கூர்ம புராணம் - பகுதி 11 - பதினெண் புராணங்கள்
இமயமலையில் சிவனைக் குறித்துக் கடுமையான பாசுபத விரதம் பூண்டார். நீண்ட காலத்திற்குப் பிறகு சிவன் பார்வதி யுடன் தோன்றி, "கிருஷ்ணன் என்ற பெயருடன் வாழும் விஷ்ணுவே! இந்த உலகத்தில் உள்ள எல்லாப் பொருளும் உம்முடையவை. நினைத்த மாத்திரத்தில் எதையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாமே. அப்படியிருக்க என்னைக் குறித்துத் தவம் செய்யக் காரணம் என்ன?’ என்று கேட்டார். கிருஷ்ணன் 'தங்களைப் போன்றே எனக்கொரு பிள்ளை பிறக்க வேண்டும். அந்தப் பிள்ளை சிறந்த சிவபக்தனாக இருக்கவேண்டும் என்ற வரத்தைக் கேட்க, சிவன் 'அவ்வண்ணமே ஆகட்டும் என்று கூறி மறைந்தார்.
அதன்படியே கிருஷ்ணனுக்கு, மனைவி ஜாம்பதியின் மூலம் சம்பா என்ற மகன் பிறந்தான். அவன் சிறந்த சிவ பக்தனாக வாழ்ந்தான்.
(இதனை அடுத்து கூர்ம புராணம் யுகங்கள் பற்றிப் பேசுகிறது,)
லிங்கங்கள்
சிவபெருமானின் ரூப, அரூப வடிவமாக இருப்பது லிங்கமே ஆகும். வாரணாசியில் மிகச் சிறந்த லிங்கங்கள் உள்ளன. இவற்றுள் மிகப் பெரிய வடிவைக் கொண்டது ஓம்காரலிங்கம். மற்ற லிங்கங்களுள் முக்கியமானவையாகக் கருதப்படுபவை கிருத்திவாலேஸ்வரா, மத்ய தேஷ்வரா, விஷ்வேஸ்வரா, கபர்டிஷ்வரா. கூர்ம புராணம் இந்த லிங்கங்களின் மகிமை பற்றிக் கூறுகிறது.
ஈஸ்வரகீதை
லோமஹர்ஷனர் கூடி இருந்த முனிவர்களுக்குக் கூர்ம புராணத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே கிருஷ்ண துவைபாயனரான வேதவியாசர் அங்கே வந்து சேர்ந்தார். லோமஹர்ஷனர் உள்ளிட்ட அனைவரும் அவரை வணங்கி, உண்மையான ஞானத்தைப் பெறுவதற்கு வழியைக் கூறுமாறு அவரை வேண்டிக் கொண்டனர். வேதவியாசர் சொல்ல ஆரம்பித்தார்.
"பரமாத்மன் தான் முற்றிலும் தூய்மையானதும், என்றும் உள்ளதும் ஆகும். அந்தப் பரமாத்மாவிலிருந்துதான் இப் பிரபஞ்சம் உற்பத்தி ஆகிறது. மகாபிரளய காலத்தில் இப் பிரபஞ்சம் முற்றிலுமாக ஒடுங்கி, அப்பரமாத்மாவினிடமே சென்று சேர்ந்து விடுகிறது. பரமாத்மா ஐம்பூதங்களும் அல்ல. அதனைத் தொடவோ, முகரவோ, வேறு பொறிபுலன்களால் அறியவோ முடியாது. ஜீவாத்மாவில் பரமாத்மா என்றும் இருந்து வருகிறது. ஜீவாத்மாவில் கலந்திருக்கின்ற அகங்காரமே, ஜீவாத்மாவோடு ஒன்றியிருக்கின்ற பரமாத்மாவை அறியவிடாமல் செய்கின்றது. அகங்காரத்தின் காரணமாக ஏற்படும் இந்த மாயையிலிருந்து உண்மையான அறிவாளிகள் விடுபடு கின்றனர். ஞானி என்பவன் தன் ஆத்மாவிற்கும், காணப்படுகின்ற பிற பொருட்களுக்கும் இடையே எந்த வேற்றுமையையும் காண்பதில்லை. ஒரே பரமாத்மா சர, அசர எல்லாப் பொருள்களிலும் ஊடுருவி நிற்கின்றது. ஆறுகளெல்லாம் கடலில் சென்று கலப்பதுபோல, உலகத்தில் உள்ள உயிர்களெல்லாம் இறுதியில் பரமாத்மாவைச் சென்று அடைகின்றன.
யோகம் என்பது தியானத்தின் ஒரு பகுதியாகும். இந்தப் பயிற்சியின் மூலம் இந்த ஜீவாத்ம-பரமாத்ம ஒருமைப் பாட்டைத் தெளிவாக அறிய முடியும். யோகம் என்பது எட்டு வகைப்படும். முதலாவது பிராணாயாமம். பிராணாயாமம் என்றால் மூச்சைக் கட்டுப்படுத்துதல் என்பது
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூர்ம புராணம் - பகுதி 11 - Kurma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பரமாத்மா, என்பது, சென்று, கூர்ம, சிறந்த, கிருஷ்ணன்