ஐஞ்சிறு காப்பியங்கள் - நீலகேசி
புத்த வாதம்
463 | அணிநா டிவைதா மறல்யா றிவைதாம் பிணிநா டிவைதாம் பெருங்கா டிவைதாம் மணிமா மலைதா மெனவே வருவாள் அணியார் சுகதன் நகரெய் தினளே. |
464 | அறையும் கடலும் அரவக் குரலும் பறையின் னொலியும் படுகண் டிகையுஞ் சிறையின் மிகுமா லிதுசெம் படர்கள் இறைவன் னுறையு மிடமா மெனலும். |
465 | மழைசேர் நகரம் மலைபோன் றனவே கழைசேர் கொடியுங் கதலிவ் வனமே விழைதா ரவரும் விரிகோ தையரும் முழைவாழ் புலியே மயிலே மொழியின். |
466 | நெடுவெண் டிரைமே னிமிருந் திமிலுங் கடுவெஞ் செலவின் னுலவுங் கலனும் படுவண் டறையும் பொழிலும் மெழிலார் மடுவுந் திடரும் மணல்வார் புறவும் |
467 | கயன்மீ னிரியக் கழுநீர் விரியும் வயன்மாண் புடைய வளமைத் தெனவும் முயன்மீ னெறியு முறியுங் கறியா தயன்மே யுறையா தணியிற் றெனவும். |
468 | கழுகின் னினமும் கழுதின் னினமும் முழுதும் மறுவை பலமூ டினரும் கொழுதின் னிணனும் பிணனுங் குலவி இழுதென் னெலும்பா ரிடுகா டெனவும். |
469 | சாதியே மிக்க தடுமாற்ற வெந்துயர மோதியே வைத்தாரவ் வோத்தெலா மீக்கிடந்த வீதியே காணலா மென்றாளா னின்றாரும் போதியா ரீண்டைப் புலால்பழியா ரென்றலும். |
470 | அங்காடிப் பண்டவூன்றின்ன வறமுரைத்தார்க் கிங்காடி வாழ்வனவுமூனாய்வந் தீண்டியவாற் கொங்காடத் தேனறையுங்கொய்ம்மருதம் பூவணிந்த பொங்காடை போர்த்தார்க்குப்பொல்லாதே யென்னீரோ. |
471 | விலைபடைத்தா ரூன்வேண்ட வவ்விலைதான் வேண்டி வலைபடைத்தார்க் கெம்முயிரை வைக்கின்றா மின்ன கொலைபடைத்தா னோகொடிய னென்பனவே போலத் தலையெடுத்து வாய்திறப்ப தாமிவையோ காணீர். |
472 | தன்றார மீந்தான் றனக்குறுதி யாவதனை யொன்றானும் வேண்டான் பிறர்க்கே யுழந்தானூன் தின்றானுந் தீவினையைச் சேருமெனச் சொன்னாற் பொன்றாவாய்ப் பல்விலங்கும் பூமிமேல் வாழாவோ. |
473 | உரிதா வுணர்ந்தானொன் றோரா துரையான் பரிவே யிதுவுந்தன் பாலரோ டெல்லா மெரிதோய் நரகம்பா ழேற்றுவா னேயாம் பெரிதா மளியன் பெருந்தகைய னேகாண். |
474 | கொடைக்கொட்டி விற்பானுங் கொள்வானு மன்றி யிடைச்செட்டி னாற்பொருளை யெய்துவான் போல முடைக்கொட்டி முத்துரைத்து மூடிக்கொண் டேகுங் குடைச்சிட்ட னாருயிர்க்கோர் கூற்றமே கண்டீர். |
475 | ஆடுவார் காண்பா ரவரருகே தான்சென்று தோடுவார்ந் தாலொப்பச் சொல்விரிப்பான் போற்பாவம் கூடுவார் கூடாதார் கொன்றார்தின் றாரென்னும் சேடனார்க் காண்டுநா மென்றுதான் சென்றாளே. |
476 | அணிசெய் கோழரை யரைநிழ லழகனைப் பொருந்தி மணிக டாம்பல கதிர்விடு மலருடை மணைமேற் றுணிவு தோற்றினை யெனச்சிலர் துதியொடு தொழுது பணிய யாதுமோர் பரிவிலன் படம்புதைத் திருந்தான். |
477 | ஆத்த னேயெனத் தெளிந்தவ ணமர்ந்திருந் தவர்க்குச் சூத்தி ரம்மிது வினையமு மிதுவிது பிறிதாஞ் சாத்தி ரம்மிவை மூன்றென வன்றவத் தோன்றல் பாத்து ரைக்குந்தன் பதப்பொருள் பலவகைப் படவே. |
478 | கந்த மைந்திவை கணிகத்த வாமெனக் கரைந்து முந்தி நாடினோ ருணரவல்ல தில்லையென் றுரைத்தும் புந்தி யாலங்கோர் புற்கல னுளனெனப் புணர்த்து மந்தி லாற்சொலாப் பாட்டினோ டியாதுமில் லெனவும். |
479 | தத்து வம்மிவை தாமெனத் தமர்களுக் குரைக்கும் புத்த னார்தம்மை புயலிருங் கூந்தலி பொருந்திப் பித்தர் போற்பல பிதற்றினீர் பிதற்றிய விவைதா மெத்தி றத்தினு மிசையின்மை யிசைக்குவ னென்னெவெ |
480 | ஓதி னீர்சொன்ன கந்தமைந் துளவெனி னுருவே வேத னையொடு குறிசெய்கை யிலவென விரிப்பும் போதியா லங்கோர் புற்கல னுளனெனப் புணர்ப்பும் யாது மின்மையோ டவாச்சிய மறும்பிற வெனவே. |
481 | ஐந்தில் யான்சொன்ன பலகளு மமைவில வெனினும் கந்த முண்மைக்கட் கருத்துள தாம்பிற வதனாற் சிந்த மாயவு முளவெனத் தெளியினி யெனலும் நந்த னார்க்கற முரைத்திர்நீ ரோவென நக்காள். |
482 | இட்ட நீபல வுரைத்தனை யிவற்றுளொன் றொழிய நட்ட மாயினு நன்மையை நின்வயிற் றருவோய் குட்ட மேமுழு மெய்யினு மெழுந்தவன குடுமி தொட்டி யானெனி னுந்தூய னோவது மாமோ. |
483 | நல்ல வேயென நாட்டிய கந்தமிவ் வைந்து மில்ல வேயெனத் தெருட்டுவ னெடுத்துரை யெனத்தான் சொல்ல வேதுவ ராடைகண் மூடிய சேடன் மெல்ல வேயிவை கேளென விரித்தவ னுரைக்கும். |
484 | உருவே திரிவே தனையா றுணர்வும் மருவா தனமாண் குறியத் துணைசெய் இருவே றவைசெய் கையிரு பதுமாந் திருவே யிவையெம் பொருடே ரெனவும். |
485 | முறைசெப் பியவைந் தினுண்முன் னையுரு வரையிற் பலவட் டகமுள் ளுறுத்த விறைபட் டனவெட் டெனவொட் டினகே ணறையிற் பொலிகோ தைநறுந் நுதலே. |
486 | நிலநீ ரெரிகாற் றோடுரு விரதந் நலமா கியநாற் றமொடூ றிவைதா மிலவே யவையெட் டினும்விட் டதிறஞ் சொலவா முடன்கேட் டொடுதோற் றமுமாம். |
487 | வலிதா நிலமை யதுநீர் வெய்துதீக் கலியே தருகாற் றியக்கம் கருமப் பொலிவேற் பொறையயர்த் தல்புலர்த் துளர்த்தன் மலிபூ தங்கணான் கின்மாண் பின்னவையே. |
488 | இனிவே தனையா வனவின் படுமொடு துனிவே தருதுன் பமுமா மிடையுன் நனிதா நலதீ வினையன் மையினாம் பனிவே யிணைபன் னியதோண் மடவாய். |
489 | அறிவா வனதா மினியா வெனினைம் பொறியோ டுமனம் மிவைபுல் லினவேற் குறிதா மிவையா றினுங்கூறுவதென் னெறியா மிவைநீ லநிகர்த் தகணாய். |
490 | குயலா குயலம் மெனக்கூ றும்வினைப் பயனாற் பலபா கெனப்பட் டவைதா மயலா மனமே வசிகா யத்தினா மயலா ரிதாவை மினியா ரறிவார். |
491 | கடனா கியகந் தமிவைந் துகளும் உடனே யவைதோன் றியொரு கணத்துட் கெடுமே யவைகேட் டினும்வாட் கணல்லாய் சுடர்மே யசுடர்ந் நுதிபோன் மெனவும். |
492 | கவையொப் பனவை விரலைந்து களும் இவையிப் படிக்கைப் படியென் றதுபோ லவையப் படிக்கந் தங்களைந் துகளும் நவையைப் படுநல் லுயிரா மெனவும். |
493 | அவைதா நிலையா துயரா மசுவம் நவையா ருயிர்நாட் டிலங்காட் டமிலை யிவைநான் மையென்வாய் மையிவ்வா றுணர்வா ரெவையே செய்துமெய் துபவீ டுமென்றான். |
494 | பல்லியல் பாகிப் பரந்தவைங் கந்தமுங் கந்தங்கடாம் புல்லிய வொற்றுமை யிற்குறி யாகிய பொய்யுயிருஞ் சொல்லிய கேட்டவள் வேட்டக் குரம்பை சுடுபவர்போ லல்லியங் கோதைநின் காட்சி யழித்திடு வேனெனத்தான். |
