்று, ஆங்கே, உள் நின்ற எவ்வம் உரைப்ப, மதியொடு வெண் மழை ஓடிப் புகுதி; சிறிது என்னைக் | 25 |
கண்ணோடினாய் போறி, நீ; நீடு இலைத் தாழைத் துவர் மணற் கானலுள் ஓடுவேன்; ஓடி ஒளிப்பேன்; பொழில்தொறும் நாடுவேன்; கள்வன் கரந்திருக்கற்பாலன்கொல்? ஆய் பூ அடும்பின் அலர்கொண்டு, உதுக் காண், எம் | 30 |
கோதை புனைந்த வழி; உதுக் காண், சாஅய் மலர் காட்டி, சால்பிலான், யாம் ஆடும் பாவை கொண்டு ஓடியுழி; உதுக் காண் தொய்யில் பொறித்த வழி உதுக் காண் 'தையால்! தேறு' எனத் தேற்றி, அறனில்லான் | 35 |
பைய முயங்கியுழி; அளிய என் உள்ளத்து, உயவுத் தேர் ஊர்ந்து, விளியா நோய் செய்து, இறந்த அன்பிலவனைத் தெளிய விசும்பினும் ஞாலத்தகத்தும் வளியே! எதிர்போம் பல கதிர் ஞாயிற்று | 40 |
ஒளி உள்வழி எல்லாம் சென்று; முனிபு எம்மை உண்மை நலன் உண்டு ஒளித்தானைக் காட்டீமோ; காட்டாயேல், மண்ணகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன், என் கண்ணீர் அழலால் தெளித்து; பேணான் துறந்தானை நாடும் இடம் விடாயாயின் | 45 |
பிறங்கு இரு முந்நீர்! வெறு மணலாகப் புறங்காலின் போக இறைப்பேன்; முயலின், அறம் புணையாகலும் உண்டு; துறந்தானை நாடித் தருகிற்பாய்ஆயின், நினக்கு ஒன்று பாடுவேன், என் நோய் உரைத்து; | 50 |
புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன் எல்லி ஆக, 'எல்லை' என்று, ஆங்கே, பகல் முனிவன்; எல்லிய காலை இரா, முனிவன்; யான் உற்ற அல்லல் களைவார் இலேன்; ஓஒ! கடலே! தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமை எடுத்து, | 55 |
'பற்றுவேன்' என்று, யான் விழிக்குங்கால், மற்றும் என் நெஞ்சத்துள் ஓடி ஒளித்து, ஆங்கே, துஞ்சா நோய் செய்யும், அறனில்லவன்; ஓஒ! கடலே! ஊர் தலைக்கொண்டு கனலும் கடுந் தீயுள் நீர் பெய்தக்காலே சினம் தணியும்; மற்று இஃதோ | 60 |
ஈரம் இல் கேள்வன் உறீஇய காமத் தீ நீருள் புகினும், சுடும் ஓஒ! கடலே! 'எற்றமிலாட்டி என் ஏமுற்றாள்?' என்று, இந் நோய் உற்று அறியாதாரோ நகுக! நயந்தாங்கே இற்றா அறியின், முயங்கலேன், மற்று என்னை | 65 |
அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு; ஆங்கு, கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீர, கெடல் அருங் காதலர் துனைதர, பிணி நீங்கி, அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனைத் | 70 |
திறன் இலார் எடுத்த தீ மொழி எல்லாம் நல் அவையுள் படக் கெட்டாங்கு, இல்லாகின்று, அவள் ஆய் நுதல் பசப்பே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 142 | 143 | 144 | 145 | 146 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - என்று, நோய், உதுக், எல்லாம், காண், யான், உற்ற, கடலே, ஆங்கே, அல்லல், உண்டு, மற்று, முனிவன், துறந்தானை, மதியொடு, உள்வழி, தெற்றெனக், நின், சென்று, செய்து, எவ்வம், நினக்கு, முந்நீர், கண்ணீர், மருவு, காட்டீமோ