ஐஞ்சிறு காப்பியங்கள் - யசோதர காவியம்
மூன்றாஞ் சருக்கம்
யசோதரனும் சந்திரமதியும் மயிலும் நாயுமாய்ப் பிறந்தசெய்த கூறல்
155 | மற்றம் மன்னன் மதிமதி யென்றிவர் நற்ற வத்திறை நல்லறம் புல்லலாப் பற்றி னோடு முடிந்தனர் பல்பிறப் புற்ற தாகு முரைக்குறு கின்றதே. |
157 | அம்பின் வாய்விழு மண்ட மெடுத்தவன் வம்பு வாரண முட்டையின் வைத்துடன் கொம்ப னாயிது கொண்டு வளர்க்கென நம்பு காமர் புளிஞிகை நல்கினான். |
158 | சந்தி ரம்மதி யாகிய தாயவள் வந்து மாநக ரப்புறச் சேரிவாய முந்து செய்வினை யான்முளை வாளெயிற் றந்த மிக்க சுணங்கம் தாயினாள். |
159 | மயிலு நாயும் வளர்ந்தபின் மன்னனுக் கியலு பாயன மென்று கொடுத்தனர் மயரி யாகு மிசோமதி மன்னவன இயலு மாளிகை யெய்தின வென்பவே. |
160 | மன்ன னாகிய மாமயின் மாளிகை தன்னின் முன்னெழு வார்க்குமுன் தானெழாத் தன்னை யஞ்சினர் தங்களைத் தான் வெருண் டின்ன வாற்றின் வளர்ந்திடு கின்றதே . |
161 | அஞ்சி லோதியர் தாமடி தைவரப் பஞ்சி மெல்லணை பாவிய பள்ளிமேல் துஞ்சு மன்னவன் மாமயிற் றோகையோ டஞ்சி மெல்ல வசைந்தது பூமிமேல். |
162 | சுரைய பாலடி சிற்சுவை பொற்கலத் தரைய மேகலை யாரி மைர்ந்துணும அரையன் மாமயி லாய்ப்புறப் பள்ளிவாய இரைய வாவி யிருந்தயில் கின்றதே. |
163 | வந்து குப்பையின் மாசன முண்டபின் சிந்து மெச்சில்கள் சென்று கவர்ந்துதின் றந்து ளும் மக ழங்கணத் தூடுமாய்ச் சந்தி ரம்மதி நாய்தளர் கின்றதே |
164 | நல்வ தத்தொ டறத்திற நண்ணலார கொல்வ தற்குள முன்செய் கொடுமையான ஒல்வ தற்கரு மாதுய ருற்றனர் வெல்வ தற்கரி தால்வினை யின்பயன். |
165 | மற்றொர் நாண்மணி மண்டபத் தின்புடை யற்ற மாவிருந் தட்டபங் கன்றனை முற்று வார்முலை யாண்முயங் குந்திறம மற்ற மாமயில் வந்தது கண்டதே. |
166 | அப்பி றப்பி லமர்ந்த தன் காதலி ஒப்பில் செய்கை யுணர்ந்த துணர்ந்தபின தப்பி லன்னது சாரன்றன் கண்களைக் குப்பு றாமிசைக் குத்தி யழித்ததே. |
167 | முத்த வாணகை யாண்முனி வுற்றனள் கைத்த லத்தொரு கற்றிரள் வீசலும் மத்த கத்தை மடுத்து மறித்தது தத்தி மஞ்ஞை தரைப்பட வீழ்ந்ததே. |
168 | தாய்முன் னாகி யிறந்து பிறந்தவள் நாய்பின் னோடி நலிந்தது கவ்விய வாய்முன் மஞ்ஞை மடிந்துயிர் போயது தீமை செய்வினை செய்திற மின்னதே. |
169 | நாயின் வாயில் நடுங்கிய மாமயில் போய தின்னுயிர் பொன்றின மன்னவன் ஆயு மாறறி யாத விசோமதி நாயை யெற்றின னாய்பெய் பலகையால். |
யசோதரனாகிய மயில் (2வது) முள்ளம் பன்றியாய்ப் பிறத்தல்
170 | மன்னன் மாமயில் வந்துவிந் தக்கிரி துன்னுஞ் சூழலுட் சூழ்மயிர் முள்ளுடை இன்னல் செய்யுமோ ரேனம தாகிய தன்ன தாகு மருவினை யின்பயன்.. |
171 | சந்தி ரம்மதி நாயுமச் சாரலின் வந்து காரிருள் வண்ணத்த நாகமாய அந்தி லூர்தர வேர்த்துரு ளக்குடர் வெந்தெ ழும்பசி விட்டது பன்றியே. |
172 | தாய்கொல் பன்றி தளர்ந்தயர் போழ்தினிற் சீய மொன்றெனச் சீறுளி யம்மெதிர் பாய நொந்து பதைத்துடன் வீ¢ழ்ந்தரோ போய தின்னுயிர் பொன்றுபு பன்றியே. |
மன்னனாகிய முட்பன்றி (3வது) லோகிதமீனாய்ப் பிறத்தல்
173 | மன்னன் மாமயில் சூகரம் வார்புனல் இன்னல் செய்யுஞ் சிருப்பிரை யாற்றினுள் உன்னு மொப்பி லுலோகித விப்பெயர் மன்னு மீனின் வடிவின தாயிற்றே. |
சந்திரமதியாகிய நாகம் (3வது) முதலையாகப் பிறத்தல்
174 | சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய் முந்து சன்று முதலைய தாயது¢ வெந்து வேர்த்தின மீனை விழுங்குவான உந்தி யுந்தி யுளைந்திடு போழ்தினில். |
175 | அந்த ரத்தொரு கூனிநின் றாடுவாள் வந்து வாயின் மடுத்தது கொண்டது¢ கொந்து வேய்குழற் கூனியைக் கொல்கராத் தந்த கொல்கென மன்னவன் சாற்றினான் |
176 | வலையின் வாழ்நரின் வாரிற் பிடித்தபின சிலர்ச லாகை வெதுப்பிச் செறித்தனர்¢ கொலைவ லாளர் குறைத்தன ரீர்ந்தனர் அலைசெய் தார்பலர் யாரவை கூறுவார். |
சந்திரமதியாகிய முதலை (4வது) பெண் ஆடாய்ப் பிறத்தல்
177 | சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய் வந்து வார்வலைப் பட்ட கராமரித தந்தில் வாழ்புலை யாளர்தஞ் சேரிவாய் வந்தொ ராட்டின் மடப்பிணை யாயதே. |
178 | மற்றை மீனுமோர் வார்வலைப் பட்டதை அற்ற மில்லரு ளந்தணர் கண்டனர் கொற்ற மன்னவ நின்குலத் தார்களுக் குற்ற செய்கைக் குரித்தென வோதினார். |
179 | அறுத்த மீனி னவயவ மொன்றினைக் கறித்தி சோமதி யிப்புவி காக்கவோர இறப்ப ருந்துறக் கத்தி லிசோதரன சிறக்க வென்றனர் தீவினை யாளரே. |
180 | நின்ற கண்டத்து நீளுயிர் போமது சென்ற தன்பிறப் போர்ந்து தௌ¤ந்தது தின்று தின்று துறக்கத் திருத்துதல் நன்று நன்றென நைந்திறந் திட்டதே |
மன்னனாகிய லோகித மீன் (4வது) தகராய்ப் பிறத்தல்
181 | மன்னன் மாமயில் சூகர மாயமீன் முன்னை யாட்டின் வயிற்றின் முடிந்ததோர மன்ன மாணுரு வெய்தி வளர்ந்தபின தன்னை யீன்றவத் தாய்மிசைத் தாழ்ந்ததே. |
தகர் (5ஆவது) மீண்டும் தன் தாயின் கருவில் தகராதல்.