495 | பிண்டம் பிரிவில வேயெனச்சொல்லுத லாலவற்றுக் குண்டங் கொருகுணி யாங்கவை தாங்குண மாகுமன்றேல் விண்டங் கவையவை வேறுளதாதலும் வேண்டுமன்றோ பண்டங்கு நீசொன்ன முட்டியிற்பஞ்சாங் குலிகளும்போல். |
496 | பூதன்கும் புகுந்தே தெருல்லலுற் றயவற்றுக் கேதமி றன்மை கரும மிரண்டா வியைந்தவை பேதமு மாமென்ற பெற்றியி னாற்பொரு ளிற்றென்றலாற் சாத மாமுயிர் தன்மையிற் றேற்ற தவறெவனோ |
497 | நின்சொல்லப் பட்ட வலிப்புந் தரிப்பு நிலத்தினவே லென்சொல்லப் பட்ட வுணர்வொடு காட்சி யுயிரனவா முன்சொல்லப் பட்ட நிலந்தா முடியின் முடிவுளதாம் பின்சொல்லப் பட்ட வுயிரும் பெரிய பிரச்சையினாய். |
498 | வற்பமல் லானில மில்லெனச் சொல்லுவ னாங்கதுபோற் பொற்ப மிலாவுயிர் தானுமில் புத்திய லாலெனலும் வற்பமலா நிலமன்னுந் தரிக்குமென் பாயல்லையோ கற்பமெல் லாம்பிறர்க் கேநின் றுழந்த கருணையினாய். |
499 | உரிய வலிமையல் லானில மோரல னென்றிருந்தாற் பெரிய நிலத்தை யறிவிக்கும் பெற்றியில் லாய்பெரிது மரிய வுயிரை யறிவுறக் காட்டென்றி யெப்பொருளும் தெரியக் குணமுகத் தாலன்றி யென்றுந் தெருட்டுளதோ. |
500 | விருத்த நிலைமையும் வேண்டலம் யாமென வேண்டுகின்றீ ரருத்த மெனக்கொண்ட வட்டகம் யாவையும் விட்டில றிருத்தமி றீவயி னீருறை திட்ட விரோதமன்றோவாற் பொருத்தம லாதன வேசொல்லும் புத்தநின் புத்தியிதோ. |
501 | தன்மை கரும மவற்றன வேயென்ற றானென்னைவே றின்மை முடியினெ னிட்டமுரைப்பினுங் கெட்டதென்னோ மன்னுமந் நான்கு மறுதலை தத்தமு ளாதலினா லென்னு மியல்பும் பயனு மழிக்குமென் பேனல்லனோ? |
502 | ஊரிது காடிது தானென லென்னை யொருங்குளவே னீரிது தீயிது தானென லாமோ நிகழ்வுடனே யாரிவை கேட்டறி வாரவை யட்டக மென்னினலாற் போ¢து வேயெனச் சொ;லுத றானும் பிழைக்குங்கொலோ. |
503 | தொக்கவை யாயுட னேயவைநிற்பினு மாங்க வற்றுண் மிக்கத னாற்பெயர் சொல்லுவன்யானென்று வேண்டுதியேற் புக்கன தாம்பொறி யானின்புலமன்றிப் பொய்யெனத்தா னக்கனர் சாக வெனுநீயுரைக்கு நயங்க ளென்றாள். |
504 | உருவுடை யட்டக மன்றியுமைந்தினுட் பட்டவெல்லாம் மருவொடு கூடியுந் தீண்டியுமாக்குந் திறமரிதான் மருவுடை யார்களை மாயங்கள்சொல்லி மருட்டியண்ணுந் திருவுடை யாயவ காயத்துத்தேரை யடித்தெருட்டாய். |
505 | திரிவே தனைகளுந் தீராநுமக்குள வாதலன்றே கரிவே தனையவர் காமுறுகாமங் கடிந்ததுதான் பரிவே பெரிதுடை யீர்முன்னுரைத்தபல் செய்கைகளின் விரிவே யவையோரின் வேதனைவேறில்லை யாம்பிறவே. |
506 | உணர்ச்சியி னாற்செய்கை யாக்கியச்செய்கையி னாலுழப்பாம் உணர்ச்சியி னாங்கோர் பொருட்சுவடுள்ளது போல்கின்றதா லுணர்ச்சியொ டல்லன வொன்றொன்றில்நோக்கில வாமெனினு மிணர்ச்சி யிழந்து பிறபிறவாகிப் பெறலிலவே |
507 | ஆறினி னொறே நிகழும்பொழுதினல் லாவுணர்வு தேறின வாறவற் றுண்மையெனக்குத் தெருட்டனலிந் தாறின வோவில்ல தாழ்ச்சியினாலுள தாமெனினீ கூறிய வாற்றா லுயிருண்மைகூறலுங் குற்றமென்னோ. |
508 | ஓருணர் வுள்ள பொழுதினொழிந்த வுணர்வுகடம் பேரு முணரப் படாமைபெற்றாமென்னும் பேச்சுமுண்டா லீருணர் வில்லை யிருமூன்றொருங்குள வென்றுரைக்கு மோருணர் வேயுடை யீர்சொற்களொன்றொன் றழிப்பனவே. |
509 | ஒன்றே யுணர்வாய் நிகழற்குக்காரண மவ்வுணர்வாய் நின்றே யறிவான் றனிமையினாலெனத் தோ¢னிநீ யன்றே யெனினவை யாறுந்தமுண்மையின் வேறென்னலாற் சென்றே புலந்தலைப் பெய்தலறிவுடன் சீர்க்குமன்றே. |
510 | இச்சையில் லாமையி னெல்லாமொருங்குண ராவெனினு மிச்சையெல் லாத்திற்கும் வேறேலொருங்குட னெய்துமன்றி யிச்சையெல் லாத்திற்கு மொன்றேற்குணிப்பொரு ளிச்சையென்றாய் தச்சனஞ் சிச்சா ரகழ்கள்வனென்கின்ற தன்மையினாய். |
511 | பிறந்து பிறந்துநி னிச்சைகெடலன்றிப் பின்னொன்றின்மேற் சிறந்து சிறந்தாங் குணர்ச்சிவிரியுந் திறமரிதாற் கறந்த கறந்த கலஞ்சுவைத்திட்டாற் கறைக்கலங்க ணிறைந்த நிறைந்தவை பாறயிர்மோரெனத் தானென்னையோ. |
512 | எல்லா வுணர்ச்சியு மிச்சைவழியா லெழுமெனலா லில்லாம் பிறநுன திச்சையுமிச்சைமு னின்மையினால் வல்லா யிதற்குமுண் டாயின்வரம்பின்மை யாமதனாற் சொல்லா விடுந்திற மென்னோவிரிவிற்குச் சூனியமே. |
513 | வெளிப்பட்டு நின்றதொன் றன்றியொழிந்தவிஞ் ஞானங்கடாங் குளித்தன தாங்கொள்ளப் பாடின்மையாலின்மை கூறிநின்றேற் களித்தவை தங்களுக் காலயமாலய மாமெனநீ யொளித்தனை கொள்ளலுற் றாயுயிர்தன்னையோர் பேருரைத்தே. |
514 | இருளுடை மாலைக்கண் டோன்றாதெனக்கென நண்பகலே பொருளுடை யார்பொருள் கொள்வானகழுநன் போன்றிலையோ வருளுடை யார்சொல்லு மாருயிராலய மென்றிருக்கும் மருளுடை யாய்நின் மாண்பழிந்தெற்றான் மயங்கினையோ. |
515 | மூக்கொடு நாமெய்யும் மூன்றுந்தம்மூன்று புலன்களையும் தாக்கிய போழ்தே யறிதலுந்தத்துவ மாமென்றியா லாக்கிய மூன்றி லறிவுமரூவா லவையொருவாப் பாக்கியஞ் செய்தாய் பரிசங்கள்கொள்ளும் பரிசென்னையோ. |
516 | உற்றில வாயொலி கொள்ளுஞ்செவியென வோதுகின்றாய் கற்றிலை மெய்ம்மைநீ கட்புலந்தன்னோடோர் காலத்தினாற் பெற்றில நாமதன் பின்கொளறானும் பெருந்தவத்தாய் மற்றிது தான்றன் பொறியுறுகாறும் வரலினன்றே. |
517 | வாய்த்துரை யீதென வாமனிதுசொல்லும் வந்துறுமேற் சேய்த்தெனக் கோடலுஞ் சேராதொலிசெவிக் கண்ணதெனி னீத்தன தாமல வாயினுநீசொல்லு முற்றறிவின் றீத்தனைப் போலவுந் தேறென்றவனைத் தெருட்டினளே. |
518 | பெற்ற வெழுத்தேற் பிரிவின்கணாறாம் பெயர் நுனது முற்ற வுணர்ந்து முடித்துரையென்னை முதலெழுத்துப் பற்றின சித்தம் பலவுணர்ந்தேயவை பாழ்படலாற் கற்றினி யெல்லாக் கணக்குங்கலந்துரை காண்பென்னையோ. |
519 | ஓதிய கந்தங்க ளொற்றுமையாலுயி ரென்றதுபோற் போதிய னாய்நின்னைப் புத்தனென்றாலது பொய்பிறவோ வாதியி னாம்புத்தி யாவதல்லாலந்தத் தன்களையா நீதியி னாற்சொல்லி நின்றுநின்பேறு முணர்விலையே. |
520 | அன்றியு நின்சொ லறிபொருடானில வாதலினா லொன்றி யுரைத்த வுனக்குமெனைத்து முணர்வருமை யென்றினி யாமுந் தெளிந்தோமிதனா லெனவுரைத்தாள் வென்றி யுடையன வல்லதுசொல்லா விரிகுழலே. |
