கூர்ம புராணம் - பகுதி 2 - பதினெண் புராணங்கள்
லட்சுமியும், இந்திரத்துய்மனிடம், தேவர்கள், முனிவர்கள் யாராலும் அறியப்படாதவள் நான். நானே விஷ்ணுவின் மாயை ஆவேன். விஷ்ணுவுக்கும், எனக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. ஞானம் என்பதைப் பற்றிச் சொல்வதற்கு, நீ விஷ்ணுவைத் தியானம் செய். அவர் ஒருவராலேயே அதனைக் கூறமுடியும் என்று கூறி மறைந்தார்.
இந்திரத்துய்மனும் விஷ்ணுவை தியானித்து வந்தான். பல ஆண்டுகளுக்குப் பின்னர், விஷ்ணு தோன்றினார். இந்திரத் துய்மனுக்கு உண்மையான ஞானம் பெறும் வழியினைச் சொல்லிக் கொடுத்தார். உடனே முனிவர்களும், தேவர்களும் அதைப்பற்றித் தங்களுக்கும் சொல்ல வேண்டும் என்று விரும்பிக் கேட்க, விஷ்ணுவும் அவர்களுக்காக மறுமுறை கூற ஆரம்பித்தார். ஞான மார்க்கத்தைப் பற்றிக் கூறும் பொழுது விஷ்ணு ஆமையாக உருவம் பெற்றிருந்ததால், அவர் கூறிய தெய்விக வார்த்தைகள் கூர்ம புராணம் என்று பெயர் பெற்றது. மூலப் பரம்பொருளின் இருப்பையும், இயல்பையும் நன்கு அறிந்து கொண்டபின், அதனுடைய வியாபகத்தை அறிய வேண்டும். இம்மூன்றையும் அறிந்த பிறகு நூல்களில் சொல்லப்பட்டபடி நேர்மையான வாழ்க்கை வாழ்ந்து தர்மத்தைக் கடைப்பிடித்து, அதிலிருந்து வழுவாமல் வாழ வேண்டும். ஒடுக்கப்பட்டவற்றை, வாழ்வில் இருந்து ஒதுக்கி, அண்ட முழுவதும் வியாபித்து இருக்கின்ற மூலப் பொருள் களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை நன்கு அறிய வேண்டும். உலகமும் அதில் காணப்படும் பொருள்களும் மாயை என்றே நன்கறிய வேண்டும். இவ்வாறு செய்தால், அனைத்தையும் ஆட்டிப் படைக்கின்ற பரம்பொருளின் இயல்பை ஒருவாறு உணரமுடியும்.
பிராமணனே! நான் சொல்லியபடி தியானம் என்பதை மூன்று வகையாகப் பிரித்து உணர வேண்டும். இதில் முதல் வகை என்னையே வழிபடு பொருளாகக் கொண்டு தியானிப்பதாகும். இரண்டாவது வகை அருவமாக உள்ள பரம் பொருளை தியானிப்பதாகும். மூன்றாவது தியானம், பிராமி எனப்படும் முக்குணங்களையும் கடந்ததை தியானிப்பதாகும். ஆன்மிகத் துறையில் வளரும் ஒருவன் மேலே சொல்லிய மூன்றில் ஒருவகை தியானத்தை மேற்கொள்ள வேண்டும். மனத் திடம் இல்லாதவர்களே முதல்வகை தியானத்தை மேற்கொள்ள வேண்டும். உலக பந்த பாசங்களினின்று நீங்கி, மனித முயற்சி அனைத்தையும் இந்த ஒரே துறையில் செலுத்தி, அந்த மூலப் பொருளையே குறிக்கோளாகக் கொண்டு தியானம் செய்ய வேண்டும்.
இந்திரத்துய்மன் வினா
"ஒ ஜனார்தனா! எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற சத்தியப் பொருள் யாது? முழு நிறைவுடன் கூடிய பொருள் யாது? பயன் என்று சொல்லுகிறாயே, அது எது? அனைத்திற்கும் மூலகாரணம் யாது? நீ யார்? உன் தொழில் யாது?”
பிரபுவின் பதில்
"மிக உயர்ந்த சத்தியப் பொருள் என்பது பரப்பிரம்மமே ஆகும். எவ்வித மாறுதலும், திருத்தி அமைக்கப்படும் இயல்பும் இல்லாததே அப்பொருளாகும். நிரதிசய இன்பம் என்பதும் அதுவேயாகும். அஞ்ஞான இருளைக் கடந்து நிற்கும் ஒளிப் பிழம்பு அதுவே ஆகும். அதனுடைய என்றும் அழியாப் புகழும், பிரபஞ்சத்தை ஆளும் இயல்பும், முழு நிறைவுடன் கூடிய அதன் சிறப்பாகும். மூலகாரணம் என்பது வெளிப்படாமலும், அழியாமலும், துய்மை கெடாமலும் உள்ள
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூர்ம புராணம் - பகுதி 2 - Kurma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வேண்டும், யாது, தியானம், பொருள், தியானிப்பதாகும், மூலப், ஞானம், உள்ள