மார்க்கண்டேய புராணம் - பகுதி 3 - பதினெண் புராணங்கள்
பறவைகளின் கதை
நீண்ட காலத்திற்கு முன்னர் சுக்ரிஷா என்றொரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவருடைய பிள்ளைகளே இந்த நான்கு பறவைகளும் ஆகும். ஒருநாள் இந்திரன் வயதான, பெரிய பறவை உருவம் எடுத்து அங்கு வந்தான். தனக்கு மிகவும் பசியாக இருப்பதாகவும், மனித மாமிசம் கொடுத்தால் தனக்கு மிகவும் திருப்தியாக இருக்கும் என்றும் அப்பறவை கூறியது. உடனே சுக்ரிஷா முனிவர் தம் பிள்ளைகளை அழைத்து அவர்களையே அப் பறவைக்கு உணவாகும்படிக் கூற, அந்த நால்வரும் இதை மறுத்து விட்டனர். இதனால் கடுங்கோபம் கொண்ட முனிவர், தன்னுடைய நான்கு மகன்களும் பறவை களாகப் பிறக்கும்படி சாபமிட்டு, தன் உடம்பையே பறவையாக வந்த இந்திரனுக்கு உணவாக அளிக்க விரும்பினார். இந்திரன், மன்னிப்புக் கேட்டான். சாபமிடப்பட்ட நான்கு மகன்களும் தங்கள் தந்தையை வணங்கி, தாங்கள் தங்கள் உடல் மீது மிகுந்த பற்றுக் கொண்டுள்ளபடியால், தந்தை கூறியதை ஏற்க மறுத்தனர் என்றும், உண்மையான ஞானத்தைப் பெறும் பொழுது உடல் மீதுள்ள பற்று நீங்கும் என்றும் கருதி, அடுத்த பிறவியிலாவது எங்களுக்கு உண்மை ஞானம் கிடைக்க அருள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். முனிவரும் "அப்படியே ஆகட்டும் என்றார். அந்த நான்கு பிள்ளைகளும் இந்தப் பிறவியில் தர்ஷியின் வயிற்றில் பறவைகளாகப் பிறந்தோம். அந்த நால்வரும் நாங்களே என்று பறவைகள் சொல்ல, முனிவர், “விந்திய மலைக்குச் செல்லுங்கள்” என்று கட்டளை இட்டார்.
இந்த நீண்ட கதையை ஜெய்மினிக்குச் சொல்லிய மார்க்கண்டேயர், நீங்கள் சென்று அந்தப் பறவைகளைப் பாருங்கள் என்று கூறி விடை கொடுத்தார்.
ஜெய்மினியும் பறவைகளும்
ஜெய்மினி பறவைகளைப் பார்த்து, இரண்டு கேள்வி களைக் கேட்டார்: “பஞ்ச பாண்டவர் யார்? திரெளபதி ஏன் ஐவரையும் மணம் செய்து கொள்ள வேண்டும்? அதற்குப் பறவைகள் சொன்ன விடை கீழே தரப்பட்டுள்ளது.
முன்னொரு காலத்தில் துவஷ்டா என்ற அசுரனின் மகன் திரிசரா என்பவன் தலைகீழாக நின்று கடுந்தவம் இயற்றிக் கொண்டிருந்தான். அவனுடைய தவம் நிறைவேறினால் தன் ஆட்சிக்கு ஆபத்து விளையும் என்பதை அறிந்த இந்திரன் மறைவாக நின்று தவத்தில் இருந்த திரிசராவைக் கொன்று விட்டான். திரிசரா பிராமணன் ஆகையினாலும், தவத்தில் இருந்தானாகையாலும் அவனைக் கொன்ற இந்திரனின் ஆற்றலில் ஒரு பகுதி தருமதேவதையிடம் சென்று விட்டது. திரிசரா கொல்லப்பட்டதை அறிந்த துவஷ்டா தன் தலையில் இருந்து ஒர் உரோமத்தை எடுத்து அக்னியில் போட, அதிலிருந்து சர்வ வல்லமை உள்ள விருத்ராசுரன் தோன்றினான். விருத்திரனைக் கண்டு அஞ்சிய இந்திரன், சப்த ரிஷிகளிடம் சென்று முறையிட்டு தனக்கும் விருத்திரனுக்கும் நட்புச்செய்து வைக்குமாறு வேண்டிக் கொண்டான். இருவரும் நண்பர்கள் ஆயினர். மனத்துக்குள் வஞ்சகத்தை நிரப்பி இருந்த இந்திரன், நம்பி இருந்த விருத்திராசுரனை வஞ்சகமாகக் கொன்றுவிட்டான். இந்தத் தவறான கொலையின் காரணமாக இந்திரன் தன் ஆற்றலின் ஒரு பகுதி வாயுவிடம் சென்று விட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மார்க்கண்டேய புராணம் - பகுதி 3 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, இந்திரன், முனிவர், பறவைகள், சென்று, நான்கு, திரிசரா, இருந்த, நீங்கள், அந்த, சொல்ல, என்றும், வேண்டும்