மார்க்கண்டேய புராணம் - பகுதி 14 - பதினெண் புராணங்கள்
அவன் போய்விட்டாலும் அவனையே நினைந்து மெலிந்த வருதினி அந்த வனத்திலேயே தங்கி விட்டாள். முன்னர் அவளால் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட கலி என்ற கந்தர்வன் இப்போது அவள் மனநிலை அறிந்து, அவள் விரும்பிய பிராமண இளைஞனின் வேடம் கொண்டு அவளிடம் வந்தான். உண்மை அறியாத வருதினி அவனை மணந்து கொண்டாள். அவர்களுக்கு ஒரு பிள்ளையும் பிறந்தது. உடனே அக்கலி அவளைவிட்டுப் போய்விட்டான். வருதினியின் மகன் ஸ்வரோச்சா வளர்ந்து பெரியவனாகி சாத்திரங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்து அழகுள்ள இளைஞனாக இருந்தான்.
ஸ்வரோச்சா ஒருமுறை மந்தார மலைக்குச் சென்ற பொழுது ஒர் இளம்பெண் என்னைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லி அவன் எதிரே வந்தாள். “ஏன் ஓடி வருகிறாய்? உனக்கு என்ன தீங்கு ஏற்பட்டது?" என்று ஸ்வரோச்சா கேட்ட உடன், அப்பெண் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள். "ஐயா! மனோரமா என்ற நானும், விபவரி, கலாவதி என்ற என் தோழிகளுடன் கைலாசத்தில் சுற்றிப் பார்த்துக் கொண் டிருந்தோம். முனிவர் ஒருவர் பெருந்தவத்தில் ஈடுபட்டிருந்த தால், அவருடைய உடம்பு இளைத்து, கண்கள் குழி விழுந்து பார்ப்பதற்கு பயங்கரமான தோற்றத்துடன் இருந்தார். அவரைப் பார்த்து நான் ஆணவத்தால் கேலி செய்துவிட்டேன். 'ஒரு ராட்சசன் வந்து என்னைப் பிடித்துக் கொள்வான்' என்று சாபமிட்டார். இவ்வளவு கொடிய சாபம் தருவது ஒரு முனிவருக்கு அழகல்ல' என்று என் தோழிகள் சொன்னவுடன், அவர் மேலும் கோபம் கொண்டு, ஒருத்திக்குக் குஷ்ட ரோகமும், இன்னொருத்திக்கு கூடியரோகமும் பீடிக்கட்டும்’ என்று சாபமிட்டார்.
"இது நடந்து மூன்று நாட்களாயின. இப்போது ஒரு கொடிய ராட்சசன் என்னைப் பின்தொடர்ந்து வருகிறான். என் கையில் ஒர் அற்புதமான ஆயுதம் இருக்கிறது. இந்த ஆயுதம் ருத்ரனால், சுவயம்பு மனுவிற்குத் தர, சுவயம்புமனு அதை வசிட்டருக்குத் தர வசிட்டர் அதை என் தாத்தாவிற்குத் தர, என் தாத்தா எனக்கு அதைத் தந்துள்ளார். எப்படிப் பட்டவரையும் அழிக்கக்கூடிய இந்த ஆயுதத்தை எப்படி வைத்திருப்பது, எப்படிப் பிரயோகிப்பது, எப்படி மீட்டுக் கொள்வது என்பதை நான் உங்களுக்குச் சொல்லித் தருகிறேன்” என்று கூறிவிட்டு, அந்த வித்தையினை அவனுக்குக் கற்றுத் தந்தாள். ஸ்வரோச்சா ஆயுதத்தை வாங்கிக் கொண்டதும் அரக்கன் அப்பெண்ணைப் பிடிக்க வந்தான். முனிவருடைய சாபப்படி பெண்ணைப் பிடிக்கட்டும். பிறகு மீட்டு விடலாம் என்ற நினைவில் ஸ்வரோச்சா சும்மா இருந்தான். அரக்கன் அப்பெண்ணைப் பிடித்துக் கொண்ட வுடன், இவன் ஆயுதத்தைக் கையில் எடுத்தான். அப்போது அந்த அரக்கன், ‘என் கதையைக் கேள்' என்று தன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினான்.
அரக்கனின் கதை
“இளைஞனே! என் சொல்லைக் கேட்டு என்னைக் கொன்று விடாமல் விட்டாயே, உனக்கு என் நன்றி. இப் பெண் என்னுடைய மகள்தான். இவளுடைய தந்தையாகிய எனக்கு இந்திவரா என்று பெயர். ஆயுர்வேதத்தில் மிக வல்லவராகிய பிரமமித்ராவிடம் சென்று அவ்வித்தையைக் கற்றுக்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மார்க்கண்டேய புராணம் - பகுதி 14 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, ஸ்வரோச்சா, அவன், அரக்கன், ", அந்த, வருதினி, அவள்