182 | தாயி னன்னலந் தானுகர் போழ்தினில்¢ ஆய கோபத் தடர்த்தொரு வன்றகர பாய வோடிப் பதைத்துயி¢ர் போயபின தாய்வ யிற்றினில் தாதுவிற் சார்ந்ததே. |
183 | தாய்வ யிற்கரு வுட்டக ராயது போய்வ ளர்ந்துழிப் பூமுடி மன்னவன மேய வேட்டை விழைந்தனன் மீள்பவன தாயை வாளியிற் றானுயிர் போக்கினான். |
184 | வாளி வாய்விழும் வன்றகர்க் குட்டியை நீள நின்ற புலைக்குலத் தோன்றனைத் தாள்வ ருத்தந் தவிர்த்து வளர்க்கென ஆளி மொய்ம்ப னருளின னென்பவே. |
யசோமதி பலியிடும் செய்தி கூறல்
185 | மற்றொர் நாண்மற மாதிற்கு மன்னவன் பெற்றி யாற்பர விப்பெரு வேட்டைபோய் உற்ற பல்லுயிர் கொன்றுவந் தெற்றினான் கொற்ற மிக்கெரு மைப்பலி யொன்றரோ. |
186 | இன்றெ றிந்த வெருமை யிதுதனைத் தின்று தின்று சிராத்தஞ் செயப்பெறின் நன்றி தென்றன ரந்தணர் நல்கினார நின்று பின்சில நீதிகள் ஓதினார். |
187 | ஆத பத்தி லுலர்ந்ததை யாதலாற் காது காகங் கவர்ந்தன வாமெனின் தீது தாமுஞ் சிராத்தஞ் செயற்கென ஓதி னாரினி யொன்றுள தென்றனர். |
188 | தீதி தென்ற பிசிதமுந் தேர்ந்துழி சாத நல்ல தகர்முகத் துப்படின பூத மென்றனர் புண்ணிய நூல்களின் நாத னாரத் துராதிக ணன்றரோ. |
189 | என்ற லும்மிணர் பெய்முடி மன்னவன் நன்று நாமுன் வளர்க்க விடுத்தது சென்று தம்மெனச் சென்றன ரொற்றர்பின நன்றி தென்று நயந்தன ரந்தணர். |
190 | சென்று நல்லமிர் துண்டது தின்றனர் அன்று மன்ன னிசோதர னன்னையோ டொன்றி யும்ப ருலகினுள் வாழ்கென நன்று சொல்லினர் நான்மறை யாளரே. |
இதுமுதல் ஏழுகவிகளில் யசோதரனாகிய ஆடு எண்ணியது கூறப்படும்
191 | அத்த லத்தக ராங்கது கேட்டபின் ஒத்த தன்பிறப் புள்ளி யுளைந்துடன இத்த லத்திறை யான விசோமத மத்த யானையின் மன்னவ னென்மகன். |
192 | இதுவென் மாநக ருஞ்சயி னிப்பதி இதுவென் மாளிகை யாமென் னுழைக்கலம் இதுவெ லாமிவ ரென்னுழை யாளராம் இதுவென் யானிவ ணின்னண மாயதே. |
193 | யான்ப டைத்த பொருட்குவை யாமிவை யான்வ ளர்த்த மதக்களி றாமிவை யான ளித்த குலப்பரி யாமிவை யான்வி ளைத்த வினைப்பய னின்னதே. |
194 | இவர்க ளென்கடைக் காவல ராயவர் இவர்க ளென்படை நாயக ராயவர் இவர்க் ளென்னிசை பாடுந ராடுநர் இவர்க ளும்மிவ ரென்பரி வாரமே. |
195 | என்னை நஞ்சுபெய் தின்னண மாயிழைத் தன்ன மென்னடை யாளமிர் தம்மதி மன்னு தன்மறை யானொருட வைகுமோ என்னை செய்தன ளோவிவ ணில்லையால். |
196 | அசைய தாகி யரும்பட ரொன்றிலா இசையி லாதன யானுற வித்தலைத் தசைதி னாளர்கள் தங்களி னென்னையிவ் வசையின மன்னவன் வானுல குய்க்குமோ. |
197 | பேதை மாதர்பெய் நஞ்சினி லெஞ்சியிம் மேதி னிப்பதி யாதல் விடுத்தபின் யாது செய்தன னோவினை யேனிடை யாது செய்குவ னோவுண ரேனினி. |
சந்திரமதியாகிய பெண்யாடு (5வது) எருமையாய்ப் பிறத்தல்
198 | இனைய வாகிய சிந்தைக ளெண்ணிலா வினையி னாகிய வெந்துயர் தந்திடத் தனையன் மாளிகை தன்னுள நோகமுன் சினைகொண் டாடுயிர் சென்று பிறந்ததே. |
199 | சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய் வந்தி டங்கரு மாகிய வாடது நந்து பல்பொருள் நாடு கலிங்கத்து வந்து மாயிட மாகி வளர்ந்ததே. |
200 | வணிகர் தம்முடன் மாமயி டம்மது பணிவில் பண்டம் பரிந்துழல் கின்றநாள் அணிகொ ளுஞ்சயி னிப்புறத் தாற்றயல் வணிகர் வந்த மகிழ்ந்துவிட் டார்களே. |
201 | தூர பாரஞ் சுமந்த துயரது தீர வோடுஞ் சிருப்பிரை யாற்றினுள் ஆர மூழ்குவ தம்மயி டங்கரை சேரு மாவினைச் சென்றெறிந் திட்டதே. |
202 | வரைசெய் தோண்மன்ன வணிகர் மயிடத்தால் அரைச வன்ன மெனும்பெய ராகும்நம் அரைச வாகன மாயது போயதென் றுரைசெய் தாரர சற்குழை யாளரே. |
ஏவலர் ‘வணிகர்எருமையால் நம் குதிரை இறந்த‘ தென்று அரசனுக்கு அறிவித்தன ரென்க.
