மார்க்கண்டேய புராணம் - பகுதி 4 - பதினெண் புராணங்கள்
இந்த நிலையில் பூமியில் அரக்கர்கள் மிகுதியாகத் தோன்றி விட்டமையால், பூமி தேவி சுமேரு மலைக்குச் சென்று தனது ஆற்றாமையை வெளியிட்டாள். தேவர்கள் அவளுக்கு பாரத்தைக் குறைப்பதாகக் கூறி தருமதேவதை இந்திரனிடம் பெற்ற ஆற்றலை யுதிஷ்டிரனாகவும், வாயு பெற்ற ஆற்றலை பீமனாகவும், இந்திரன் ஆற்றல் அருச்சுனனாகவும், அஸ்வினிகளின் ஆற்றல் நகுல, சகாதேவர்களாகவும் பிறக்குமாறு செய்தார்கள். இந்திரன் மனைவியாகிய சச்சி திரெளபதி யாகவும் பூமியில் பிறந்து ஐவரையும் மணந்து கொண்டாள். யுதிஷ்டிரன் முதல், சகாதேவன் வரை உள்ள ஐவரும் மனிதர்கள் என்ற முறையில் வெவ்வேறானவர்களாக இருப்பினும், இந்திரனுடைய ஆற்றலின் ஒவ்வொரு கூறாகவே இருந்தனர். இந்த ஐவரும் இந்திரன் ஆற்றல்களே. ஆதலால் சச்சி அல்லது திரெளபதி ஐவரையும் மணந்ததாகச் சொன்னாலும், உண்மையில் இந்திரன் ஒருவனையே மணந்தாள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அரிச்சந்திரன் கதை
முன்னொரு காலத்தில் திரேதாயுகத்தில் அரிச்சந்திரன் என்ற மன்னன் இந்த நில உலகை ஆண்டு வந்தான். அவன் ஆட்சிச் சிறப்பால் பஞ்சம், நோய், பிணி முதலிய எதுவும் ன் நாட்டில் ட்டவில் வேட்டைக்கச் சென்ற அவன், தப்பி ஓடிய சில மான்களைத் துரத்திக் கொண்டு காட்டில் வெகுதூரம் வந்து விட்டான். மானின் பின்னே ஒடிக்கொண்டிருந்த மன்னன் காதுகளில், “எங்களைக் காப்பாற்றுங்கள் என்ற பெண்களின் அபயக் குரல் விழுந்தது. உடனே, மானின் பின் போவதை விட்டுவிட்டு அபயக் குரல் வந்த திசைப் பக்கம் சென்றான். அங்கே ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதையும், அவர் எதிரே சில பெண்கள் 'காப்பாற்றுங்கள் என்று ஒலமிடுவதையும் கண்டான். வில்லில் அம்பைப் பூட்டிய மன்னன் எதிரே இருப்பவர் ஒரு முனிவர் என்பதை அறிந்து கொண்டான். அந்தப் பெண்கள் உண்மையில் பெண்களே அல்ல. வித்யாஞானத்தின் பல கூறுகளே ஆவர். வித்யா ஞானத்தின் பல்வேறு பகுதிகளையும் உள்ளவாறு அறிந்து கொண்டு அதன் மூலம் உண்மையான ஞானத்தை அடைய விரும்பினார் எதிரிலிருந்த முனிவர் விசுவாமித்திரர். அதனால்தான் வித்யாவின் பல பகுதிகள் வெளிப்பட்டு 'எங்களைக் காப்பாற்றுங்கள் என்று முறை யிட்டன.
அரிச்சந்திரனைக் கண்டதும் அவர்கள் ஒலம் நின்றது. காரணம் கடுந்தவத்தில் இருந்த விசுவாமித்திரர் மிக்க கோபமாக அப்பெண்களைப் பார்த்தவுடன் அவர்கள் அஞ்சி மறைந்து விட்டனர். பெண்கள் மறைந்தவுடன் வெட்கிப்போன அரிச்சந்திரன் விசுவாமித்திரர் கால்களில் விழுந்து, "என்னை மன்னித்து அருளல் வேண்டும். இங்கு நடந்தது ஒன்றும் தெரியாது எனக்கு. பெண்களின் அபயக் குரலைக் கேட்டு அரசன் என்ற முறையில் அவர்களைக் காக்க முன்வந்தேன்” என்று கூறினான். விசுவாமித்திரர், 'உன்மேல் எனக்கு ஒன்றும் கோபமில்லை. எல்லாவற்றையும் நன்கு அறிந்தவனாகிய உன்னிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்” என்றார். மேலும் விசுவாமித்திரர் மூன்று கேள்விகளைக் கேட்டார். "யாருக்கு தருமம் செய்ய வேண்டும்? யாரைக் காப்பாற்ற வேண்டும்? யாருடன் போரிட வேண்டும்?”
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மார்க்கண்டேய புராணம் - பகுதி 4 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, இந்திரன், வேண்டும், விசுவாமித்திரர், முனிவர், பெண்கள், அபயக், மன்னன், ஆற்றல், அரிச்சந்திரன், காப்பாற்றுங்கள்