521 | ஆறுகுறி யாவனவு மாயபுலந் தாமும் கூறுகுறி மாறுமவை கொள்ளும்வகை தாமும் மாறுகுறி மாறிக்குறி யென்றுமயக் காதே வேறுகுறி தாமுணர்வின் விள்ளுவ லினிக்கேள. |
522 | கண்ணின்குறி மூக்கின்குறி மெய்யின்குறி செவியி னண்ணுங்குறி நாவின்குறி காடின் மனத்தோடு மெண்ணுங்குறி யாவனவிவ் வாறுமெனக் கொண்ணீ பண்ணின்குறி யேசுமொழிப் பாவையெனச் சொல்லும். |
523 | அறிவுகுறி யென்பனவி னாயபுல மொன்றே லறிவுகுறி யென்பனவு மாகுமவை யொன்றே பிறிதுகொளு புலமுள்ள தாகுமெனிற் பேதம் சிறிதுநெறி காட்டினது செல்லுமெனச் சொல்லும். |
524 | உண்மைகுறி கொள்ளுமுணர் வின்புலம தெய்தா தெண்ணினுணர் வோடுகுறி யிவ்வகைய வென்னி லுண்மையுணர் வின்புலமோ டொன்றெனில தொன்றே நண்ணலில வேலுணர்வி னாயபுல னின்றே. |
525 | ஒருங்குகுறி யோடுணர்வுதோன்றியுடன் கொள்க வொருங்குபுலந் தோன்றியவையொத்தகெட லானா லொருங்குகுறி யோடுணர்வுதோன்றலில வாமே லொருங்குபுலந் தோன்றுதலினொன்றுமுணர் வில்லை. |
526 | உள்ளுஞ் சொல்லுடம் பென்றிவை மூன்றினாற் கொள்ளு நுங்குச லாகுச லங்கடா மெள்ளி னேரு மிவையின்மை காட்டுவே னுள்ளக் காக வுரைத்தவம் மூன்றினுள். |
527 | வேண்ட லேயென்றும் வெ·குத லாயினா லீண்டி நின்றநி னித்தொடைப் பாடெலாந் தீண்ட லன்னெனத் தீண்டிய வந்தவோ வீண்டை யேநிற்ப வி·து மறிகிலை. |
528 | நன்மை வெ·குதல் நன்றெனச் சொல்லுலு மனமை வெ·குத லன்றெனக் கூறலு மின்மை யால்வெ·க லென்றதுந் தீமையி னின்மை யாய நெறிமொழி நீயினி. |
529 | தீய வாய வெகுளியை யொப்பன மாய மான முலோப மனத்தன காய்வு செய்திலை கண்டுநின் கள்ளமே நீய வையவை நேர்தலி னாம்பிற. |
530 | காட்சி நல்லன் காண்ட லனைத்தினு மாட்சி யாமெனின் மன்னும· தொட்டுவேன் வேட்கை யாலிது நன்றென வேண்டினு மாட்சி யொட்டி வழித்தன னல்லனோ. |
531 | பொய்கு றள்ளே கடுஞ்சொற் பயனில்கொ னைத லில்லன நான்கிவை நாவினாஞ் செய்கை தீயன வாமெனச் செப்பினீ ரைய நன்மையென் றீரவற் றப்புடை. |
532 | மண்டை கெண்டிகை மாட மடாமனை கொண்டை குண்டிகை கூறை குடங்கடை யுண்டி கட்டி லுடம்புயி ராதிய பிண்ட மாய பிறபிற யாவையும். |
533 | கூட்ட மான குறியெனி னலதை பூட்ட லங்கோர் பொருளின்மை வேண்டியு மீட்டு மீட்டிவை சொல்லின மெய்யுரை நாட்டு மாறென்கொ லோவிளி நாசநீ. |
534 | நிலம்பொய் நீர்பொய் நெடுநகர் தாமும்பொய் கலம்பொய் காற்றொடு தீயும்பொய் காடும்பொய் குலம்பொய் யேயெனக் கூறுஞ்செங் கூறையாய் சலம்பொய் யன்றிதொன் றேநுங்கள் சத்தையே. |
535 | குற்ற மென்ற குறளையே யொப்பன மற்றுஞ் சால வுளபிற மாண்பில வொற்றைப் பெண்ணுரை யாடுதல் போகங்கள் கற்ற லேகடுஞ் சொல்லின்ன காத்தலும். |
536 | பையச் சொல்லுத னல்வினைப் பாலென்றா லெய்யக் குற்ற வெறியப்புணர்க்குங்கால் வையத் தீயாவரு மந்திர மாமவை செய்யச் சொல்லுநர் செவ்விய ராபவோ. |
537 | கடுக்கத் தாமடி கள்ளெனக் காய்ஞர்யா ரொடுக்கச் சாம்பிவை தாலுவப் பாரில்லை கொடுக்க வென்றல் குசலமன் றென்பதோ படுக்க லுற்ற பதகநின் பாடமே. |
538 | ளபாவ மாம்பய னில்லன சொல்லலேற் பூவ மேபொருள் கைக்கொண்டு புற்கலர் சாவச் சொல்லுவ தத்துவ மாம்பிற வேவ னன்றென்றி யொப்பவொன் றில்லையேல். |
539 | காயத் தாற்கொலை காமங் களவென நீயத் தாசொன்ன நேருந் திறமென்னோ மாயத் தான்மன மின்றி யவையவை தேயத் தியாருளர் செய்பவை ரென்பவே. |
540 | வழிமுள் ளூன்றன் மனைசுடன் மாந்தரைக் குழியு ளுந்துதல் கோயிற் கலஞ்செய்த லொழிவில் யானைமுன் னோட்டலோ டின்னவும் பழியும் பாவமு மாக்குவ வல்லவோ. |
541 | ஒன்றி நின்ற வுயிரை யுயிரிது வென்று சிந்தித் தழிப்ப னெனவெண்ணி நன்றி யி·றொழி றேற்ற நவையினாற் கொன்ற தேகொலை யென்றைந்திற் கூறினாய். |
542 | தேவ னையிவன் றேவ bனனவெண்ணிப் பாவனையிற் பணியு மனத்தனாய்த் தூவென மும்மையே தோற்றித் தொழானங்கோர் தாவ னைதொழு தான்றவ றெய்துமோ. |
543 | ஒத்த வன்றனை யுறுபகை யேயெனக் குத்தி னாற்குங் கொலைவினை யில்லைனப் புத்த னீருரைத் தீரங்கோர் புற்கலன் செத்த வாறது சிந்திக்கற் பாலதே. |
544 | கொன்ற பாவமுண் டாயின் குறட்கண்ணும் ஒன்று மேயென் றுரைப்பனெப் பாரியார் பொன்றினும் புத்த ரேநீவி¡; சொல்லின சென்று சேர்தலைச் சித்தம தின்மையால். |
545 | பட்டி லன்பகை யாலெய்து பாவமங் கொட்டி நீயவ் வுயிர்க்கொலை யாலென்னில் துட்டனைத் தொழு தோன்றுறந் தானெனக் கெட்ட னன்னிது கேட்க வினைநிலை. |
546 | ஆய்ந்த வைந்தினு மாம்வினை யார்ப்பெனின் வீய்ந்த தின்மையின் வெய்ய வவீசிதான் காந்தி பாலி யிரங்கக் கலகனைப் போழ்ந்து கோடல் பொருந்தல தொக்குமே. |
547 | கொல்வ னென்றவன் கூர்ம்படை குன்றினுஞ் செல்வ னென்றய லார்மனைச் சோ¢னுங் கல்லு வானொ டெல்லார்க்குங் கருவினை சொல்லு வானோ டுலகமுஞ் சுற்றமே. |
548 | துப்பி னால்வினை சொல்லலன் யானென்று வப்பி னார்முலை காய்வது வாமனீ யிப்ப லாரிடை யென்னையி தென்பதோ செப்பி னாலுஞ் சிதைகின்ற தில்லையால். |
549 | பண்டு தான்வைத்தப் பண்டத்தை யொப்பதொன் றுண்ட தாயி னதுவது வேயெனக் கொண்டு போகினுங் கொள்ளினுங் குற்றமில் கண்ட போழ்துங் களவன்ற தென்றலால். |
550 | பஞ்சி மெல்லடி நோவப் பகனடந் தஞ்சி லோதியு மல்க வவளெனத் துஞ்சு மில்லுடை யாளைச் சுமந்துபோய் வஞ்சி யான்கொள்க வாழ்கபுத் தன்னென. |
551 | கந்த மாவன காகதந் தம்மெனப் பந்த மின்மையிற் பாழ்செய்திட் டேனினி யந்தி னீசொன்ன வாரிய சத்தையுஞ் சிந்தை யுஞ்சிதைப் பேன்சில சொல்லினால். |
552 | பிண்டமொன் றாயினும் பிரியநோக் கின்னது கொண்டுநின் றாம்பிற கூறினைந் தேயெனக் கண்டநா மெய்ம்மையுங் காட்டுவா யீங்கெனி னுண்டுதா மாகுல முணர்வுதான் கூறுவோம். |
553 | முழுதுந்துன்பம்மென மொழியின· தாகிய பொழுதினா னல்லவும் புல்லுமா மாதலாற் பழுதுதா னவ்வுரை பன்மைதா னின்மையில் இழுதையா னான்குள வென்றுசொன் னாயென. |
554 | உழப்புமூன் றும்முட னொக்கநோக் கின்னது வழுக்கில்லா வாய்மையேல் வாய்மை சொல்லியினி யிழுக்கினாய் நீபிறர்க் கின்பமீந் தேனெனல் பழுக்களே காய்வது ண்டுமுண் டேபிற. |
555 | துக்கமே யாயினாற் றொழிலுமொன் றாய்ப்பய மொக்கவே வேண்டுமா லுயர்விலாக் கீழ்க்கதி புக்குவீழ்ந் தார்பிறர் பொங்கிநின் றாரெமர் மிக்கதே யென்னெறி யென்றுவேண் டல்லெவன. |
