மருதகாசி பாடல்கள் - பக்கம் - 168
(தொகையறா)
விளக்கினை பழம் என்று கருதியே ஏமாந்து விட்டிலும் விழுவதேனோ? ஆண்களின் வெளி வேஷப் பேச்சிலே மயங்கியே பெண்கள் எனைப் போல் நவிவதேனோ? |
(பாட்டு)
சிந்திக்கும் தன்மையற்றதாலா? அல்லது முன் ஜென்மத்தில் செய்த வினையாலா? இன்பம் தளை துன்பம் தொடரும் என்பதாலா? உலகமே சூதின் வடிவம் என்பதாலா (சிந்) |
(தொகையறா)
சதி செய்யும் சுய நலக் கும்பலாய் ஆண்களும் தரணியிலிருப்ப தேனோ? தங்கள் மனம் போலவே தாய்க்குலம் தன்னையே வீணாக வதைப்ப தேனோ? |
(பாட்டு)
நம்பிடும் பெண்கள் உள்ளதாலா?-உலகிலே நயவஞ்சகம் மலிந்ததாலா? தெம்பில்லா பேதை என்பதாலா?-சிலரிங்கே தெய்வமே இல்லை என்பதாலா? (சிந்) |
சமய சஞ்சீவி-1957
இசை: .G. ராமநாதன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 166 | 167 | 168 | 169 | 170 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 168 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - என்பதாலா