203 | அணிகொன் மாமுடி மன்ன னழன்றனன் வணிகர் தம்பொருள் வாரி மயிடமும் பிணிசெய் தெம்முறை வம்மெனப் பேசினான் கணித மில்பொருள் சென்று கவர்ந்தனர். |
204 | அரச னாணை யறிந்தரு ளில்லவர் சரண நான்கினை யுந்தளை செய்தனர் கரண மானவை யாவுங் களைந்தனர் அரண மாமற னில்லது தன்னையே. |
205 | கார நீரினைக் காய்ச்சி யுறுப்பரிந் தார வூட்டி யதன்வயி றீர்ந்தவர் நெய்பெய் சலாகை கடைந்தபின் கூர்முண் மத்திகை யிற்கொலை செய்தனர். |
206 | ஆயி டைக்கொடி யாளமிர் தம்மதி மேய மேதித் தசைமிக வெந்ததை வாயின் வைத்து வயிற்றை வளர்த்தனள் மாயை செய்தன ளென்றனர் மற்றையார். |
207 | இன்னு மாசை யெனக்குள திவ்வழித் துன்னி வாழ்தக ரொன்றுள தின்றது தன்னி னாய குறங்குக டித்தது தின்னி னாசை சிதைந்திட மென்றனள். |
இதுமுதல் ஐந்துகவிகள் ஆட்டின் அருகே சேடியர் பேசிக்கொள்ளுதல்
208 | அனங்க னான பெருந்தகை யண்ணலைச் சினங்கொ ளாவுயிர் செற்றனள் நஞ்சினில் கனங்கொள் காமங் கலக்கக் கலந்தனள் மனங்கொ ளாவொரு மானுட நாயினை. |
209 | குட்ட மாகிய மேனிக் குலமிலா அட்ட பங்கனோ டாடி யமர்ந்தபின் நட்ட மாகிய நல்லெழின் மேனியள் குட்ட நோயிற் குளித்திடு கின்றனள். |
210 | அழுகி நைந்துட னஃகு மவயவத் தொழுகு புண்ணி னுருவின ளாயினள் முழுகு சீயின் முடைப்பொலி மேனியள் தொழுவல் பல்பிணி நோய்களுந் துன்னினாள். |
211 | உம்மை வல்வினை யாலுணர் வொன்றிலாள் இம்மைச் செய்த வினைப்பய னேயிவை எம்மை யும்மினி நின்றிடு மிவ்வினை பொய்ம்மை யன்றிவள் பொன்றினும் பொன்றல. |
212 | நோயி னாசைகொல் நுண்ணுணர் வின்மைகொல் தீய வல்வினை தேடுத லேகொலோ மேய மேதிப் பிணத்தை மிசைந்தனள் மாய மற்றிது தன்னையும் வவ்வுமே. |
பவஸ்ம்ருதி யடைந்த ஆடு ஆகலின், சேடியர் கூறியதனை அறிந்து வருந்துதல்
213 | என்று தன்புறத் திப்படிக் கூறினர் சென்று சேடியர் பற்றிய வத்தகர் ஒன்று முற்ற வுணர்ந்தவள் தன்னையும் சென்று கண்டது சிந்தையின் நொந்தரோ. |
214 | தேவி யென்னை முனிந்தனை சென்றொரு பாவி தன்னை மகிழ்ந்த பயன்கொலோ பாவி நின்னுரு வின்னண மாயது பாவி யென்னையும் பற்றினை யின்னணம். |
215 | நஞ்சி லன்னையோ டென்னை நலிந்தனை எஞ்ச லில்சின மின்ன மிறந்திலை வஞ்ச னைமட வாய்மயி டம்மது துஞ்சு நின்வயிற் றென்னையுஞ் சூழ்தியோ. |
216 | என்று கண்ட மொறுமொறுத் தென்செயும் நின்று நெஞ்சம துள்சுட நின்றது அன்று தேவி யலைப்ப வழிந்துயிர் சென்ற தம்மயி டத்தொடு செல்கதி. |
எருமையும் ஆடும் (6) கோழிகளாய்ப் பிறத்தல்
217 | மற்றம் மாநகரத்து மருங்கினில் சிற்றில் பல்சனஞ் சேர்புறச் சேரியின் உற்று வாரணப் புள்ளுரு வாயின வெற்றி வேலவன் கண்டு விரும்பினான். |
218 | கண்டு மன்னவன் கண்களி கொண்டனன் சண்ட கன்மியைத் தந்த வளர்க்கெனக் கொண்டு போயவன் கூட்டுள் வளர்த்தனன் மண்டு போர்வினை வல்லவு மாயவே. |
219 | தரள மாகிய நயனத்தொ டஞ்சிறை சாபம்போற் சவியன்ன மருள மாசனம் வளர்விழி சுடர்சிகை மணிமுடி தனையொத்த வொளிரு பொன்னுகிர்ச் சரணங்கள் வயிரமு ளொப்பிலபோ தளர்வில் வீரியந்தகைபெற வளரந்தன தமக்கிணையவைதாமே. |
நான்காஞ் சருக்கம்
220 | செந்தளிர் புதைந்த சோலைத் திருமணி வண்டுந் தேனுங் கொந்துகள் குடைந்து கூவுங் குயிலொடு குழுமி யார்ப்பச செந்துண ரளைந்து தென்றற் றிசைதிசை சென்று வீச வந்துள மகிழ்ந்த தெங்கும் வளர்மதுப் பருவ மாதோ. |
221 | இணர்ததை பொழிலி னுள்ளா லிசோமதி யென்னுமன்னன் வணர்ததை குழலி புட்பா வலியெனுந் துணைவி யோடு வணர்ததை வல்லி புல்லி வளரிளம் பிண்டி வண்டா£¢ இணர்ததை தவிசி னேறி யினிதினி னமர்ந்தி ருந்தான். |
222 | பாடக மிலங்கு செங்கேழ்ச் சீறடிப் பாவை பைம்பொற் சூடக மணிமென் றோளிற் றொழுதனர் துளங்கத் தோன்றி நாடக மகளி ராடு நாடக நயந்து நல்லார் பாடலி னமிர்த வூறல் பருகினன் மகிழ்ந்தி ருந்தான். |
223 | வளையவர் சூழ லுள்ளான் மனமகிழ்ந் திருப்ப மன்னன் தளையவிழ் தொடையன் மார்பன் சண்டமுற் கருமன்போகி வளமலர் வனத்துள் தீய மனிதரோ டனைய சாதி களைபவன் கடவுட் கண்ணிற் கண்டுகை தொழுது நின்றான் |
224 | அருவினை முனைகொ லாற்ற லகம்பன னென்னு நாமத் தொருமுனி தனிய னாகி யொருசிறை யிருந்த முன்னர்த் தருமுதல் யோகு கொண்டு தன்னள விறந்த பின்னர் மருவிய நினைப்பு மாற்றி வந்தது கண்டி ருந்தான். |
225 | வடிலநுனைப் பகழி யானு மலரடி வணங்கி வாழ்த்தி அடிகணீ ரடங்கி மெய்யி ருள்புரி மனத்தி ராகி நெடிதுட னிருந்து நெஞ்சி னினைவதோர் நினைவு தன்னான் முடிபொருடானு மென்கொல் மொழிந்தருள் செய்கவென்றான். |
226 | ஆரருள் புரிந்த நெஞ்சி னம்முனி யவனை நோக்கிச் சீரருள் பெருகும் பான்மைத் திறத்தனே போலுமென்றே பேரறி வாகித் தம்மிற் பிறழ்விலா வுயிரை யன்றே கூரறி வுடைய நீரார் குறிப்பது மனத்தி னாலே. |
227 | அனந்தமா மறிவு காட்சி யருவலி போக மாதி நினைந்தவெண் குணங்க ளோடு நிருமல நித்த மாகிச் சினஞ்செறு வாதி யின்றித் திரிவித வுலகத் துச்சி அனந்தகா லத்து நிற்ற லப்பொருட்டன்மை யென்றான். |
228 | கருமனு மிறைவ கேளாய் களவுசெய் தோர்க டம்மை இருபிள வாகச் செய்வ னெம்மர சருளி னாலே ஒருவழி யாலுஞ் சீவ னுண்டெனக் கண்ட தில்லை பெரியதோர் சோரன் றன்னைப் பின்னமாய்ச் சேதித் திட்டும். |
229 | மற்றொரு கள்வன் றன்னை வதைசெய்யு முன்னும் பின்னும் இற்றென நிறைசெய் திட்டு மிறைவனே பேதங் காணேன் உற்றதோர் குழியின் மூடி யொருவனைச் சிலநாள் வைத்தும் மற்றவ னுயிர்போ யிட்ட வழியொன்றுங் கண்டி லேனே. |
முனிவர் தளவரன்ஐயத்தைப் போக்குதல்.
