கூர்ம புராணம் - பகுதி 10 - பதினெண் புராணங்கள்
துர்ஜயன் இமயமலை செல்லும் வழியில் ஒரு கந்தர்வன் அழகிய மாலை ஒன்றை அணிந்து கொண்டு எதிரே வருவதைப் பார்த்தான். அந்த மாலையைக் கண்டவுடன் துர்ஜயனுக்கு ஊர்வசி நினைவு வர, ஊர்வசிக்கு அந்த மாலையைப் பரிசளிக்க நினைத்தான். உடனே அந்தக் கந்தர்வ னிடம் போரிட்டு அவனைத் தோற்கடித்து அந்த மாலையை எடுத்துக் கொண்டு தான் ஊர்வசியோடு வாழ்ந்த காளிந்தி நதிக்கரைக்குச் சென்றான். அவளை அங்குக் காணாமையால் பல இடங்களில் தேடிக் கடைசியாக மானசரோவர் ஏரிக் கரைக்கு வந்தான். அங்கு ஊர்வசியைக் கண்டு, மாலையைப் பரிசாகத் தந்தான். நடந்தவற்றைக் கேள்விப்பட்ட ஊர்வசி, ‘அரசே! நீங்கள் தவம் செய்யப்போவதுதான் சரி. இல்லா விட்டால் உங்கள் மனைவியின் சாபம், கன்வ முனிவரின் சாபம் ஆகிய இரண்டு சாபங்களும் நம் இருவரையும் அழித்து விடும். ஆகவே உடனே காட்டுக்குப் போங்கள் என்றாள். அவளை விட்டுப் போக மனமில்லாத துர்ஜயன் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டான். தன் அழகுதான் அவனை மறக்க முடியாமல் செய்கிறது என்பதை அறிந்த ஊர்வசி, தன் அழகை மாற்றிக் கொண்டு குரூர வடிவத்துடன் காட்சி தந்தாள். அழகற்ற அவளைக் காணச் சகியாத துர்ஜயன் உடனே அவளை விட்டு நீங்கி இமயம் சென்று இருபத்து நான்கு ஆண்டுகள் கடுந்தவம் செய்தான். அதன்பிறகு கன்வ முனிவரைக் காண வந்தான். முனிவர் 'துர்ஜயா! நீ செய்த தவத்தால் ஒரளவு உன் பாவம் நீங்கியது உண்மைதான். அந்த மிகக் கொடிய பாவத்தின் ஒரு பகுதி இன்னமும் உள்ளது. அதைப் போக்க வேண்டுமானால் நீ வாரணாசிக்குச் சென்று சிவனை நோக்கித் தவம் செய். அப்பொழுது உன் பாவம் முழுவதுமாக நீங்கும்” என்று கூற, துர்ஜயன் வாரணாசி சென்று சிவனை நோக்கித் தவம் செய்து தன் பாவங்களினின்று விடுதலை அடைந்தான். எத்தகைய பாவத்தையும் போக்கவல்லது வாரணாசி என்ற தனிச் சிறப்பை உடைய நகரம் என்பதை இதன் மூலம் அறியலாம்.
கிருஷ்ணன் தவம்
வசுதேவருக்கும், தேவகிக்கும் எட்டாவது பிள்ளையாகப் பிறந்தவர் கிருஷ்ணன். அவதாரங்களுள் ஒன்றாகும்.
நீண்ட நாட்கள் தனக்குப் பிள்ளை இல்லை ஆதலால் கிருஷ்ணன் உபமன்யு முனிவரைச் சந்திக்கச் சென்றார். கங்கைக் கரையிலுள்ள உபமன்யு முனிவரின் ஆசிரமம் மிக்க அழகுடன் விளங்கிற்று. எங்கும் மலர்கள் பூத்துக் குலுங்கின. வேத கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மிகக் கொடிய வன விலங்குகளும் அந்த ஆசிரமத்தின் பக்கத்தில் வந்தவுடன் சாதுவாக மாறிவிட்டன. உடமன்யு முனிவரைக் காண பல இடங்களில் இருந்தும் முனிவர்கள் வந்து போயினர். அந்த ஆசிரமத்துக்குள் கிருஷ்ணன் நுழைந்து எல்லா முனிவர்களையும் வணங்கினார். கிருஷ்ணன் யார் என்பதை நன்கறிந்திருந்த அம்முனிவர்கள்- உபமன்யு முனிவர் உள்பட கிருஷ்ணனை வணங்கினர். உபமன்யு முனிவர் “கிருஷ்ணா! தாங்கள் விஷ்ணுவின் அவதாரம் என்பதை நாங்கள் அறிவோம். எல்லோரும் உங்களை நாடி உங்களிடம் வரத் தவம் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் செய்த புண்ணிய வசத்தால் விஷ்ணு ஆகிய நீங்களே இந்தச் சிறுகுடிலுக்கு வந்திருக்கிறீர்கள். தாங்கள் வந்தது பற்றி பெருமகிழ்ச்சி அடைகிறோம். என்றாலும் ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக் கொண்டுதான் தாங்கள் இங்கு வந்திருக்க வேண்டும். தயை கூர்ந்து அதனை எங்களுக்குச் சொல்ல வேண்டும்” என்று கூறினார். கிருஷ்ணன், முனிவரே! சிவனைக் கண்டு அவருடன் பேச வேண்டும். அதற்கு என்ன வழி என்று சொல்லுங்கள்’ என்று
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூர்ம புராணம் - பகுதி 10 - Kurma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தவம், அந்த, கிருஷ்ணன், துர்ஜயன், சென்று, உபமன்யு, பாவம், வேண்டும், முனிவர், என்பதை, தாங்கள், கொண்டு, கன்வ, ஊர்வசி, உடனே, அவளை