வாயு புராணம் - பகுதி 18 - பதினெண் புராணங்கள்
அந்தகாசுரன் கதை
முன்னொரு காலத்தில் சிவன் தனியே அமர்ந்து எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குத் தெரியாமல் மெதுவாகப் பின்புறமாக வந்த பார்வதி அவருடைய இரண்டு கண்களையும் பொத்தி விட்டாள். சிவனின் கண்ணைப் பொத்தியதால் பார்வதியின் உடம்பில் ஏற்பட்ட உஷ்ணத்தால் வியர்வைத் துளிகள் கீழே விழுந்தன. அந்த வியர்வைத் துளிகள் எல்லாம் ஒன்றாகக் கூடி அரக்கனாக உருவாகிக் கூப்பாடு போட்டது. சிவன் கண்களை விடுவித்துக் கொண்டு 'யார் உறுமியது? என்று கேட்டார். கரிய அரக்கன் ஒருவன் கண்கள் இல்லாமல் இங்கும் அங்கும் அலைந்தான். சிவனுடைய கண்கள் பொத்தப்பட்ட நிலையில், இந்த அரக்கன் பிறந்ததால், அந்தகனாகவே (குருடனாகவே) இருந்தான். அவனுக்கு அந்தகாசுரன் என்ற பெயர் நிலைத்துவிட்டது.
ஹிரண்ய நேத்திரன் என்ற அரசன் தனக்கொரு பிள்ளை வேண்டுமென்று சிவனைக் குறித்துக் கடும் தவம் இயற்றி னான். சிவன் தோன்றி, "உனக்கென்று பிள்ளை பிறக்கும் பாக்கியமில்லை. எனவே நான் அவ்வரத்தைத் தரமுடியாது. என்றாலும், அந்தகனாகப் பிறந்த அசுரன் என்னிடம் இருக்கிறான். அவனை வேண்டுமானால் நீ பிள்ளையாக எடுத்துக் கொண்டு வளர்க்கலாம்” என்று சொன்னார்.
ஹிரண்ய நேத்திரன் மிக்க மகிழ்ச்சியோடு அந்தகாசுரனை எடுத்து வளர்த்தான். ஹிரண்ய நேத்திரன் சிவனைக் குறித்துப் பெரும் தவம் செய்து யாராலும் வெல்ல முடியாத வரங்களைப் பெற்று தேவருலகை வென்று, தேவர்களை அங்கிருந்து விரட்டி விட்டான். கடைசியில் பூமியையே சுருட்டிக் கொண்டு சென்று கடலுக்கடியில் வைத்து விட்டான். தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட, விஷ்ணு வராக அவதாரம் எடுத்து கடலுக்கடியில் சென்று அவனைத் தன் கொம்பினர்ல் குத்திக் கொன்று விட்டு பூமியைத் தன் கொம்புகளுக்கு இடையே வைத்து மேலே கொண்டு வந்து அது இருக்க வேண்டிய இடத்தில் வைத்து விட்டார். பிறகு ஹிரண்ய நேத்திரன் மகனாகிய அந்தகாசுரனை அரசனாக்கி விட்டார்.
இது நிகழ்ந்த பிறகு ஹிரண்ய நேத்திரன் தம்பியாகிய ஹிரண்ய கசிபு பெரு வரங்களைப் பெற்றுத் தன்னை யாரும் கொல்லமுடியாத சக்தி பெற்றதால், தேவர்கள் எல்லாம் ஒடும்படி செய்து விட்டான். தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட, அவர் சிங்க வடிவம் கொண்டு பல அரக்கர்களைக் கொன்று தீர்த்தார். இறுதியாக அந்த சிம்மம் ஹிரண்யகசிபு கோட்டைக்குள் நுழைந்தது. ஹிரண்ய கசிபுவின் பல மைந்தர்களுள் பிரகலாதன் என்று ஒருவன் இருந்தான். புத்திசாலியாகிய அவன், ஒரு சாதாரண சிங்கம் இவ்வளவு பெரிய அழிவினைச் செய்ய முடியாது, ஆகவே விஷ்ணுதான் இப்படி ஒரு சிங்க வடிவுடன் வந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டான். தன் தந்தையிடம் சென்று சிங்கம் என்பது விஷ்ணுதான் என்றும், அதனிடம் போர் புரியப் போக வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் அவன் எல்லாம் சிங்கத்திடம் போர் புரிய அனுப்பினார். அவர்கள் அனைவரும் மாண்டனர். கடைசியாகத் தானே சென்று தன்னிடமுள்ள அத்தனை அஸ்திரங்களையும் பயன்படுத்திப் பார்த்தான். அவனுடைய ஆயுதங்கள் அந்த சிங்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியாகச் சிங்கம் தன்னுடைய நகங்களால் அவனுடைய இருதயத்தைப் பிளந்து கொன்றது. கடைசியில் விஷ்ணு பிரகலாதனுக்குப் பட்டம் சூட்டினான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாயு புராணம் - பகுதி 18 - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, ஹிரண்ய, கொண்டு, நேத்திரன், சென்று, வைத்து, சிங்கம், தேவர்கள், விட்டான், அந்த, சிவனைக், சிவன், எல்லாம்