556 | உறுதிகூ றல்லொழி யொழுக்கங்காத் தல்லொழி யிறுதியி· றுன்பமே யின்பமில் லாயினாற் சிறிதுநீ தீப்புகாய் சேர்வதென் னைந்நிழல் இறுதியில் லாத்துய ரின்னசெய் யாயினி. |
557 | தூய்மை யில்லை முழுவது மென்பதை வாயும் நீசொல்லும் வாய்மைய தாயினாற் றாமஞ் சாந்தம் புனைபவர் தாமெலாம் ஏம நன்னெறி கண்டில ரேபிற. |
558 | ஓது மோத்து மொழுக்குநின் னுண்டியுங் கோதில் தூய்மைய வாமெனக் கூறியும் யாது நீயசு வாமெனச் சொல்லுவாய் நாத னீபிற நன்கறிந் தாயவை. |
559 | நீயி னேசொன்ன மெய்ம்மையை நோக்கிலார் தூய்மை யாம்பிறர் தூய்மை யிலரென்று காய்ப வேகவி மண்டைகள் என்றனள் வேயி னன்மை விலக்கிய தோளினாள். |
560 | சென்ற சென்றுன செந்நெறி கண்டவர் பின்றைத் தூய்மை பெறுவது மில்லையே லின்று மின்று மியல்வது வாக்கொள்வாய்க் கின்றித் தூய்தன்மை யென்னை யிழைத்ததோ. |
561 | அழுகு பூசுமி னங்கண மாடுமின் கழுகு ணூத்தையோ டேனவுங் கவ்வுமின் மெழுகு மின்னிடை மெச்சிய மல்லதின் முழுதுந் தூய்தன்மை சொல்லிய மூடர்கள். |
562 | நில்லா வென்னி னில்லன்மையாலும் நில்லாவா யில்லா மென்ற லின்புறு மேற்கோ ளிழுக்காகு மெல்லாந் தானே யென்றலி னேன் விழவெய்தி நல்லாய் சொன்ன நான்மையை நாட்டுந் திறமென்னோ. |
563 | உழுவார் வணிக ரென்றிவ ருள்ளிட்டுலகத்துள் வழுவார்க் கீய வான்பொருள் வேறாய் மறியும்மே வழுவார் தமையுங் காண்டும· தாமாறுரையீரோ புழுவாழ் கென்று புனன்மழை தந்த புகழுள்ளீர். |
564 | தெய்வத மென்று தேறினர் செய்யுஞ் சிறப்பென்றும் கையது வீயக் காமுறு தானக் கலப்பென்று மெய்தல் ரேயின் னிவையிவை யெல்லா மிழுக்காவோ மெய்பிளந் திட்டு வேண்டுநர்க் கீயும் விழுமிய்யீர். |
565 | ஒள்ளிழை யாரே யுறுபொருள் பிச்சைக் குரியார்கள் தள்ளின போழ்தின் னவையவை தன்னைத் தலைநிற்பார் கள்ளர்க ளன்மை காட்டலு மாமோ கருணையாற் பிள்ளைக ளேங்கப் பிறர்களுக் கீந்த பெருமைய்யீர். |
566 | நில்லா தாகக் கூறுத றன்னை நெறியென்றீர் பல்வகை யானும் பாழ்செய்து பின்னே பரிகாரஞ் சொல்லுவி ராயிற் சொல்லிய மெய்ம்மை துறவாமன் கொல்சின வேழங் குறிநிலை செய்த குணத்தின்னீர். |
567 | ஓதி யாது முயிரில்லை யென்ப துரைத்து நின்றாயேற் கோதி லங்கோர் குறியுயிரே கொள்ளி னுங்கோளழிவாம வேதி லார்சொல் பரிகற்ப னையி னாலின் மைசொல்லி னீதி யாநின் கருத்தினா லுண்மை யுந்நேர்ந் தாயன்றோ. |
568 | ஒன்று மில்லை யுயிரென்றுரைத்தநீ யுண்மை யின்மை நின்ற வாறே நெறியாகநேர்கின் றாய்நீ யாவனோ வன்றி முன்சொன் னவத்திறமெத்திறத்தா னும்மா காமையா லின்றுந் நின்றுந் நீமொழிந்தாயெம்மிறை யேயிறை யாகவே. |
569 | போற லானு மதுபோ லாதென்றும்பு னைவினாலும் வேறல் லதில் லையெனவும் வினைவலியும்யோ கின்னாலும் தேறி நின்ற பொழுதோடிவ்வேழாந்திறத்தி னாலுங் கூற லாமோ மீட்டுணர்வுகொண்டு ணர்வா னில்லாக்கால். |
570 | நாம சீவன் முதலாய நான்மை களின்முன் மூன்றிலுந் தூய்மை சீவனுடைத்தாகு மன்றே னின்சொன் மாறுமாந் தாம சீவன் முழுவது மென்று தருக்கு கின்றாய் வாம சீவ னிவற்றினா லுண்மை மறுக்க லாகுமோ. |
571 | அறியும் மெய்ம்மை யும்மைங்கந்தம்மாட சிய்யு மல்லவையுஞ் சிறிதும் மென்முன் னிலையின்மைகாட்டிச் சிதைத்தே னாலினிப் பிறிதொன் றுண்டே லுரைய்யெனவுரைத்தாள் புத்தன் றான்பெரிதும் மெறிபட் டென்னெ றியினாலேயடக்கு வன்னி னையுமென்றான். |
572 | ஆதி யலாத வகன்றடுமாற்றமுஞ் சாதி யறுக்குந் தகையு மிவையென வோதி வினைப்பயத் தொப்புரைப் பார்க்கன்றி நீதி யிலாநெறி நேரல னென்றாள். |
573 | வித்தின் வழிவழித் தோன்றும் முளைகிளை சத்தியி னாயசந் தானத்தை மாற்றென்பன் வெத்தவ வித்தினின் வேறன்று வீடிது தத்துவ மாக்கொ டளிரிய லாயே. |
574 | வினையு முளது பயனு முளது தினையனைத் தாயினுஞ் செய்ஞ்ஞன மில்லை யெனையவுங் கந்த மருகண நில்லா நினையின்மற் றென்றா னெறிபயந் தானே. |
575 | குணம்பொரு ளென்றி கொடைபொரு ளென்றி யுணர்ந்துசெய் துண்பா னொருவனி லென்றி கணந்தனி லேநிலை கந்தமு மாயக்காற் பிணங்குவ தொக்குநின் பேரெமக் கென்றாள். |
576 | தீதுள்ள மேலது தீயழப் பேசெய்யும் யாதுள்ள மாண்புள மேலின்ப மாமென்னை மாதுளம் பீசமுண் மாணரக் கின்னிறம் போதுள்ளங் காண்பது போலமற் றென்றான். |
577 | எட்டி னியன்ற விரண்டினு ளாங்கவை யட்ட வரத்தமு மல்லது மாய்ப்பய மாட்டார் மலர்க்கண்ணுஞ் செம்மையு மற்றுமா விட்டமுங் காடம்டுவ னீங்கிது போல. |
578 | ஐந்தி னியன்றவர் பிண்டத்த ராகிய மைந்த ரிருவர் குசலா குசலத்தர் சிந்தையி னல்லவன் றன்வழித் தேவனும் வெந்தொழி லான்வழி வீறி னரகனும். |
579 | பீச மெனப்பட்ட தெட்டே பிறிதங் கொன் றாசொன்று மில்லைய வைந்திற்கு மன்னது நீ சொன்ன வாறிது நேருந் திறமென்னை யேசுவன் கேள்யா னெடுத்தினி யென்றாள். |
580 | அயலரக் கட்டக பீசமுண் டாங்கு வியலகத் தைந்திற்கும் வேறொன்று காட்டாய் குயலமு மல்லது மாயினன் றாகும் மயல்படைத் தாயொழி மாதுளங் காட்டல். |
581 | பூவின்கட் காட்டல் பொருந்தா ததன்வழி மாவின்க ணாக மகன்செய் வினைப்பயன் தேவன்கட் போலத் திருந்திய மாதுளஞ் சாவின்கட் செய்கையுஞ் சாங்களைந் தாயோ. |
582 | வித்தொடு பூவின்கண் வேற்றுமை காட்டினும் துத்தல் குழவி கிழவன்கட் சொல்லென்பன் பித்துடை யார்போற் பிதற்றி வினைப்பய மெத்திறத் தின்னு மியைத் துரைக் கில்லாய. |
583 | அங்குரந் தன்கண்ணுஞ் செல்லா தரக்கொடு மங்கின பீசத் துருவ மலரின்கட் டங்கின வென்னுஞ்சொற் றத்துவ மாக்கொண்ட வங்குலி மாரனை யாதன்மற் றென்னாய். |
584 | அப்படி யாலரக் காமது போன்மெனிற் றப்படை யானுழப் பெய்வழித் தங்குத றுப்புடை யான்சுர னாகிய வன்றுய்க்க லிப்படி யாயினீ யென்றுரை யாயோ. |
585 | எம்மை யுவப்ப வினைவழித் துப்பெனின் ¦ச்மை வழியது தீஞ்சுவை யென்றில்லை யெம்மை வினைவினை யாக்குநின் பூவுரை யிம்மையோ டும்மை யிவையிலை யாலோ. |
586 | உண்டது போலு முறுபயன் பன்மலர் கண்டது காரண மாகக் கருதினு மண்டையா மான்றசை மீன்றடி தோன்றிய வண்டுண வாகலு மாமத னாலே. |
