வாயு புராணம் - பகுதி 20 - பதினெண் புராணங்கள்
முன்னொரு காலத்தில் ருரு என்றொரு அரக்கன் இருந்தான். அவன் தற்செயலாக ஒருமுறை பார்வதியைப் பார்த்துவிட்டு அவளையே தான் மணம் புரிய வேண்டும் என்று கடுந்தவம் இயற்றினான். தவத்தின் முடிவில் வந்த பிரம்மன், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். ருரு, ‘நான் பார்வதியை மணந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார். 'இது என்னால் முடியக் கூடிய காரியம் அன்று என்று பிரம்மன் போய் விட்டார். ருருவின் தவம் தொடர்ந்தது. அந்தத் தவத்தின் கடுமையில் வெளிப்பட்ட உஷ்ணம் சுற்று வட்டாரம் முழுவதையும் எரித்தது. ருரு தங்கியிருந்த மலையம் என்ற மலையும் எரியத் துவங்கியது. அந்தச் சூடு மேருவைத் தாக்கவே சிவனும் பார்வதியும் கூட ஒட வேண்டியதாயிற்று. அப்போது பார்வதி சிவனைப் பார்த்து, நாம் ஏன் ஒடுகிறோம் என்று கேட்டாள். சிவன், ருரு என்ற அசுரன் உன்னை மணந்து கொள்வதற்காகக் கடுந்தவம் புரிகிறான். அதன் விளைவுதான் இது என்று கூறிய வுடன் பார்வதி உடனே இதற்கு ஏதாவது செய்யுங்கள் என்றாள். அதைக்கேட்ட சிவன், பார்வதி! இது உன் சம்பந்தமான விஷயம். நீதான் ஏதாவது செய்ய வேண்டும்' என்று கூறியவுடன் பார்வதி சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒரு சிங்கமும் யானையும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. சிங்கத்தைக் கொன்று அதன் தோலைப் போர்த்திக் கொண்டாள். சிங்கத்தின் குருதி வடிந்ததால் தலையும், முடியும் ரத்தத்தால் சிவந்தது. இந்த வடிவுடன் பார்வதி ருருவிடம் சென்று, ருரு! என்னை மணக்க வேண்டும் என்று தானே தவம் செய்கிறாய். இதோ நான் வந்து விட்டேன். என்ன செய்யப் போகிறாய் என்று கேட்க, ருரு கண்ணை விழித்துப் பார்த்தான். “நீ யார் என்று எனக்குத் தெரியாது. மகா கோர சொரூபியாய் இருக்கிறாய். பார்வதியின் சந்திரபிம்ப முகமும், தாமரை போன்ற கைகளும் கால்களும் உனக்கில்லை. உன் உருவத்தை நீயே பார்த்துக் கொண்டால் உன் சொரூபம் தெரியும்” என்று கூறிவிட்டுப் பார்வதியை கதாயுதத்தால் சாடினான்.
சினம் கொண்ட பார்வதி ருரு எறிந்த பல்வேறு ஆயுதங்களையும் தடுத்து விட்டுத் தன் பல்லாலும், கையாலும் அவனைக் கொல்ல முயன்றாள். இப்பொழுது ருருவின் உடலிலிருந்து பல்வேறு உருவங்கள் தோன்றின. பார்வதி தன் அம்சமான பல சக்திகளைப் படைத்தாள். அந்தச் சக்திகள் ருருவின் வடிவிலிருந்த பல்வேறு அசுரர்களைத் தின்று தீர்த்தன. பயந்த ருரு, பூலோகம், சொர்க்க லோகம், பாதாள லோகம் ஆகிய இடங்களுக்கு ஓடினான். பார்வதி அவனை எல்லா இடங்களிலும் துரத்தி வரவே ருரு ஒன்றும் செய்ய முடியாமல் நின்று விட்டான். பார்வதி அவன் உடலைக் கிழித்து அவன் தோலைப் போர்த்திக் கொண்டு வந்து நின்றாள். சிவனிடம் வந்த பார்வதி தான் அணிந்திருந்த சிங்கத்தோலைச் சிவனிடம் கொடுத்து விட்டு, ருருவின் தோலைத் தான் அணிந்து கொண்டாள்.
யமன் சொல்லிய கதை
ஒரு முறை பிரம்மாவின் மகனாகிய சனத்குமாரர் யமனைக் கண்டு பேசிவிட்டுப் போக வந்தார். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது பொன்னிறமான விமானத்தில் ஒருவர் வந்தார். உடனே யமன் எழுந்து மிக்க மரியாதையுடன் அவரைக் குசலம் விசாரித்து, பிரம்ம லோகத்தில் உங்கள் இடம் தயாராக உள்ளது. நீங்கள் அங்கே போகலாம் என்று வழியனுப்பிவிட்டு, உட்கார்ந்து பேசத் தொடங்கவும், மற்றொரு விமானத்தில் இன்னொருவர் வந்து சேர்ந்தார். மறுபடியும் யமன் சகல மரியாதையுடன் வரவேற்று பிரம்ம லோகம் அனுப்பினான். இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட சனத்குமாரர், 'யமனே! உன்னைக் கண்டு எல்லோரும் அஞ்சுகிறார்கள். உன்னிடம் வந்த இவர்களுக்கு இவ்வளவு மரியாதை செய்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இவர்கள் யார்?' என்று கேட்டார். வைதிஷா என்ற நகரை தாரபாலா என்ற அரசன் ஆண்டு வந்தான். இவன் நாட்டில் ஒடும் விதஸ்தா என்ற நதியும், வேத்ரவதியும் சங்கமம் ஆகும் இடத்தில் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஒரு நரி பூசை செய்து வந்தது. கைலையில் பார்வதி தவம் செய்யச் சென்ற பொழுது சிவனிடம் வேறு யாரும் தன்னைப் போல் வேஷமிட்டு நெருங்கிவிடாதபடி பார்த்துக் கொள்ளுமாறு ஏவிவிட்டுப் பார்வதி சென்று விட்டாள். அதி என்ற அசுரன் பார்வதியின் வடிவை ஏற்றுக் கொண்டு சிவனிடம் வந்தான். உண்மையான பார்வதிக்கும் போலிப் பார்வதிக்கும் வேறுபாடு தெரியாத நந்தி இந்த அசுரனை உள்ளே விட்டு விட்டார். நந்தி தன் கடமைகளைச் சரியாகச் செய்யாததால் 12 ஆண்டுகள் பூமியில் நரியாகப் பிறக்குமாறு பார்வதி சாபமிட்டார். அந்தச் சாபத்தால் நரியான நந்தி இப்பொழுது சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவபூசை செய்து வந்தது. அந்த நரியின் செயலை அடிக்கடி பார்த்து வந்த அரசன் தாரபாலா சாப முடிவில், நரி ஜோதி வடிவுடன் சிவனிடம் செல்வதைப் பார்த்தான். சிவபூசை சிறப்பை அறிந்த தாரபாலா, தானும் தீவிரமாக சிவபூசை செய்ய ஒரு கோயிலைக் கட்டி அங்கே புராணப் பிரசங்கங்கள் நிகழ ஏற்பாடு செய்தான். அந்தப் புண்ணிய பலத்தால் இப்போது பிரம்ம லோகம் செல்கிறான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாயு புராணம் - பகுதி 20 - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பார்வதி, ருரு, ருருவின், சிவனிடம், செய்து, லோகம், செய்ய, வந்த, வேண்டும், சிவபூசை, நந்தி, பிரம்ம, கண்டு, தாரபாலா, வந்து, தான், அவன், தவம், அந்தச், பல்வேறு, யமன்