கூர்ம புராணம் - பகுதி 12 - பதினெண் புராணங்கள்
இரண்டாவது படி பிரத்யாகாரம் எனப்படும். இது பொறிபுலன்களை அடக்குவதாகும். யோகத்தைப் பயிலும் போது உட்கார வேண்டிய முறை அறிந்து உட்கார வேண்டும். சரியான ஆசனம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நான்காவது படி இயமம் எனப்படும். அஹிம்சை, சத்தியம், இரக்கம் என்பவற்றைக் கடைப்பிடிப்பதாகும். நியமம் என்பது ஐந்தாவது படி. கடவுளை பக்தியோடு வழிபடுதல், வேதம் முதலிய வற்றைக் கற்றல், அகப்புறத் தூய்மையோடு இருத்தல், தியானம் ஆகியவையாம். தியானம் என்பது பரப்பிரம்மத்தை ஏதாவது ஒரு வழியுடன் மனத்தில் இருத்தி அதனையே நினைப்பதாகும். இது ஆறாவது படியாகும். தாரணா என்பது கற்பித்துக் கொண்ட தெய்வவடிவை மனத்தில் ஆழமாகப் பதித்துக் கொள்வதாகும். இது ஏழாவது படி சமாதி என்ற எட்டாவது நிலை, பரமாத்மனையும், ஜீவாத்மனையும் ஐக்கியப்படுத்திக் கொள்வதாகும்.
சடங்குகள்
குருவை எப்பொழுதும் மதித்து நடப்பதுடன், வணங்க வேண்டும். எந்த ஒருவரிடமிருந்தாவது ஞானத்தைப் பெறக் கூடிய இயல்பு இருந்தால் அந்த ஒருவரை குரு என்றே சொல்ல வேண்டும். பொதுவாகப் பேசுமிடத்து, அறிவு புகட்டுகின்ற ஆசிரியர்கள் அல்லாமல் தந்தை, மூத்த சகோதரன், அரசன், மாமன், மாமனார், தாத்தா ஆகியோரையும் குருவாகக் கொள்ளலாம். குருவோடு சமமான ஆசனத்தில் உட்காரக் கூடாது. குருவிடம் விவகாரம் செய்தலோ, மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதோ கூடாது. குருவை அவமதிப்பவன் பாவத்திற்குள்ளாகிறான். குருக்களுக்குள் சிறந்தவர்கள் தாய், தந்தை, ஆசிரியர், மூத்த சகோதரன் என்பவர்களாவர்.
மந்திரங்களுள் சிறந்தது காயத்ரி மந்திரம். இறந்த வீட்டிலும், இரகண காலத்திலும் வேதங்களைப் படிக்கக் கூடாது. படுக்கையில் படுத்துக் கொண்டோ, புலால் உணவை உண்ட பிறகோ வேதங்களைப் படிக்கலாகாது. புயலடிக்கும் நேரம், அமாவாசை ஆகிய நேரங்களில் படித்தல் கூடாது.
கபால மோட்சன தீர்த்தம்
'சிவன் கையில் ஒட்டிக் கொண்ட பிரம்ம கபாலம் எவ்வாறு எங்கே சிவனுடைய கையை விட்டு நீங்கிற்று' என்று முனிவர்கள் கேட்க, லோமஹர்ஷனர் சொல்ல ஆரம்பித்தார்.
முன்னொரு காலத்தில் தன் எதிரில் குடியிருந்த முனிவர்களை எல்லாம் பார்த்து பிரம்மன் தன்னை மறந்தான். பின்வருமாறு பேசத் தொடங்கினான்: "ஒ முனிவர்களே! என்னை யாரென்று நினைத்தீர்கள். சுவயம்புவாகத் தோன்றியவனும், முடிவில்லாதவனுமாகிய நானே பரப் பிரம்மம். தேவருலகில் உள்ளவர்களையும் நானே இயக்குகிறேன். அனைத்தையும் படைக்கின்ற என்னைவிட உயர்ந்தவர்கள் யாருமில்லை. எல்லா தேவதைகளும், தெய்வங்களும் என் இச்சைப்படியே பணிபுரிகின்றனர்!" என்று கூறி முடித்தான்.
பிரம்மன் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில், நாராயணனின் ஒரு கூறு விஷ்ணு என்ற பெயரில் பிரம்மம் முன்வந்து பேச ஆரம்பித்தது. வந்த விஷ்ணு சொரூபம், "ஓ பிரம்மனே! நீ என்ன பேசிக் கொண்டிருக்கிறாய். மூன்று கண்களை உடைய பிரபு உன்மேல் மிகவும் வெறுப்புற்று இருக்கிறார். நீ பெரிய அறியாமை என்ற இருளில் மூழ்கி இருக்கிறாய். அந்த இருளில் உன்னை மூழ்கடித்தது உன் அகம்பாவமே ஆகும். நான்தான் அண்டபிண்ட சராசரம் அனைத்தையும் காக்கின்றவன். என்னுடைய ஆணையின் மேல்தான் நீ இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துக் கொண்டிருக்கிறாய்.” இவர்கள் இருவரும் இவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருக்கும்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூர்ம புராணம் - பகுதி 12 - Kurma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, என்பது, கூடாது, வேண்டும், "