587 | தீயுழப் பேசெயுந் தீவினை யென்பது வாயுழப் பாம்வழி யேபுகுந் தாயினி நோயுழப் பாகிய நுஞ்செய்கை யாவையும் நீயுழப் பாய்பிறர்க் கேயுழந் தாயால். |
588 | உள்ளம் வினையென வோதினை யேற்செய்கை யெள்ளின் றுணையும· தின்மை யினைந்தெனக் கொள்ளுந் திறமென்னை கூறாய் குணந்தினிக் கள்ளமல் லாலென்றுங் கட்டுரை யாயால். |
589 | நின்னுடை யுள்ளமுஞ் செய்கையு மொன்றெனிற் றன்னிடை யெய்துந் தரும தருமிமற் றென்னிடைக் கொண்டிலை யெங்குப்பெற் றாயிது முன்னுடம் பாட்டின் முரணுள தாமால். |
590 | சித்தமுஞ் செய்கையும் வேறென்றி யேயெனி லொத்த வினையுடன் பாடின்றி யாமினித் துத்த லையாதின் வழித்தெனச் சொல்லுதி யொத்திய வல்ல துரையலை யாயால். |
591 | கண்டுணர்ந் தார்வத்தி னாற்செய்கை யாதலை யுண்டெனி னாற்குண மொன்றினுக் கொட்டினை பிண்டிநீ ழலவன் பேரறஞ் செர்தலிற் கொண்டநின் கோளின்கட் குற்றமுண் டாமோ. |
592 | விளைவத னால்வினை யாக்குமென் பார்சொ லுளைவதிங் கென்செய வோவுணர் வில்லாய் தளைபெய்து வைத்தென்னைத் தம்பொறி யெல்லா மளைவது நன்றிது தானற மாமேல். |
593 | ஆர்வத்தி னால்வினை யாக்கு மெனச்சொல்லி னார்வத்தைச் சித்தமென் றாருரைப் பாரினிச் சேர்வித்த துப்பினிற் செய்கையு மாதலை நேர்வித்த வாறது நீயறி யாயால். |
594 | உணர்வினை ஆர்வ மெனவுரைப் பாயேற் புணரும் பிறர்கடம் பொற்றொடி யார்மே லுணர்வன்ற தார்வ முழப்பெனச் சொல்லி னிணர்பிரி யாத்துப்பி னால்வினை யன்றாய். |
595 | சித்திமுடைச் செய்கை செய்வினை யாதலின் சித்த முடைத்துப்புஞ் செய்வினை யாம்பிற சித்தம் வினையெனச் செப்புத லாலெங்குச் சித்தமுண் டவ்வழிச் செய்கையு முண்டே. |
596 | செய்கையி னாற்றுப்பு மாக்கியத் துப்பினிற் செய்கையு மாம்வகை செப்புவித் தேனினிப் பொய்கைசெய் தேசொன்ன பூவொடு வித்துரை வைகவென் றாண்மல ருண்கண் மடவாள். |
597 | இருவகைப் பீசத் தியல்வு மழித்துத் திருவகைத் தேவொடு பூவுஞ் சிதைத்தே மருவுகை யாய்நின் மதுரஞ்செய் மாவும் தருவனை யாயிற் றகரு மதுபோல். |
598 | வலிசெய்து பீசத்தின் மாண்பு மழித்திட் டலிசெய்து விட்டே னமையு மதன்மேற் பலிசையி னீசொல்லும் பாடங்க ளெல்லாம் நலிவனொன் றொன்றா நடுவுணர்ந் தென்றாள். |
599 | பிறந்தவப் பிண்டம் வினையினோ டாங்கே யிறந்தன வெத்திறத் தின்னுமற் றென்றாற் சிறந்தவத் தேவெய்திச் சேர்தலுஞ் சீரா தறஞ்செய் தறானு மவம்பிற வன்றே. |
600 | உரந்தனை யாது மொடுக்ககி லாகிச் சுரந்தபல் குற்றஞ் சொலக்கேட் டிருந்தான் பரந்தினி நீசொன்ன பல்வழி யெல்லாங் கரந்தனை போதலைக் காட்டுவன் கேணீ. |
601 | அரக்கொடு பீச மறக்கெட்ட வாற்றல் கரப்பது போலிடைக் காண்பரி தாகி மரத்திடை சென்று மலரின்கட் டோன்றிப் பரக்குமென் றேன்பயம் பைந்தொடி யென்றான். |
602 | அன்னணஞ் செய்தா னறங்கெட் டவன்வழித் துன்னுஞ் சந்தானத் தொடர்ச்சி நிகழ்ச்சியிற் பின்னை யதுபெறு மாதலின் யான்கண்ட நன்னெறி நின்னா லறிவரி தென்றான். |
603 | கந்தங்க ளெல்லாங் கடையறக் கெட்டக்க ணந்தமி லாக்குற்ற மாமெனச் சொல்லுஞ் சந்தங்க டம்முட் சவலைச் சந்தானமும் வந்த· தெவன் செய்யும் வாமமாற் றென்றாள். |
604 | ஆற்ற மகன்கெட்ட போழ்தே யமரிற் றோற்றமு மென்னை துடித விமானத்து ளேற்ற தவத்தவன் றேவென லென்கொல் சாற்றுஞ்சந் தானத்தைச் சந்தித்துக் காட்டாய். |
605 | மக்க ளுடம்பொடு தேவ ருடம்பிடை மிக்க விடம்பெரு வெள்ளிடை யாலிது புக்க தொடர்வில்லை யாதலி னீகொண்ட பக்க முடன்கெடு மாலென்னை பாவம். |
606 | புளிபொறி வாழ்நிழ றண்மதி யின்ன தெளிவுள தாஞ்செல வின்முடி வென்னில் விளிபவ னுளபொழு தேவினை துய்க்கு மொளிகிளர் தேவ னுளமென்னு மாறோ. |
607 | சென்றில தேலிடை யற்றுழிக் தோன்றுக வென்றலு மிங்குள தோவது தானெனி னொன்றல பல்பொரு டாமொளி யாதிய நின்றல வோவுல கெங்கும் நிறைந்தே. |
608 | தண்மதி கெட்டதன் சாயை யுடன்பெற லுண்மை யுண்டாயினி னொத்துரை யொட்டுவன் கண்மதி யாததெங் காரிய மேயின்ன வெண்மதி யாயை விலக்குநர் யாரோ. |
609 | மதியென்று மில்லெனி னில்லொளி தானும் புதியதும் பாழது பொன்றிய போழ்தே கதியினை நாட்டிய காட்டி யெமக்கிங் கதுவென்னை சொல்லிய வாறுரை யாத்தா. |
610 | அடியொடு பூவி னிடையற வின்றி நெடியதோர் கொம்பினை நீமறந் தாயோ மடியிலார் செய்த மானுயர் தெய்வப் படியிது வென்றிடை பாழ்செய்திட் டாயால். |
611 | தோற்ற மிடையற வில்லாத் தொடர்ச்சியைச் சாற்றுதும் யாமுஞ்சந் தான மெனவென்னிற் காற்றுஞ் சுடருங் கரகத்துட் டாரையு மேற்றன வல்ல விரண்டுண்மை யாலே. |
612 | பித்தொடு கனவிடைப் பேயின் மயங்குநர்க் கொத்த வுணர்வுண்மை யொட்டல தென்செய தத்துவ மாயசந் தான முளதெனிற் புத்தநின் சொற்கள் பொருளில வேயால். |
613 | மூத்தல் வகையு முதலத னைம்மையு மாத்த கணந்தோ றலர்ந்த நிகழ்ச்சியுஞ் சாத்திரத் தாலத் தவிரன்கட் டாழ்ச்சியும் போத்தந்து காட்டுந் திறமென்னை புத்தா. |
614 | கப்பம் பலபல கண்ணிமை யானுக்குத் துப்பு முரைத்தென்னை தோன்றிய வக்கணத் தொக்க விளைவுரைப் பாய்பின் வழிவழிச் செப்புதி யேற்செய்கை சென்றுசென் றுண்டே. |
615 | காரண மென்னினுஞ் சென்றின்மை யாலில்லை ஏரண தேவ விழுதைமை சொல்லுதி யூருணி நீர்நிறை வுண்டோ யுறுபுனல் வாரண வாய்க்கால் வரவில்லை யாக்கால். |
616 | நில்லா தறக்கெடுந் தோன்றிற்றுந் தோற்றமு மெல்லா வகையினு மில்லதற் கேலில்லை சொல்லாய் தொடர்ச்சி தொடர்ச்சியென் றேநின்று பல்லார் களையும் படுத்துண்ணும் பண்பா. |
617 | சுடருடைத் தோற்றத் தொடர்ச்சியைச் சொல்லி யிடருடைத் தாக விவையிவை காட்டி யடர்படுத் திட்டாட் கதற்கொன்று நாடிச் சடருடை வாசனை சாதிக்க லுற்றான். |
618 | கெட்டபி னாற்றல்க ளெல்லாம் வழியதற் கொட்டு நறுமலர் வாசமோ டோட்டின்கட் சுட்டுவ தொப்ப வெனச்சொல்லு நீகண்ட விட்ட மிவற்றோ டியையல தென்றாள். |
619 | முன்னைய துள்ள பொழுதத்து மற்றதன் பின்னைய தில்லை யதுபெற்ற போழ்து தன்னையு மில்லை யெனச்சொல்லின் வாசனை யென்னை யியையுந் திறமிவை தானே. |
620 | ஓடு மலரு மொருங்குள வாதலிற் கூடும் வாசமுங் குற்றமொன் றில்லெனிற் கேடும் பிறப்பு முடனில்லை யாதலிற் கூடல வென்பது கூறின மன்றே. |
