மருதகாசி பாடல்கள் - பக்கம் - 170

தத்துவம்
முதல் என்பது தொடக்கம்! முடி வென்பது அடக்கம்! விடை என்பது விளக்கம்! விதி என்பது என்ன? என்ன? என்ன? (முதல்) அறிவென்பது கோயில்! அன்பென்பது தெய்வம்! அறமென்பது வேதம்! அவன் என்பது என்ன? என்ன? என்ன? (முதல்) துயர் என்பது பாதி! சுகம் என்பது மீதி! இயல் பென்பது நீதி! செயல் என்பது என்ன? என்ன? என்ன? (முதல்) உறவென்பது பெருக்கல்! பிரிவென்பது கழித்தல்! வழி என்பது வகுத்தல்! வாழ்வென்பது என்ன? என்ன? என்ன? (முதல்) |
பூவும் பொட்டும்-1968
இசை: கோவர்த்தனம்
பாடியவர் : T. M. செளந்தரராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 168 | 169 | 170 | 171 | 172 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 170 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - என்ன, என்பது