230 | பையவே காட்டந் தன்னைப் பலபின்னஞ் செய்திட் டன்று வெய்யெரி கண்ட துண்டோ விறகொடு விற்கை யூன்ற ஐயென வங்கி தோன்றி யதனையு மெரிக்க லுற்ற திவ்வகைக் காண லாகு மென்றுநீ யுணரத்ல் வேண்டும். |
இதுவும் அது
231 | சிக்கென வாயு வேற்றித் தித்திவாய் செம்மித் தூக்கிப் புக்கவவ் வாயு நீங்கிப் போயபின் நிறைசெய் தாலும் ஒக்குமே யொருவன் சங்கோ டொருநில மாளிகைக் கீழ்த் திக்கெனத் தொனிசெய் திட்ட தெவ்வழி வந்த தாகும். |
232 | இவ்வகை யாகுஞ் சீவ னியல்புதா னியல்பு வேறாம் வெய்யதீ வினைக ளாலே வெருவுறு துயரின் மூழ்கி மையலுற் றழுந்தி நான்கு கதிகளுட் கெழுமிச் செல்வர் ஐயமில் சாட்சி ஞானத் தொழுக்கத்தோ ரறிவ தாகும். |
233 | ஆகமத் தடிக ளெங்கட் கதுபெரி தரிது கண்டீர் ஏகசித் தத்த ராய விறைவர்கட் கௌ¤து போலும் போகசித் தத்தோ டொன்றிப் பொறிவழிப் படரு நீரார்க் காகுமற் றுறுதிக் கேது அருளுக தெருள வென்றான். |
234 | அற்றமில் லறிவு காட்சி யருந்தகை யொழுக்க மூன்றும் பெற்றனர் புரிந்து பேணிப் பெருங்குணத் தொழுகு வாருக் குற்றிடு மும்ப ரின்ப முலகிதற் கிறைமை தானும் முற்றமுன் னுரைத்த பேறும் வந்துறும் முறைமையென்றான். |
235 | உறுபொரு ணிலைமை தன்னை யுற்றுணர் வறிவ தாகும் அறிபொரு ளதனிற் றூய்மை யகத்தெழு தௌ¤வு காட்சி நறுமலர்ப் பிண்டி நாதன் நல்லறப் பெருமை தன்மேல் இறுகிய மகிழ்ச்சி கண்டா யிதனது பிரிவு மென்றான். |
236 | பெருகிய கொலையும் பொய்யும் களவோடு பிறன்ம னைக்கண் தெரிவிலாச் செலவும் சிந்தை பொருள்வயிற் றிருகு பற்றும் மருவிய மனத்து மீட்சி வதமிவை யைந்தோ டொன்றி ஒருவின புலைசு தேன்கள் ஒழுகுத லொழுக்க மென்றான். |
237 | கொலையின் தின்மை கூறிற் குவலயத் திறைமை செய்யும் மலைதலில் வாய்மை யார்க்கு வாய்மொழி மதிப்பை யாக்கும் விலையில்பே ரருளின் மாட்சி விளைப்பது களவின் மீட்சி உலைதலில் பெருமை திட்ப முறுவலி யொழிந்த தீயும். |
238 | தெருளுடை மனத்திற் சென்ற தௌ¤ந்துணர் வாய செல்வம் பொருள்வயி னிறுக்க மின்மை புணர்த்திடும் புலைசு தேன்கள். ஒருவிய பயனு மஃதே யொளியினோ டழகு வென்றி பொருள்மிகு குலனோ டின்பம் யுணர்தலு மாகு மாதோ. |
239 | சிலைபயில் வயிரத் தோளாய் செப்பிய பொருளி தெல்லாம் உலைதலில் மகிழ்வோ டுள்ளத் துணர்ந்தனை கொள்கவென்னக் கொலையி¢னி லொருவலின்றிக் கொண்டனெனருளிற்றெல்லாம் அலைசெய்வ தொழியின் வாழ்க்கை யழியுமற் றடிகளென்றான். |
முனிவரர் மீண்டும் கூறல்
240 | ஆருயிர் வருத்தங் கண்டா லருள்பெரி தொழுகிக கண்ணால் ஒருயிர் போல நெஞ்சத் துருகிநைந துய்ய நிற்றல் வாரியின் வதங்கட் கெல்லா மரசமா வதமி5 தற்கே சார்துணை யாகக் கொள்க தகவுமத் தயவு மென்றான். |
241 | இறந்தா ளென்றுமுள்ளத் திரங்குத லின்றி வெய்தாய்க் கறந்துயி ருண்டு கன்றிக் கருவினை பெருகச் செய்தாய் பிறந்துநீ, பிறவி தோறும் பெருநவை யுறுவ தெல்லாஞ் சிறந்தநல் லறத்தி னன்றித் தீருமா றுளது முண்டோ. |
242 | நிலையிலா வுடம்பின் வாழ்க்கை நெடிதுட னிறுவ வென்றிக் கொலையினான் முயன்று வாழுங் கொற்றவ ரேனு முற்றச் சிலபக லன்றி நின்றார் சிலரிவ ணில்லை கண்டாய் அலைதரு பிறவி முந்நீ ரழுந்துவ ரனந்தங் காலம். |
243 | இன்னுமீ தைய கேட்க இசோமதி தந்தை யாய மன்னவ னன்னை யோடு மாவினற் கோழி தன்னைக் கொன்னவில் வாளிற் கொன்ற கொடுமையிற் கடிய துன் பின்னவர் பிறவி தோறும் பெற்றன பேச லாமோ. |
244 | வீங்கிய வினைக டம்மால் வெருவரத் தக்க துன்பந் தாங்கினர் பிறந்தி றந்து தளர்ந்தனர் விலங்கிற் செல்வார் ஆங்கவர் தாங்கள் கண்டாய் அருவினை துரப்ப வந்தார் ஈங்குநின் அயலக் கூட்டி லிருந்த கோழிகளு மென்றான். |
245 | உயிரவ ணில்லை யேனு முயிர்க்கொலை நினைப்பி னாலிம் மயரிகள் பிறவி தோறும் வருந்திய வருத்தங் கண்டால் உயிரினி லருளொன் றின்றி யுவந்தனர் கொன்று சென்றார் செயிர்தரு நரகி னல்லாற் செல்லிட மில்லை யென்றான். |
246 | மற்றவ னினைய கூற மனநனி கலங்கி வாடிச் செற்றமுஞ் சினமு நீக்கித் திருவறத் தௌ¤வு காதல் பற்றினன் வதங்கள் முன்னம் பகர்ந்தன வனைத்துங் கொண்டு பெற்றன னடிக ணுமமாற் பெரும்பய னென்று போந்தான். |
