வாயு புராணம் - பகுதி 14 - பதினெண் புராணங்கள்
இராமன் வானர சேனைகளுடன் இலங்கைமேல் படையெடுத்துச் செல்ல கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். நீர் தாகமெடுத்ததால் குரங்கிடம் சொல்லி தண்ணிர் கொண்டு வருமாறு பணித்தான். தண்ணிர் வந்தவுடன் சிவனுக்குப் படைக்காமல் எதையும் உண்ணாதவனாகிய இராமன், ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து அதற்கு அந்நீரைப் படைத்தார். வழிபாடு முடிந்ததும், சிவனும் பார்வதியும் தோன்றி இராமனை வாழ்த்தினார்கள். அதே இடத்தில் சிவபெருமான் நிலையாக இருக்க வேண்டுமென்று இராமன் வேண்டிக் கொண்டதால், இராமலிங்கமாக சிவன் அங்கேயே தங்கிவிட்டார்.
12. குஷ்மேஸ் லிங்கம்
தென்பகுதியில் சுதர்மா என்ற பிராமணன் சுதேஹா என்ற தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். நீண்ட காலமாக இருவருக்கும் குழந்தையில்லை. எனவே அவன் வருத்தத்தை விட அவள் வருத்தம் பெரிதாக இருந்தது. பிற பெண்கள் அவளைக் கேலி செய்யத் தொடங்கினர். அதனால் வருத்தம் அடைந்த அவள் தன் உறவினராகிய குஷ்ணா என்பவளை அவன் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினாள். கதர்மா "அப்படியே மணம் புரிந்து கொண்டு அவளுக்கு ஒரு குழந்தை பிறந்து விட்டால், நீ அதனைத் தாங்க மாட்டாய், பொறாமையால் மிகவும் துன்புறுவாய்” என்று கூறித் தடுத்தான். “அது பற்றிக் கவலை வேண்டாம். நான் தானே இதை முன்னின்று செய்கிறேன்” என்று கூறிவிட்டு, குஷ்ணாவை இரண்டாம் தாரமாக மணமுடித்து வைத்தாள். குஷ்ணா பெரிய சிவ பக்தை தினமும் களி மண்ணால் 108 சிவ லிங்கங்கள் செய்து அவற்றைப் பூசை செய்துவிட்டு, பக்கத்தில் உள்ள குளத்தில் லிங்கங்களைப் போட்டு விடுவது அவள் வழக்கம். இவ்வாறு ஒர் இலட்சம் லிங்கங்களைப் பூசை செய்து குளத்தில் போட்டிருந்தாள். உரிய காலத்தில் ஒர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை வளர வளர முதல் மனைவியின் மனத்தில் பயங்கரமான பொறாமை உருவெடுத்தது. இதன் முடிவில் ஒரு நாள் மூத்தவள் குழந்தையின் கழுத்தை வெட்டி அந்த உடலைப் பக்கத்தில் உள்ள குளத்தில் போட்டு விட்டாள். மறுநாள் விழித்ததும் என்ன நடந்ததென்றே தெரியாமல் பூஜை செய்யத் தொடங்கி விட்டாள் குஷ்ணா. இதனிடையில் குழந்தை இல்லை என்று கண்டவுடன் அனைவரும் பெருங் கூச்சலிட்டுத் தேடுவாராயினர். இத்தனைக் கூச்சலிலும், குழப்பத்திலும் ஒரு சிறிதும் ஈடுபடாமல் குஷ்ணா சிவ பூஜையில் ஈடுபட்டிருந்தாள். அவள் பூசையை ஏற்றுக் கொண்ட சிவன் அவள் பிள்ளையைப் பிழைக்கச் செய்து அவளிடம் சேர்ப்பித்தார். மூத்தவளை தண்டிக்கத் துவங்கியபோது, அவளை மன்னித்து விடும்படி குஷ்ணா வேண்டிக் கொண்டாள். இந்தப் பெருந்தன்மையில் மகிழ்ச்சி அடைந்த சிவன், மற்றொரு வரம் கொடுக்கத் தயாரானார். குஷ்ணா சிவன் கொடுப்பதாகக் கூறிய வரத்தைப் பயன்படுத்தி அந்தக் குளத்தங்கரையிலேயே லிங்க ரூபமாகச் சிவன் இருக்கவேண்டுமென்று வேண்டிக் கொண்டாள். பன்னிரெண்டாவது ஜோதிர் லிங்கமாகக் குஷ்மேஸா என்ற பெயருடன் சிவன் அங்கே இருக்கிறார்.
சுதர்சன சக்கரக் கதை
முன்னொரு காலத்தில் நடைபெற்ற தேவாசுர யுத்தத்தில் தேவர்கள் மிகவும் நலிந்து போனார்கள். அவர்கள் அனைவரும் ஒடிச்சென்று விஷ்ணுவிடம் முறையிட்டனர். பலம் பொருந்திய அசுரர்களுடன் போர் புரிய வேண்டுமானால், அதற்குரிய ஆயுதம் எனக்கு வேண்டும். அதைக் கொடுக்கக் கூடியவர் சிவபிரானே என்று விஷ்ணு கைலை சென்று சிவனுடைய ஆயிரம் நாமங்களை தினமும் சொல்லி நீண்ட காலம் வழிபட்டார். ஆயிரம் நாமங்களை ஒவ்வொன்றாகச் சொல்லும் பொழுது ஒவ்வொரு தாமரைப் பூவை சிவனுக்கு அர்ச்சனை யாகச் செய்தார். ஒரு நாள் ஆயிரம் பூக்களில் ஒன்று குறைந்து விடவே தாமரைக் கண் என்று சொல்லப்படும் தன் ஒரு கண்ணைப் பறித்து அர்ச்சனை செய்து விட்டார். மகிழ்ந்த சிவபிரான் வெளிப்பட்டு, “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்க, “அசுரர்களை அழிப்பதற்கு ஒர் ஆயுதம் வேண்டும்” என்று கேட்டார். சிவபிரான் மகிழ்ந்து சுதர்சன சக்கரத்தைத் தந்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாயு புராணம் - பகுதி 14 - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, குஷ்ணா, செய்து, சிவன், அவள், குழந்தை, குளத்தில், ஆயிரம், வேண்டும், வேண்டிக், இராமன்