621 | கெடுவத னுண்ணின்று தோன்றுவ தன்கண் வடுவறச் செல்வது வாசனை யென்னப் படுவதொன் றன்றுநின் பக்கத்தை யெல்லாஞ் சுடுவதோர் கொள்ளி சுவடித்த வாறே. |
622 | போதின்க ணின்றும்புத் தோட்டிற் பொருந்திய தாதின நாற்றந்தண் ணீருக்குச் சொல்லுதி யோதன கந்த முடன்கெடின் வாசனை யாதின தாகு மறிந்துரை யேழாய். |
623 | வாசனை வாசனை யென்று வழிவழி நீசொன்ன நீசொன்ன நேர்வதிங் கென்செய்ய பாசன மாகிய பாதிரிப் பூவினைப் பூசின தெப்பொருள் போத்தந்து காட்டாய். |
624 | பூவின்கட் கேடும்புத் தோட்டின்கட் டோன்றியு மேவிய வாசனை யெங்குமுண் டாமெனின் சோபன மாகச் சுவாகதம் போந்ததென் றேவன் றிருந்தடி சிந்திமற் றென்றாள். |
625 | அதற்கு மறக்கே டுளதெனின் வாச மதற்குமுண் டாயினி யெல்லையின் றோடு மிதற்கெண்ணு மில்லெனி னில்லை யதற்கு முதற்சொன்ன குற்றம் முடிந்தன வாமே. |
626 | சென்றதென் றாலதன் கேடின்மை யாஞ்செல வின்றதென் றாலத னாற்றமு மில்லற்க நன்றிதென் றேசொல்ல நல்லது நாமறிந் தன்றிதென் றென்முனே யாருரைக் கிற்பார். |
627 | கேடது தான்முழு தாதலி னீசொல்லும் வீடது வாகலும் வேண்டும் விழுத்தவம் கூடு பவர்க்குங் குணமில் லவர்க்கு நீடல தேயுள தாநிரு வாணம். |
628 | தோற்றம் வழியென்று சொல்லுத லாற்றட மாற்ற மதுவிதன் மார்க்கத்து மாண்பெனச் சாற்றுதி யேலுந் சவறது வாதலைத் தேற்றுவன் கேணீ தெருண்டிருந் தென்றாள் |
629 | தன்வழித் தோற்றிக் கெடுமோ வதுகெடப் பின்வழித் தோற்றம் பெறுமோ விரண்டனு ளென்வழித் தோற்றம· தாமா றிருளற நின்வழித் தோற்றத்தை நீயுரை யென்றாள். |
630 | வழியொன்று தோற்றிக் கெடுமேன் மகப்பெற் றழிகின் றவள்போ லணைவுள தாகு மொழிகின்ற தேயது காணல தென்னிற் கழிகின்ற கன்னிக்கோர் காதலற் காட்டாய். |
631 | பிறப்பித்துக் கேடும்பின் றோற்றக் கெடலும் இறப்பவுங் கூடா திருதிறத் தானுந் துறப்பித்த வாறிது தூவெனக் கேட்டை மறப்பித் துரைத்ததுண் டோசொல்லு வாம. |
632 | சுலாப்பல சொல்லிச் சுழன்று விடாதே துலாத்தலைத் தூக்கமு மோக்கமுங் காட்டி னிலாத்தலை யல்லா விரண்டு ளொன்றுண்டா யிலாத்தலை யில்லே லமைவது மன்றே. |
633 | இல்லதற் கோயில்லை கேடென்னை காக்கையின் பல்லதற் கோதார் பருமையு நுண்மையுஞ் சொல்லிதற் காவதுண் டேலெனச் சொல்லின ணல்லதற் கல்லது நாப்பெய ராதாள். |
634 | துலாமில்லை யட்டக மேயது தானு மிலாமிரு பாற்றலை யேதலை தாமு நிலாம்வகை யில்லுயர் வோடிழி வெங்கும் கலாமவை யாய்க்கடை கண்டது பாழே. |
635 | ஓல குளவி குருட்டெண் ணெய் வாணிச்சி கோலஞ் சிதையுமென் றெண்ணெயட் டாளென்னும் பாலகர் பாட்டுரை போன்றது மற்றுநின் நூலுரை யெல்லா நுழைந்துணர் வார்க்கே. |
636 | கோற்றிர ளொன்றா யதன்றலைக் கேயுட னாற்றியு மோக்கமு நாட்டினை ய·தொப்பத் தோற்றமுங் கேடுந் தொகுபிண்ட மொன்றிற்குச் சாற்றுதி யாய்விடிற் றக்கதென் னேனோ. |
637 | தலையன தாழ்ச்சியு மெழுச்சியு மன்றி நிலையிலை கோலிடை நீக்கலு நீங்கு மிலையென வெட்டி னிடுகுறி யொன்றெனிற் பலவினி யிங்குப் படுவன கேணீ. |
638 | கோலுந் தலையு முடனில்லை யாமெனின் மேலு முரைத்தன மேயதன் மேற்பழி வாலுந் தலையு நடுவு மவையின்றிப் பாலும் படுவதோ ராவுள தென்னாய். |
639 | புணரிய தாமவை பொய்யெனச் சொன்னேற் குணர்வதங் குண்மையு மொட்டுவை யாயிற் குணகுணி யாயு மவயவி யாயும் பிணபிணக் கெய்துமப் போ¢டர் செய்தாய். |
640 | இருபிண்ட முப்பிண்ட மெண்ணில்பல் பிண்டம் வருபிண்ட மேற்பல மற்றவை நீங்க வொருபிண்டங் கொண்டாங் குயிர்க்குறுதி யிட்டுத் திருவுண்ட செய்கையிற் செய்தவ னாக. |
641 | வினைசெய்தான் றுய்க்குமோ வேறொருவ னேயோ வனைவரு மோவில்லை யோசொல்லா யோவென்னக் கனைகடலி னுண்மணலிற் கண்ணினையு மீந்தா னினைவகைய கேளென் றெடுத்துரைக்க லுற்றான். |
642 | அவனேயு மென்னேன் பிறனேயு மென்னே னவனும் பிறனு மவரேயு மென்னே னெவனேயு மெய்தா னெனலேயு மாகா வெவனோ விதுதுய்ப்பா னின்னணங்கே ளென்றான். |
643 | அதுவேயு மென்னேன் பிறிதேயு மென்னேன் அதுவும் பிறிது மவையேயு மென்னேன் அதுபோன்ற வல்ல ததன்வழியின் மற்றொன் றிதுபோல வென்பே னெடுத்துரையுங் கேணீ. |
644 | இடுபீச மன்றா லிறுங்காதி யன்றால் வடுவாய வவ்விரண்டும் வந்தனவு மன்றால் நெடிதாய தீங்கரும்பு நெல்லுமே போல நடுவாக நோக்காய் நறுநுதலா யென்ன. |
645 | ஆத்தாவ தன்றேற் பிறிதா மரும்பெற னாத்தான் வருத்த நீ நாட்டியதியாங் காணேன் போத்தாகா தேற்குதிரை பெட்டையது போலென் சாத்தாகு மாகாமை சாதிக்க வல்லையோ. |
646 | அவன்போற லானு மவனன்மை யானு மவன்றன் வழியா னவனாத லானு மவன்றான் பிறனே யவனென்ற லானு மவன்றான் பிறனே யெனவழிவ துண்டோ. |
647 | கண்போலக் கயலெனினுங் காடன்றித் தூறெனினும் பெண்பாலாற் பல்கியும் எல்லாம் பிறவேயாம். |
648 | அயலானே துய்க்கு மவன்றுவ்வா னென்பாய் முயலானு மில்லான் முகஞ்சிறிதே யொப்பான் வயலாமை போல்வதோர் மக்குளி யிலானென் றியலா தனவே யெடுத்துரைத்தி யென்றாள். |
649 | அயற்பிறனு மல்ல னவன்றானு மல்லன் புயற்றிறலைங் கூந்த லிதன்போலப் பிறனுக்கேல் முயற்பிறவி மேயினீர் முன்செய்தா னங்கோர் பயப்பெறுவ தில்லையேற் பாழ்பயனி தென்னோ. |
650 | தற்பிறிதே யாகிப் பிறபிறிது தானல்லா நெற்பிறிது போன்மெனவு நீயுரைத்தா ய·தொழிந்து சொற்பிறிது சொன்னாய் சுவர்க்கத் தவர்க்குரைப் பிற்பிறனே யாகிப் பெறப்பிறனே யாகானோ. |
651 | நெல்லின் வழிக்கரும்பு நீள்கரும்பி னானெல்லுஞ் சொல்லுநீ சொல்லாயேற் சொல்லியநின் சொல்லெய்தா வல்லனாய்ச் செய்த மகன்வழியி னான்மகன்றா னல்லனாய்ச் சொல்லின் னுலங்கரு வாமே. |
652 | செய்தானுஞ் செய்தானே துப்பானுந் துப்பானே யி·தாலென் மெய்ம்மை கிடந்தவா றென்றானுக் கெய்தார் பிறவோ விருசார் வினைப்பயனுஞ் செய்தார்க டாமெனலுஞ் சிந்தித் திருந்தானால் |
653 | கண்ணுந் தலையும் பிறவுங் கருந்தடியும் பெண்ணுங் கொடுத்துப் பிறர்க்கே யுழந்தாய்முன் னெண்ணுங்கா லின்னுநீ யெவ்வினையுஞ் செய்தாரை யுண்ணுந் திறமொன்று மோதா தொழிந்தாயோ. |
654 | எனைத்துணையு நீவருந்தி யெத்துணையோர் கால நினைத்திருப்பி னல்லது நின்காட்சி தன்னால் வினைப்பயத்தின் கூட்டம் விரித்துரைப்ப னென்னிற் றினைத்துணையு மாகாமை தோ¢துநீ யென்றாள். |