247 | கேட்டலு மடிகள் வாயிற் கெழுமிய மொழிக டம்மைக் கூட்டினு ளிருந்த மற்றக் கோழிகள் பிறப்பு ணர்ந்திட் டோட்டிய சினத்த வாகி யுறுவத முய்ந்து கொண்ட பாட்டருந் தன்மைக் தன்றே பான்மையின் பரிசு தானும். |
248 | பிறவிக ளனைத்து நெஞ்சிற் பெயர்ந்தன நினைத்து முன்னர் மறவியின் மயங்கி மாற்றின் மறுகினம் மறுகு சென்றே அறவிய லடிக டம்மா லறவமிர் தாரப் பெற்றாம் பிறவியின் மறுகு வெந்நோய் பிழைத்தன மென்ற வன்றே. |
249 | அறிவரன் சரண மூழ்கி யறத்தெழு விருப்ப முள்ளாக் குறைவில வமுதங் கொண்டு குளிர்ந்தக மகிழ்ந்து கூவச் செறிபொழி லதனுட் சென்று செவியினு ளிசைப்ப மன்னன் முறுவல்கொண் முகத்து நல்லார்முகத்தொருசிலைவளைத்தான். |
250 | சொல்லறி கணையை வாங்கித் தொடுத்தவன் விடுத்தலோடும¢ நல்லிறைப் பறவை தம்மை நடுக்கிய தடுத்து வீழச் சில்லறி வினக ளேனுந் திருவறப் பெருமை யாலே¢ வல்லிதின் மறைந்து போகி மானுடம் பாய வன்றே. |
251 | விரைசெறி பொழிலி னுள்ளால வேனிலின் விளைந்த வெல் அரைசனு மமர்ந்து போகி யகநகர்க் கோயி லெய்தி (லாம் முரைசொலி கழுமப் புக்கு மொய்ம்மலர்க் குழலி னாரோ டுரைசெய லரிய வண்ண முவகையின் மூழ்கி னானே. |
252 | இன்னண மரசச் செல்வத் திசோமதி செல்லு நாளுள் பொன்னிய லணிகொள் புட்பா வலியெனும் பொங்கு கொங் இன்னிய லிரட்டையாகு மிளையரை யீன்று சின்னாள் பின்னுமோர் சிறுவன் றன்னைப் பெற்றனள் பேதை தானே. |
253 | அன்னவர் தம்முள் முன்னோ னபயமுன் னுருசி தங்கை அன்னமென் னடையி னாளு மபயமுன் மதியென் பாளாம் பின்னவர் வளரு நாளுட் பிறந்தவ னிறங்கொள் பைந்தார் இன்னிளங் குமரனாம மிசோதர னென்ப தாகும். |
254 | பரிமிசைப் படைப யின்றும் பார்மிசைத் தேர்க டாயும் வரிசையிற்கரிமேற்கொண்டும் வாட்டொழில்பயின்று மன்னர்க் குரியவத் தொழில்க ளோடு கலைகளின் செலவை யோர்ந்தும் அரசிளங் குமரன் செல்நா ளடுத்தது கூற லுற்றேன். |
255 | நூற்படு வலைப்பொறி முதற்கருவி நூற்றோ டேற்றிடை யெயிற்றுஞம லிக்குல மிரைப்ப நாற்படை நடுக்கடல் நடுச்செய் நமனேபோல் வேற்படை பிடித்தரசன் வேட்டையின் விரைந்தான். |
256 | இதத்தினை யுயிர்க்கினி தளித்திடு¢ மியற்கைச் சுதத்தமுனி தொத்திரு வினைத்துக ளுடைக்கும் பதத்தயன் மதக்களி றெனப்படிம நிற்பக் கதத்துட னிழித்தடு கடத்திடை மடுத்தான் |
257 | கூற்றமென வடவிபுடை தடவியுயிர் கோறற் கேற்றபடி பெற்றதில னிற்றைவினை முற்றும் பாற்றியவ னின்னுயிர் பறிப்பனென வந்தான் மாற்றரிய சீற்றமொடு மாதவனின் மேலே. |
258 | கொந்தெரி யுமிழ்ந்தெதிர் குரைத்ததிர்வ கோணாய் ஐந்தினொடு பொருததொகை யையம்பதி னிரட்டி செந்தசைகள் சென்றுகவர் கென்றுடன் விடுத்தான் நந்தியருண் மழைபொழியும் நாதனவன் மேலே. |
259 | அறப்பெருமை செய்தரு டவப்பெருமை தன்னால் உறப்புணர்த லஞ்சியொரு விற்கணவை நிற்பக் கறுப்புடை மனத்தெழு கதத்தரச னையோ மறப்படை விடக்கருதி வாளுருவு கின்றான். |
இதுமுதல் நான்கு கவிகளின் வணிகள் முனிவன் சிறப்புரைத்தல்
260 | காளைதகு கல்யாண மித்திர னெனும்பேர் ஆளியடு திறல்வணிக னரசனுயி ரனைய கேளொருவன் வந்திடை புகுந்தரச கெட்டேன் வாளுருவு கின்றதுவென் மாதவன்மு னென்றான். |
261 | வெறுத்துடன் விடுத்தரசி னைத்துக ளெனப்பேர் அறப்பெரு மலைப்பொறை யெடுத்தவ னடிக்கண் சிறப்பினை யியற்றிலை சினத்தெரி மனத்தான் மறப்படை யெடுப்பதுவென் மாலைமற வேலோய். |
262 | ஆகவெனி னாகுமிவ ரழிகவெனி னழிப மேகமிவண் வருகவெனின் வருமதுவும் விதியின் ஏகமன ராமுனிவர் பெருமையிது வாகும் மாகமழை வண்கைமத யானைமணி முடியோய். |
263 | அடைந்தவர்கள் காதலினொ டமரரச ராவர் கடந்தவர்கள் தமதிகழ்வில் கடைநரகில் வீழ்வர் அடைந்தநிழல் போலருளு முனிவுமில ரடிகள் கடந்ததிவ ணுலகியல்பு கடவுளவர் செயலே. |
264 | இந்திரர்கள் வந்தடிபணிந்தருளு கெனினும் நிந்தையுடன் வெந்துயர்க ணின்னனர்கள் செயினும் தந்தம்வினை யென்றுநமர் பிறரெனவு நினையார் அந்தர மிகந்தருள் தவத்தரசர் தாரோய். |
265 | இவ்வுலகி னெவ்வுயிரு மெம்முயிரி னேரென் றவ்விய மகன்றருள்சு ரந்துயிர் வளர்க்குஞ் செவ்விமையி னின்றவர்தி ருந்தடி பணிந்துன்¢ வெவ்வினை கடந்துயிர் விளங்கு விறல்வேலோய். |
