கூர்ம புராணம் - பகுதி 9 - பதினெண் புராணங்கள்
காசியப முனிவருக்கும், அதிதிக்கும் மகனாகத் தோன்றியவன் வைவஸ்வனா. இவனுக்கு நான்கு மனைவியர். இவர்களில் சம்ஜனா முதல் மனைவி ஆவார். அவருடைய மகனே வைவஸ்வத மனு ஆவான். அவனுக்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் இக்ஷ்வாகு, நபகா, அரிஷ்டா முதலானோர். இலா என்று ஒரு மகள் இருந்தாள். அவள் வழியிலேயே சந்திரவம்சம் தொடங்கிற்று. இrவாகு பரம்பரையில் தோன்றியவனே தசரதன். அவன் மகன் இராமன் போன்றோர்.
சந்திர வம்சாவளி
சந்திரனின் மகனாகிய புதன், வைவஸ்வத மனுவின் மகளாகிய இலாவை மணந்தான். அவர்களுக்குப் புரூரவா என்ற மகன் இருந்தான். அவன் அப்ஸரஸ் ஊர்வசியை மணந்து அனுமன்களைப் பெற்றனர். இந்தப் பரம்பரையில் வந்தவனே யயாதி மன்னன். யயாதி மன்னனின் மகனாகிய யாதுவின் வழியில் வந்தவனே கார்த்தவீரிய அருச்சுனன். அவனுக்குப் பலநூறு மக்கள் இருந்தனர். அவர்களில் ஐவர், மிக முக்கியமானவர்கள். அவர்கள் முறையே சுரா, சுரசேனா, கிருஷ்ணா, திருஷ்ணா, ஜயத்வஜா என்றழைக்கப்பட்டனர். இவர்களில் ஜயத்துவஜா விஷ்ணுவை தியானிப்பார். மற்ற நால்வரும் சிவனையே வணங்குபவர்கள்.
ஒரு நாள் சகோதரர்களுக்குள் ஒரு வாக்குவாதம் மூண்டது. மூத்த சகோதரர்கள் நால்வரும் ஒன்றுகூடி, இளையவனைப் பார்த்து நீ விஷ்ணுவை வணங்குவது சரியன்று. நம் தந்தை பெரிய சிவபக்தர். அப்படி இருக்க அவருடைய பிள்ளை களாகிய நாம் அவர் வழியில் செல்வதுதான் முறை. தந்தை யைப் போலவே நீயும் சிவபக்தனாக மாறிவிடு என்று கூறினர். அதற்கு விடையாக, ஜயத்துவஜன் “விஷ்ணுதான் எல்லோருக்கும் பெரியவர். அவர்தான் இவ்வுலகைக் காப்பவர். எனவே அவரைத் தொழுவதுதான் சரி” என்றான். இவர்களுக்குள் ஒருமைப்பாடின்மையால் சகோதரர்கள் ஒன்று கூடி சப்தரிஷிகளுள் ஒருவராகிய வசிட்டரிடம் சென்றனர். அவரிடம் தத்தம் வாதங்களை முன்வைத்தனர். அதைக் கேட்ட வசிட்டர் பின்வருமாறு கூறினார்: "அவரவர் விருப்பத்திற்கு எந்த தெய்வம் உகந்ததோ அதை வழிபடுவதே சரியானதாகும். மேலும் அரசர்கள் விஷ்ணுவையும், இந்திரனையும், பிராமணர்கள் அக்னி, சூரியன், பிரம்மன், சிவன் ஆகியோரையும், தேவர்கள் விஷ்ணுவையும், அசுரர்கள் சிவனையும், யட்சர்கள் கந்தர்வர்கள் சந்திரனையும், முனிவர்கள் பிரம்மன், சிவன் ஆகியோரையும், பெண்கள் பார்வதியையும் வணங்குகின்றனர். மனிதர்கள் விஷ்ணுவும் சிவனும் வேறு வேறு அல்ல என்பதை உணர்ந்து, இருவரையும் ஒரே சமயத்தில் வணங்க வேண்டும்” என்று கூறி முடித்தார் வசிட்டர்.
வாரணாசியின் தனிச்சிறப்பு
முன்னொரு காலத்தில் துர்ஜயா என்ற மன்னன் உலகை ஆண்டு வந்தான். அவனுடைய மனைவி மிக்க அழகு வாய்ந்தவள். நல்ல குணநலன்கள் பொருந்தியவள்.
ஒரு நாள் துர்ஜயா அரசன் காளிந்தி நதிக்கரைக்குச் சென்றான். அங்கு அப்ஸ்ரஸ் ஊர்வசியைக் கண்டு மணம் புரிந்து கொண்டு நீண்ட காலம் அங்கேயே தங்கிவிட்டான். பலகாலம் கழித்து தன் ராஜ்ஜியத்தையும், மனைவியையும் நினைத்துக்கொண்டு தன் நாட்டிற்குச் சென்று வர வேண்டும் என்ற தன் விருப்பத்தை ஊர்வசியிடம் தெரிவித்தான். அவள் 'இன்னும் ஒர் ஆண்டு இருந்துவிட்டுப் போகலாம் என்று கூறினாள். அவன் பிடிவாதம் செய்யவே “அவன் நாட்டிற்குச் சென்று மனைவியைப் பார்த்தாலும் அவளுடன் வாழக் கூடாது. பார்த்துவிட்டு உடனே திரும்பிவிட வேண்டும்” என்று அவனிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டு அவனை அனுப்பினாள். தன் நாட்டிற்கு வந்த அவன் மனைவியைப் பார்த்தும்கூட அவளுடன் பேசாமல் இருந்துவிட்டான். அவன் மனைவி மெளனத்தின் காரணத்தை வற்புறுத்திக் கேட்டபோது துர்ஜயா நடந்ததைக் கூறிவிட்டான். உடனே அவன் மனைவி "கட்டிய மனைவி இருக்கும் பொழுது வேறு
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூர்ம புராணம் - பகுதி 9 - Kurma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அவன், மனைவி, துர்ஜயா, வேறு