655 | முழுக்கேடு வேண்ட¡யேன் முன்ன¢ன்ற துண்ட¡ம் வழுக்குமே லவ்வுரைக்கு மாறுகோ ள¢·த ¡ மிழுக்காமை புத்த£ ரெனைப்பலருங் கூடிக் குழுக்கள¡ய் வந்துநுங் கோள¢றுமி னென்றாள். |
656 | நின்றே நிலையுமென¢ ன¢த்த¢யமே யாயொழியு மன்றேய· த¡யி லநித்த¢யமா மவ்விரண்டு மென்றே யுரைக்கில¢ரு வழிக் குற்றமுமா மென்றே யுரைக்கின்றா யேகாந்த ன¡குத¢யோ. |
657 | உச்சேதந் த¡னு மொருவகையா லவ்வகையே யச்சேத மின்மையு மவ்விரண்டு மாய்நிகழ்ந்து பொய்ச்சேத மல்ல¡ப் பொருண் முடிபொன் றுண்ட¡க மெச்சாயே நீயெனயான் மெச்சுவனே யென்றான . |
658 | இறைவன்ற னூலுணரி னெவ்வுருவி ன¡ரு முறையின¡ லெய்துவர்த¡ முன்ன¢ய வீடென்றாள் மறையின¡ ல¡யினு மற்றொருவா றேனு நிறையின¡ற் செல்லென்று நோ¢ழையுஞ் சென்றாள். |
ஆசீவக வாதம்
659 | கண்ணார் சிறப்பிற் கபில புரங்கடந்து விண்ணாறு செல்வாள் வியன்மலைபோற் றோற்றத்தாள் உண்ணால் வினையு மொருவி யொளிர்மேனி யெண்ணா துணர்ந்தானை யேத்தத் தொடங்கினாள். |
660 | அங்கம் பயந்தா னறைந்த சுதக்கடலுள் பங்கங்கள் சாராப் பரசமையர் சொல்லுளவோ பங்கங்கள் சாராப் பரசமையர் சொல்லேபோற் புங்கவன்றன் சேவடியைச் சேராத பூவுளவோ. |
661 | பூர்ப்பம் பயந்தான் புகன்ற சுதக்கடலுள் சார்த்திப் பிறவாத் தவநெறிக டாமுளவோ சார்த்திப் பிறவாத் தவநெறிக டம்மேபோற் றீர்த்தன் றிருநாமங் கொள்ளாத தேவுளவோ. |
662 | புலவ னுரைத்த புறக்கேள்வி சாரா துலக நவின்றுரைக்கு மோத்தெங் குளதோ வுலக நவின்றுரைக்கு மோத்தேயு மன்றிப் பலவும் பகர்வாப் பயந்தனவே யன்றோ. |
663 | அலரோடு சாந்த மணிந்தெம் மிறைவர் மலரடியை யல்லதியா மற்றறிவ தில்லை மற்றறிவ தில்லாத வெம்மை மலரடிகண் முற்றவே செய்து முடிவிற்க மன்றே. |
664 | புனையுலகிற் காதிய புங்கவ னார்த மிணையடியை யல்லதியா மின்புறுவ தில்லை இன்புறுவ தில்லாத வெம்மை யிணையடிக டுன்புறவி லக்கதியுட் டோற்றுவிக்கு மன்றே. |
665 | இரவிடைநன் மணிபோலு மண்ணா துணர்ந்தான் திருவடியே யல்லதென் சிந்தனையி லில்லைச் சிந்தனையொன் றில்லாத வெம்மைத் திருவடிக ளந்திணையில் பேராற்ற லாக்குவிக்கு மன்றே. |
666 | தொக்குட னாயவென் றொல்வினை தீர்கென முக்குடை யானடி மூன்றினும் வந்தித்துக் குக்குட மாநகர் நின்று கொடிமினிற் றக்கதிற் றான்போய்ச் சமதண்டம் புக்காள். |
667 | ஈண்டி யிருந்த விலிங்கியர் தங்கட்கு மாண்ட துகிலல்குல் மாதரிது சொல்லும் காண்டற் கினிதே கடிமலர்ப் பூம்பள்ளி யீண்டுறை வாரிவர் யாவர்கொ லென்றாள். |
668 | காரணம் வேண்டாக் கடவுட் குழாந்தன்னிற் பேருணர் வெய்திப் பெரிதும் பெரியவன் பூரண னென்பான் பொருவறக் கற்றவ னாரணங் கன்னாட் கறிய வுரைக்கும். |
669 | புயலிருங் கூந்தற் பொலங்கொடி யன்னா யயலியர் தாமல்ல வாசீ வகர்கள் வியலிடத் தியாரும் வியக்குந் தகையார் மயலறு காட்சியிம் மாதவ ரென்றான். |
670 | ஆத்தனு நூலும் பொருளு நிகழ்ச்சியும் பாத்தன சொல்லப் பயம்பெரி தாகலி னோத்துரை யேயிங் குரையென் றுரைத்தனள் சாத்திரம் யாவையுந் தன்னிக ரில்லாள். |
671 | என்றலு மற்கலி தானே யிறையினி ஒன்பது வாங்கதிர் நூல்யா முடையன மன்பெறு நுண்பொரு ளைந்தியல் பாயவை யென்ப நிகழ்ச்சியுங் காழ்ப்பா டெனச்சொல. |
672 | அறிந்தா னிறைவ னவனா குதலாற் செறிந்தான் பெரிதுஞ் செறியா துரைப்பி னெறிந்தா னனைய வியல்பா குதலான் மறிந்தான் றடுமாற் றகத்தே மயங்கி. |
673 | உரையா னிறைவ னுணலு மிலனாய்த் திரையா னரையான் றெரிவில் லுருவம் வரையா வகைவா னிடுவில் லனையன் புரையா வறிவிற் புகழ்பூ ரணனே. |
674 | அடங்கல் குறிக்கோண் முதலா யினவாய்க் கிடந்த கதிருட் கிளந்த பொருளுந் தொடங்கி யுரையாந் தொகையா குவதே யுடங்கே யுணுவைந் துருவா யுளவே. |
675 | நிலநீ ரெரிகாற் றுயிரி னியல்பும் பலநீ ரவற்றின் படுபா லவைதாம் புலமா கொலியொன் றொழிய முதற்காஞ் சலமா யதுதண் மையையே முதலாம். |
676 | எறித்தன் முதலா யினதீ யினவாம் செறித்த லிரையோ டிவைகாற் றினவா மறித்தல் லறிதல் லவைதா முயிராம் குறித்த பொருளின் குணமா லிவையே. |
677 | அணுமே யினவைந் தவைதா மனைத்துங் குணமே யிலவாங் குழுவும் பிரியு முணன்மே யினுமுள் புகுதல் லுரையேங் கணமே யெனினும் மொருகா லமிலை. |
678 | இவையே பொருள்கள் இவற்றி னியல்பும் சவையே அறியச் சிலசாற் றுவன்கேள் சுவையே யுடையம் மெனநீ யிகழல் லவையே பிறராலழிதற் கரிய. |
679 | அண்ணலு நூலும் பொருளுநிகழ்வு மிவையெனலு மெண்ணினு மேனை யெழுத்தினுமிக்காங் கிருந்தவர்முன் கண்ணினு மன்றிக் கருத்தினும்வேறெனக் காட்டலுற்றுப் பண்ணலங் கொண்டசொல் லாளவைபேர்த்தும் பகர்ந்தனளாய். |
680 | முற்ற வறிந்துரை யாதவன் மோனாந் திருந்தனனேற் செற்றம் பெரிது முடையனச் சீவன்க டம்மொடெல்லா மற்ற முடையவர் சொல்லின வாகம மன்மையினாற் பெற்ற வகையென்னை பேதாயதனைப் பெயர்த்தெனவே. |
681 | ஒக்கலி யோகலி யென்றிரு தெய்வ முரைத்தனவேன் மற்கலி யார்போ லறிந்தன வாயிற் செறிந்தனவாம் தக்கில வேயறி யாதன சொல்லுத றத்துவத்தை யிக்கலி யாள ருரைத்தவு மேதமெ னாய்பிறவோ. |
682 | அறிந்தா னறிந்தன தான்சொல்லினார்வச் சினத்தனனா யெறிந்தா னனையதோ ரேதத்தையெய்துமவ் வேதத்தினான் மறிந்தா னகன்றடு மாற்றத்தகத்தெனின் மாண்புணர்ந்தாய் செறிந்தாங் கிருக்கிற்பி னீயுஞ்சிற்றாத்தனை யாகிற்றியே |
683 | ஆத்த னறிந்தன யாவையுஞ்சொல்லல னாய்விடினிச் சாத்தனும் யானு மவன்றன்னிற்சால விசையுடைய நாத்தனை யாட்டியோர் நன்மைகண்டாலு நினக்குரைத்து மீத்தன முண்டு மிருமைக்குமேத மிலம்பிறவோ. |
684 | வானிடு வில்லின் வரவறி யாத வகையனென்பாய் தானுடம் போடு பொறியின னாதலிற் சாதகனா மீனடைந் தோடும் விடுசுட ரான்கதிர் வீழ்புயன்மேற் றானடைந் தாற்றனு வாமிது வாமதன் றத்துவமே. |
685 | முற்ற வறிந்தனன் யானென்றுமோனங்கொண் டேயிருந்தா னற்ற மகலவென் றானீயறிந்தமை யாதினினாம் பெற்ற வகையெனப் பேச்சின்மையாலெனிற் பிள்ளைகளும் மற்றிம் மரமு மலையுமம்மாண்பின வாம்பிறவோ. |
