கூர்ம புராணம் - பகுதி 13 - பதினெண் புராணங்கள்
ரிக்வேதம் பேசியதாவது
பிரபு மகேஸ்வரனிடம் இருந்துதான் அனைத்தும் தோன்றுகின்றன. அவர் விருப்பத்தினாலேயே பிரபஞ்சம் நிலைத்திருக்கிறது. யஜூர்வேதம் கூறியது பினாகபாணியாகிய ஈஸ்வரனைத்தான் சகலரும் வணங்குகின்றனர்.
சாமவேதம் கூறியது
தேவதேவன் என்று சொல்லப்படுபவர் சங்கரரே ஆவார். அவரைச் சுற்றியே பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபேறு, மறைவு ஆகியவை நடைபெறுகின்றன. யோகிகள் தம் ஆத்ம ஞானத்தால் அறிந்து மூலப் பரம்பொருள் என்று வழிபடுவதும் இவரைத்தான்.
அதர்வனவேதம் கூறியது
மெய்ஞ்ஞானிகள் பவன் என்றும், புருஷன் என்றும், ருத்ரன், தேவதேவன் என்றும் அறிந்து வழிபடுவது இவரைத் தான். வேதங்கள் கூறிய வார்த்தைகளைக் கேட்ட பிரம்மன், ஏளனச் சிரிப்பு சிரித்துக் கொண்டு, பரப்பிரம்மம் என்பது, எதையும் பற்றாமல் இருக்க வேண்டும். நீங்கள் சொல்லும் தேவதேவன் மனைவியோடு வாழ்கின்றவர். அவருடைய பரிவாரங்கள் மிகவும் கர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்று கூறியவுடன் வடிவமற்றதாகிய 'பிரணவம் ஒர் வடிவெடுத்து பிரம்மன் முன் நின்றது. பிரணவம் பேசத் தொடங்கிற்று:
“மகேசன் என்று சொல்லப்படும் சங்கரன், அல்லது சிவம் நீ நினைப்பது போல் தன்னிலும் வேறான ஒரு தனிப்பட்ட பொருளைச் சக்தி என்று கூறித் தன்னுடன் வைத்துக்கொள்ள வில்லை. அந்தச் சக்தி சிவனின் வேறுபட்டதன்று. பார்வதி என்ற அப்பெண் தெய்வம், பரமனின் அனந்த சொரூபம் அன்றி அவனின் வேறுபட்டுத் தனித்தியங்கும் இயல்புடைய தன்று. பிரணவம் இவ்வாறு பேசியும், அஜன் என்றழைக்கப் படும் பிரம்மன் மாயையினின்று விடுபடவில்லை. அந்த மாயையும் சிவனால் அருளப்பட்டதே ஆகும். அஜன் என்ற பிரம்மன் இவ்வாறு பேசிக் கொண் டிருக்கையில், அவன் எதிரில் விண்ணையும், மண்ணையும் தொட்டுக் கொண்டு ஒரு ஒளிப்பிழம்பு தோன்றியது. அந்த ஒளிப்பிழம்பின் இடையே கோடி சூரியப் பிரகாசத்துடன் மற்றோர் ஒளிப்பிழம்பு காட்சி அளித்தது. இவ்வாறு நின்ற வடிவம் அனைத்திற்கும் மேம்பட்டவனும், கையில் சூலத்தை உடையவனும், பாம்பைப் பூணுலாக அணிந்தவனும், நீல லோகிதன் என்ற பெயரை உடையவனும் ஆகிய சங்கரனே ஆகும். இந்த வடிவத்தைக் கண்ட பிரம்மன், 'ஓ, சங்கரா! ஒரு காலத்தில் என் நெற்றியிலிருந்து பிறந்தவன் தானே நீ. இப்பொழுது என்னுள் அடைக்கலம் புகுந்து கொள்” என்று கூறினான்.
ஆணவமே வடிவான இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் சங்கரனிடம் இருந்து காலபைரவ மூர்த்தி என்றொருவர் தோன்றினார். கையில் திரிசூலத்துடன் தோன்றிய அவர், அகம்பாவம் கொண்ட பிரம்மனுடன் போர் புரிந்தார். இறுதியாக அவருடைய ஐந்தாவது தலையைக் கிள்ளி எடுத்து விட்டார். சம்பு என்ற பெயர் படைத்த சங்கரன் கால பைரவ வடிவத்தில் பிரம்மன் தலையைக் கொய்தவுடன், பிரம்மன் இறந்து விட்டார். ஆனால், ஈசன் என்ற பெயருடைய சங்கரன், தன் யோக சக்தியால், பிரம்மனை மறுபடியும் பிழைக்கச் செய்து விட்டார். உயிர் பெற்ற பிரம்மன், ஈசானன் ஆகிய சிவன் தன் சக்தியுடன் கூடி அந்த ஒளிப்பிழம்பிற்கு அப்பால் இருப்பதைக்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூர்ம புராணம் - பகுதி 13 - Kurma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பிரம்மன், இவ்வாறு, அந்த, விட்டார், சங்கரன், பிரணவம், தேவதேவன், என்றும், கூறியது