266 | என்றினிது கூறும்வணி கன்சொலிக ழாதே கன்றுசின முங்கர தலப்படையு மாற்றி இன்றிவனை யென்னைதொழு மாறளியன் யாவன் கன்றுதுக டுன்றுகரு மேனியின னென்றான். |
267 | இங்குலகு தொழுமுனியை யாவனெனி னிதுகேள் கங்கைகுல திலகனிவன் கலிங்கபதி யதனைப் பொங்குபுய வலியிற்பொது வின்றிமுழு தாண்ட சி¢ங்கமிவ னென்றுதௌ¤ தேர்ந்துணரின் வேந்தே. |
இதுமுதல் ஆறு கவிகளால், வணிகன் அரசனுக்கு முனிவர்பெருமையைத் தௌ¤விக்கின்றான்
268 | மேகமென மின்னினொடு வில்லுமென வல்லே போகமொடு பொருளிளமை பொன்றுநனி யென்றே ஆகதுற வருள்பெருகு மறனொடத னியலே போகமிகு பொன்னுலகு புகுவனென நினைவான். |
269 | நாடுநக ரங்களும் நலங்கொள்மட வாரும் ஆடுகொடி யானையதிர் தேர்புரவி காலாள் சூடுமுடி மாலைகுழை தோள்வளையொ டாரம் ஆடைமுத லாயினவொ டகல்கவென விட்டான். |
270 | வானவரும் மண்ணின்மிசை யரசர்களும் மலைமேல் தானவரும் வந்துதொழு தவவுருவு கொண்டான் ஊனமன மின்றியுயிர் கட்குறுதி யுள்ளிக் கானமலை நாடுகள்க லந்துதிரி கின்றான். |
271 | யானுமல தெனதுமல திதமுமல தென்று மானமுடை மாதவனின் மேனிமகி ழானாய் ஏனைவினை மாசுதன துருவினிறு வாதே ஞானவொளி நகைசெய்குணம் நாளுமணி கின்றான். |
272 | ஈடின்முனி யோகினது பெருமையினி லிறைவ காடுபடு கொலையினொடு கடியவினை நின்னைக் கூடுவதா ழிந்ததுகொ லின்றுகொலை வேலோய் நாடுவதென் ஞமலியிவை நணுகலகள் காணாய். |
273 | என்றவ னுளங்கொள வியம்பின னியம்பச் சென்றுதிரு வடிமலர்கள் சென்னிமிசை யணியா இன்றெனது பிழைதணிய வென்றலை யரிந்து நின்றமுனி சரணிலிட லென்றுநினை கின்றான். |
274 | இன்னதுநி னைந்ததிவ னென்றுகை யெடுத்தே மன்னநின் மனத்தது விடுத்திடு மனத்தில் தன்னுயிரின் மன்னுயிர் வளர்க்கைதக் வானால் நின்னுயிரை நீகளையி னின்னருள தென்னாம். |
275 | முன்னமுரை செய்தபொருள் முடிந்திலது முடியப் பின்னுமிகை பிறவுமுரை பேசுதிற நினைவுந் துன்னுயிரின் முன்னிது துணிந்தபிழை தூரப் பின்னைநினை கின்றவிது பிழைபெரிது மென்றான். |
276 | மன்னவன் மனத்ததை விரித்தருள் வளர்க்குஞ் சொன்னவில் சுதத்தமுனி தொன்மல ரடிக்கட் சென்னிமுடி துன்னுமலர் சென்றுற வணங்கிப் பன்னியரு ளிறைவவெமர் பவமுழுது மென்றான். |
277 | ஆங்குமுனி யவதியி னறிந்தபொரு ளதனை வாங்கியவ னுணரும்வகை வைத்தருள் செய்கின்றான் ஈங்குமு னியற்றிய தவத்தினி லசோகன் ஓங்குபுக ழமருலக மொன்றினு ளுவந்தான். |
சுருங்கக் கூறிய அசோகன் வரலாற்றை விளங்க உரைத்தல்
278 | அருமணியி னொளிதிகழு மமரனவ னாகிப் பிரமனுல கதனுண்மிகை பெறுகடல்கள் பத்துந்¢ திருமணிய துணைமுலைய தெய்வமட வாரோடு அருமையில் னகமகிழ்வின் மருவுமன் மாதோ. |
279 | வஞ்சனையி லன்னையுடன் மன்னவனை நஞ்சில் துஞ்சும்வகை சூழ்ந்துதொழு நோய்முழுது மாகி அஞ்சின் மொழி யமிர்தமதி யருநரகின் வீழ்ந்தாள் நஞ்சனைய வினைநலிய நாமநகை வேலோய். |
280 | இருளினிரு ளிருள்புகையொ டளறுமணல் பரலின் மருள்செயுரு வினபொருளின் வருபெயரு மவையே வெருள்செய்வினை தருதுயரம் விளையுநில மிசையத்¢ தெருளினெழு வகைநரக குழிகளிவை தாரோய். |
281 | மேருகிரி யுய்த்திடினும் வெப்பமொடு தட்பம் நீரெனவு ருக்கிடுநி லப்புரைய வைந்தாம் ஓரினுறு புகைநரகி னுருகியுடன் வீழ்ந்தா ளாருமில ளறனுமில ளமிர்தமதி யவளே. |
282 | ஆழ்ந்தகுழி வீழ்ந்தபொழு தருநரக ரோடிச் சூழ்ந்துதுகை யாவெரியு ளிட்டனர்கள் சுட்டார் போழ்ந்தனர்கள் புண்பெருக வன்றறிபு டைத்தார் மூழ்ந்தவினை முனியுமெனின் முனியலரு முளரோ. |
283 | செந்தழலின் வெந்தசைக டின்றனைமு னென்றே கொந்தழலின் வெந்¢துகொது கொதுகென வுருகுஞ் செந்தழலி னிந்திதர்கள் செம்புகள் திணிப்ப வெந்தழலி னைந்துருகி விண்டொழுகு முகனே. |
284 | கருகருக ரிந்தன னுருவி னொரு பாவை பெரு கெரியி னிட்டுருகு மிதுவுமினி தேயென் றருகணைய நுந்துதலு மலறியது தழுவி பொருபொருபொ ரிந்துபொடி யாமுடல மெல்லாம். |
285 | நாவழுகி வீழமுது நஞ்சுண மடுத்தார ஆவலறி யதுவுருகி யலமரினு மையோ சாவவரி திவணரசி தகவில்வினை தருநோ யாவும்விளை நிலமதனி னினியவுள வாமோ. |
286 | முன்னுநுமர் தந்தசை முனிந்திலை நுகர்ந்தாய்க் கின்னுமினி துன்னவய வங்கடின லென்றே தன்னவய வம்பலத டிந்துழல வைத்துத் தின்னவென நொந்தவைக டின்னுமிகைத் திறலோய். |
287 | திலப்பொறியி னிட்டனர்தி ரிப்புவநெ ருப்பின் உலைப்பெரு கழற்றலை யுருக்கவு முருத்துக் கொலைக்கழுவி னிட்டனர் குலைப்பவுமு ருக்கும் உலைப்பரு வருத்தம துரைப்பரிது கண்டாய். |
288 | ஒருபதினோ டொருபதினை யுந்தியத னும்பர் இருபதினொ டைந்துவி லுயர்ந்தபுகை யென்றும பொருவரிய துயரினவை பொங்கியுடன் வீழும் ஒருபதினொ டெழுகடல்க ளளவு மொளித் தாரோய். |
289 | தொல்லைவினை நின்று சுடுகின்றநர கத்துள் அல்லலிவை யல்லனவு மமிழ்தமதி யுறுவ வெல்லையில விதுவிதென வெண்ணியெரு நாவிற் சொல்லவுலவா வொழிக சுடருநெடு முடியோய். |
290 | எண்ணமி லிசோதரனொ டன்னையிவர் முன்னாள் கண்ணிய வுயிர்க்கொலை வினைக்கொடுமை யாலே நண்ணிய விலங்கிடை நடுங்கஞர் தொடர்ந்த வண்ணமிது வடிவமிவை வளரொளிய பூணோய். |
291 | மன்னன் மயிலாய்மயிரி முள்ளெயின மீனாய் பின்னிருமு றைத்தகரு மாகியவ னேகி மன்னுசிறை வாரணம தாகிவத மருவி மன்னவநின் மகனபய னாகிவளர் கின்றான். |
292 | சந்திரமுன் மதிஞமலி நாகமொ டிடங்கர் வந்துமறி மயிடமுடன் வாரணமு மாகி முந்தைவினை நெகிழமுனி மொழியும்வத மருவி வந்துன்மக ளபயமதி யாகிவளர் கின்றாள். |
293 | இதுநுமர்கள் பவம்வினை கள் விளையுமியல் பிதுவென் றெதுவின்முனி யருளுமொழி யவையவைகள் நினையா விதுவிதுவி திர்த்தக நெகிழ்ந்துமிகை சோரா மதுமலர்கொள் மணிமுடிய மன்னவன் மருண்டான். |
294 | ஆங்கபய வுருசியுட னபயமதி தானுந் தாங்கலர்கள் சென்றுதவ வரசனரு ளாலே நீங்கிய பவங்களை நினைந்தன ருணர்ந்தார் ஆங்கவர்க ளுறுகவலை யாவர்பிற ரறிவார். |
295 | தந்தையும் தந்தை தாயு மாகிய தழுவு காதல் மைந்தனு மடந்தை தானு மாற்றிடைச் சுழன்ற பெற்றி சிந்தையி னினைந்து நொந்து தேம்பினர் புலம்பக் கண்டு கொந்தெரியழலுள் வீழ்ந்த கொள்கையன்மன்ன னானான். |
296 | எந்தையு மெந்தை தாயு மெய்திய பிறவி தோறும வெந்துயர் விளைவு செய்த வினையினே னென்செய் கேனோ அந்தமி லுயிர்கள் மாய வலைபல செய்து நாளும் [கேனோ. வெந்துயர் நரகின் வீழ்க்கும் வினைசெய்தே னென்செய். |
297 | அருளொடு படர்தல் செய்யா தாருயிர்க் கழிவு செய்தே பொருளோடு போக மேவிப் பொறியிலே னென்செய் கேனோ அருளின துருவ மாய வடிகணும் மடிகட் கேயுந் தெருளல னினைந்த தீமைச் சிறியனே னென்செய் கேனோ. |
298 | மாவியல் வடிவு தன்னை வதைசெய்தார் வண்ண மீதே ஆவினி யளிய னேது மஞ்சிலே னவதி யென்கொல் [ல் காவல வருளு கென்னக் கலங்கின னரசன் வீழ மாவல வஞ்ச லென்றம் மாதவ னுரைவ ளர்த்தான். |
299 | அறிவில ராய காலத் தமைவில செய்த வெல்லாம் நெறியினி லறிவ தூற நின்றவை விலகி நிற்பர் அறியலர் வினைக ளாலே யருநவை படுநர்க் கைய சிறியநல் வதங்கள் செய்த திருவினை நுமர்கட் காணாய். |
300 | அருள்புரி மனத்த ராகி யாருயிர்க் கபய நல்கிப் பொருள்கொலை களவுகாமம் பொய்யொடு புறக்கணித்திட்¢ டிருள்புரி வினைகள்சேரா விறைவன தறத்தையெய்தின் மருள்செய வருவ துண்டோ வானவ ரின்ப மல்லால். |
301 | என்றலு மடிகள் பாதத் தெழின்முடி மலர்கள் சிந்தக் கன்றிய வினைக டீரக் கருணையி னுருகி நெஞ்சிற் சென்றன னறிவு காட்சி திருவறத் தொருவ னானான் வென்றவர் சரண டைந்ததார் விளைப்பதுவென்றியன்றோ. |
302 | வெருள்செயும் வினைக டம்மை வெருவிய மனத்த னாகி மருள்செயு முருவ மாட்சி மகனொடு மங்கை தன்னை அருள்பெரு குவகை தன்னா லமைவில னளிய னும்மைத் தெருளலன் முன்பு செய்த சிறுமைகள் பொறுக்க வென்றான் |
303 | ஓருயிர்த் தோழ னாகி யுறுதிசூழ் வணிகள் றன்னை ஆருயிர்க் கரண மாய வடிகளோ டைய நீயும் நேரெனக் கிறைவ னாக நினைவலென் றினிய கூறிப் பாரியற்பொறையை நெஞ்சிற் பரிந்தனன்மன்னனானான். |
304 | மணிமுடி மகனுக் கீந்து மன்னவன் றன்னோ டேனை யணிமுடி யரசர் தாமு மவனுயிர்த் துணைவ னாய வணிகனு மற்று ளாரு மாதவத் திறையை வாழ்த்தித் துணிவனர் துறந்து மூவார் தொழுதெழு முருவங்கொண்டார். |
305 | தாதைதன் துறவு முற்றத் தானுடன் பட்ட தல்லால ஓதநீர் வட்டந்தன்னை யொருதுகள் போல வுள்ளத் தாதரம் பண்ணல் செல்லா வபயனு மரசு தன்னைக் காதலன் குமரன் றம்பி கைப்படுத் தனன்வி டுத்தான். |
306 | மாதவன் மலர்ந்த சொல்லான் மைந்தனும் மங்கை யாய பேதையும் பிணைய னாளும் பிறப்பினி துணர்ந்த பின்னர் ஆதரம் பண்ணல் போகத் தஞ்சினர் நெஞ்சி னஞ்சாய் மாதவன் சரண மாக வனமது துன்னி னாரே. |
307 | வினைகளும் வினைக டம்மால் விளைபயன் வெறுப்பு மேவித் தனசர ணணையு ளார்க்குத் தவவர சருளத் தாழ்ந்து வினையின விளைவு தம்மை வெருவின மடிகள் மெய்யே சினவரன் சரண மூழ்கிச் செறிதவம் படர்து மென்றார். |
308 | ஆற்றல தமையப் பெற்றா லருந்தவ மமர்ந்து செய்மின சாற்றிய வகையின் மேன்மேல் சய்யமா சய்யமத்தின் ஏற்றவந் நிலைமை தன்னை யிதுபொழு துய்மி னென்றான் ஆற்றலுக் கேற்ற வாற்றா லவ்வழி யொழுகு கின்றார். |
309 | அருங்கல மும்மை தம்மா லதிசய முடைய நோன்மைப் பெருங்குழு வொருங்குசூழப் பெறற்கருங்குணங்கடம்மாற் கருங்கலில் சுதத்த னென்னுந் துறவினுக் கரச னிந்நாள் அருங்கடி கமழுஞ் சோலை யதனுள்வந் தினிதி ருந்தான். |
310 | அனசன மமர்ந்த சிந்தை யருந்தவ னிசோ மதிக்குத தனயர்க டம்மை நோக்கித் தரியலீர் சரியை போமின் எனவவ ரிறைஞ்சி மெல்ல விந்நக ரத்து வந்தார் அனையவ ராக வெம்மை யறிகமற் றரச வென்றான். |
311 | இணையது பிறவி மாலை யெமரது மெமது மெண்ணின் இனையதுவினைகள்பின்னா ளிடர்செய்த முறைமைதானும் இனையது வெகுளி காமத் தெய்திய வியல்பு நாடின் இனையது பெருமை தானு மிறைவன தறத்த தென்றான். |
312 | செய்த வெந்தியக் கொலையொரு துகள்தனில் சென்றுறு பவந் எய்து மாயிடிற் றீர்ந்திடாக் கொலையிஃ திருநில முடிவேந்தே மையல் கொண்டிவண்மன்னுயிரெனைப்பலவதைசெயவருபாவ தெய்தும் வெந்துய ரெப்படித் தென்றுளைந் திரங்குகின் |
313 | ஐய நின்னரு ளாலுயிர்க் கொலையினி லருவினை நரகத்தாழ்ந் தெய்தும்வெந்துயரெனைப்பலகோடி கோடியினுறுபழிதீர்ந்தே பொய்ய தன்றிது புரவல குமரநின் புகழ்மொழி புணையாக (ன் மையின் மாதவத் தொருகடலாடுதல் வலித்தன னிதுவென்றான். |
314 | இன்சொல் மாதரு மிளங்கிளைச் சுற்றமு பொன்செய் மாமுடிப் புதல்வருட் புட்பதந் மின்செய் தாரவன் வெறுத்தன னரசியல் முன்சொன் மாமலர்ப் பொழிலினுண் முனிவரற் |
315 | வெய்ய தீவினை வெருவுறு மாதவம ஐய தாமதி சயமுற வடங்கின மையல் வானிடை யனசனர் குழாங்களுள் தொய்யின் மாமுலைச் சுரவரர் மகளிர்தம் |
316 | அண்ண லாகிய வபயனுந் தங்கையு நண்ணி நாயக முனிவனி னறிந்தனர கண்ணி னார்தம துருவின தெண்ணில் வானுல கத்திரண் டாவதி |
317 | அம்பொன் மாமுடி யலர்கதிர்க் குண்டல மருமணி திகழாரஞ் செம்பொன்மாமணி தோள்வளைகடகங்கள் செறிகழன்முதலாக் நம்பு நாளொனி நகுகதிர்க் கலங்களி னலம்பொலிந் தழகார்ந்த வம்பு வானிடு தனுவென வடிவுடை வானவ ரானாரே. |
318 | வந்துவானவர்திசைதொறும்வணங்கினர் வாழ்த்தினர்மலர்மாரி மந்த மாருதந் துந்துபி வளரிசை மலிந்தன மருங்கெங்கும் அந்தி லாடினர் பாடினர் விரும்பிய வரம்பைய ரருகெல்லாம் வந்து தேவியர் மன்மத வாளியின் மகிழ்ந்துடன் புடைசூழ்ந |
319 | மாசின் மாமணி மேனியின் வாசமொ ரோசனை மணநாறத் தேசொ ரோசனை திளைத்திட முளைத்தெழு தினகர னனையார்கள் ஆசி லெண்குண னவதியொடமைந்தனரலைகடலளவெல்லாம ஏசில் வானுல கிணையிலின் பத்தினி லிசைந்துட னியல்கின் |
320 | வெருவுறு வினைவலி விலக்கு கிற்பது தருவது சுரகதி தந்து பின்னரும் பொருவறு சிவகதி புணர நிற்பது திருவற நெறியது செவ்வி காண்மினே. |
யசோதர காவியம் முற்றிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யசோதர காவியம் - Iynchiru Kaappiyangal - ஐஞ்சிறு காப்பியங்கள் - மன்னவன், சென்று, மன்னன், பிறத்தல், மென்றான், ரம்மதி, மாமயில், கின்றான், கொண்டு, ருந்தான், னென்செய், காட்சி, பெருமை, இதுமுதல், தாகும், வணிகர், தின்று, மாளிகை, கின்றதே, மடிகள், கண்டாய், தோறும், நெஞ்சிற், தாரோய், னென்றான், சந்திரமதியாகிய, வேலோய், வென்றான், நின்று, சேடியர், தென்று, வெந்துயர், நெஞ்சி, நாகமாய், செய்தன, மூழ்கி, வெருவுறு, நாய்கரு