686 | முடக்கு மெனினு நிமிர்க்குமெனினுந்தன் மூக்குயிர்த்து நடக்கு மெனினு மிருக்குமெனினுந்த னல்லுறுப்பி னடக்கு மியல்பல்ல னன்னவற்றார்வத்த னாகுமன்றி யுடக்கு மிவையில்லை யேலுயிர்தானுண்மை யொட்டுவனோ. |
687 | நிலப்பாலு நீர்ப்பாலுந் தீப்பாலும் காற்றின் புலப்பாலு நெட்டுயிரின் போக்கில்லாப் பாலும் சொலற்பால வல்லாத சொல்லுதலால் யானு மலப்பா தொழியேனிவ் வாசீ வகனை யருகிருந்தார் தாமறிய வாசீ வகனை. |
688 | வண்ணாதி யெல்லாம் வகுப்பின் னிலப்பாலாம் நண்ணாத மூன்றிற்கு நன்பால் பிறவாகிக் கண்ணாதி யாலவற்றைக் காணப்பா டில்லையா யெண்ணாதே யிந்தியக்கோ ளெய்தாமை வேண்டும் எனைத்தும் பெறப்பாடு மில்லாத வேண்டும். |
689 | நீர்ப்பாலுந் தீப்பாலு நில்லா வளிப்பாலும் பேர்ப்பாலே பற்றிப் பிறப்பிறவா நீபெருக்கி யோர்ப்பி யாதுஞ்செய்யா துரைத்தா யுரைத்தமையிற் கூர்ப்பியாது மின்றிநின் கோளழியு மன்றே கொணர்ந்துநீ யைந்தென்ற கோளழியு மன்றே. |
690 | பொருடாமி வைந்தொழியப் போத்தந் துரைப்பா யிருடாமி வைந்தனு ளெக்கூற்ற தாமோ விருடாமி வைந்தனுளு மெக்கூற்று மில்லை லருடாழ்ந்து நீயிருப்ப தியாதின்பா லாமோ அணுமயமாங் கந்தங்க டாமனந்த மன்றோ. |
691 | பலவாக நீசொன்ன பாலெல்லாந் தம்முட் கலவாவா யப்பொருளே யாதலையுங் கண்டா லுலவாதோ வொற்றுமையும் வேற்றுமையு மென்றாற் சலவாதி யொன்றுஞ் சமழலையே கண்டாய் சமத்திடை யொன்றுஞ் சமழலையே கண்டாய். |
692 | பாறாம் பலவாகிப் பாலாகு மப்பொருளே வேறாது மில்லை யெனவே விளம்புவாய் நீறாக நின்ற நிலப்பால் பெறவேலா நாறா வகையெனக்கு நன்குரைக்கல் வேண்டும் நலிந்தாற் பிறபொருட்கு நாட்டலே வேண்டும். |
693 | இன்றேய தாயி னிவைபா லிவைபொருள்க ளென்றே பலவா வெடுத்துரைப்ப தென்செய்யக் குன்றோ மலையோ குவடோ வடுக்கலோ வன்றோவ தன்றால· தியாப்பாதல் வேண்டூம் அவையவையே சொன்னால· தியாப்பாதல் வேண்டும். |
694 | நோயில்லை வாழி கடவு ளெனவுரைத்தா னாயினோ யின்மையினேர்ந் தாய வழியொருநாட் டீயினும் வெய்யநோய் சேர்தலையுங் காண்டுநீ சாயினும் தத்துவத்தைச் சாராதா யன்றோ தடுமாற்றக் காழ்ப்பாடந் தாமுளவே யன்றோ. |
695 | கடுங்கதிரோன் மீதூரக் காணாக்கோ ளெல்லாம் படும்பொழுது மெழுச்சியினுந் தம்பயனே செய்யு நெடுங்காலம் பல்பிறவி நின்றன வெல்லா மொடுங்காதே மேய்ந்துண் டுழிதரலே வேண்டும் உதவாத வார்தலையு மொட்டலே வேண்டும். |
696 | எப்பாலுந் தான்கெடா வில்லனவுந் தோன்றாவென் றொப்பியாது மில்ல துரைத்தளியின் றானுண்ணும் துப்பாயதூச் சோற்றுத் தூய்தல்லா தாழ்ந்துளதென் றிப்பாவி செய்யு மிழிதகவி தென்னோ விழுதைதான் செய்யு மிழிதகவி தென்னோ. |
697 | நின்றீக கொண்டீக வுண்டீக தின்றீக வென்றிவைகள் கூறி யிடுவார்க் கறம்வேண்டான் கொன்றீகை தீதென்றுங் கொல்பாவ மில்லென்றுந் தன்றீகை யுண்ணாதான் றான்கண்ட தென்னோ தவத்தினு மில்வாழ்க்கை தான்கண்ட தென்னோ. |
698 | இல்லாத தோன்றா கெடாவுள் ளனவென்பாய் சொல்லாயே நெய்சுடராய்ச் சுட்டிடுமா றென்றேனுக் கல்லாந் தயிர்த்தோடி யாழ்மிதப்புச் சொல்லுதியா லெல்லாமொன் றொன்றிற் கிடங்கொடா வன்றே யிழிவுயர்ச்சிக் காரணமு மில்லாதா யன்றே. |
699 | ஓட்டுங் குதிரையு மொன்றே யெனிற்குதிரை யூட்டம் பொழுதொடுதான் புல்லுண்ணும் போழ்தின்கா னாட்டிய வீதி யதிசயத்தை நீயெமக்குக் காட்டி யுரைப்பினின் காட்சியைக் கோடும் கடவுட் குழாத்தார்தம் காழ்ப்பெலாங் கோடும். |
700 | வண்ண முதலா வுடைய குணமெல்லாம் எண்ணுங்கா லப்பொருளே லீந்தி னிளங்காய்க்கட் கண்ணினாற் கண்ட பசுமை கனிக்கண்ணுந் திண்ணிதாக் காட்டிற் றெருண்டாயே யென்றும் திரிந்தொழிந்த காட்டினாற் றேவனே யென்றும். |
701 | வட்ட முதலா வுடைய பொருளெல்லா மொட்டிநீ யப்பொருளே யொன்றும்வே றில்லென்பாய் தட்ட மழித்தோடஞ் செய்தா லதன்கண்ணும் விட்ட வடிவு விரித்துநீ காட்டாய் விகார மனைத்தும் விரித்துநீ காட்டாய். |
702 | மிதப்பனவு மாழ்வனவும் வேண்டுவனயா னென்னிற் பதப்பொரு டானான்கின் பன்மைமுடித் தாயா மிதப்பனவே யாழ்வனதாம் வேறியாது மில்லே லுதப்பேனு நின்சொ லுதவலவே கண்டா லுடனேநின் பக்க முடைத்திட்டாய் கண்டாய். |
703 | தொழிற்சொற் குணச்சொல் வடிவுச்சொன் மூன்றும் பிழைப்பில் பதமாப் பிரிவிடத்துக் காண்டு மிழுக்கில் பொருளோ டியைத்தக்காற் சந்தி யெழுத்தியலிற் கூட்டமு மெப்பொழுதுங் காண்டு மிலக்கண நின்சொ லியையலவே கண்டாய். |
704 | அதுவா வதுவு மதுவாம் வகையு மதுவாந் துணையு மதுவாம் பொழுதுஞ் சதுவா நியதத் தனவா வுரைத்தல் செதுவா குதலுஞ் சிலசொல் லுவன்யான். |
705 | அரிவை யவளாங் குழவி யவளை யுரிய வகையா லுவந்தாங் கெடுத்தா லரிய முழமூன் றளவாம் பொழுதும் வரிசை யுரைத்த வருட மதன்பின். |
706 | குழவித் திறமுந் துறவா ளவளும் முழுவித் ததுவும் முளையா துளதா மிழவெத் துணையு மியல்பேன் முடியா தழிவித் திடுவே னயநீ விரையல். |
707 | முலையும் மகவும் முறுவல் லவையும் தலையுண் மயிரும் முகிரும் முடனே நிலையில் லமையு மிலதா மெனினே யலையுந் நினகோ ளுடனே யெனலும். |
708 | உளவே யெனின்முன் னுரைத்தந் தியதங் களவே யெனலாங் கடையா மெனநீ கிளவா தொழியாய் கிளந்த குழவிக் களவே முழமா வவைதாம் பலவால். |
709 | உடையள் ளிவடன் னுதரத் தொருபெண் ணடையு மவளுக் கவளவ் வகையாற் கடையில் குழவி யவைதன் னியல்பா நடையு மதுவே னகையாம் பிறவோ. |
710 | இனியாம் வகையு மிசைத்தி யெனினுந் நனிகா ரணமாய் நடுக்கு நினகோட் டனிகா ரியமும் முளதேற் றவறா முனிலா மொருவன் பொழுதும் முடிவாம். |
711 | நியதந் நிகழ்ச்சிந் நியதா வுரைப்ப தயதி யெனினீ யமையுஞ் சலமேல் வியதி யெனினும் வெகுளல் இழுதை பயதி யெனினு நினக்கோர் பயனே. |
712 | பாலைப் பழுத்தி னிறத்தன வாய்ப்பல மாட்டொடுகண் ணாலெத் துணையு மகன்றைந்து நூறாம் புகையுயர்ந்து ஞாலத் தியன்றன நல்லுயி ரென்பது நாட்டுகின்றாய் மாலித் துணையுள வோநீ பெரிதும் மயங்கினையோ. |
713 | ஒன்றினு ளொன்று புகலிலவென்ற வுயிர்களெல்லா நின்றன தந்த மகலமுநீளமும் பெற்றனவாய் நன்றுநீ சொல்லுதி நாந்தொக்கிருந்துழி நல்லுயிர்க டுன்றின வென்பது சொல்லாதினியென்ன சொல்லுதியோ. |
714 | தானுள தாய வழியதன் றன்பா லியல்பெனலா மூனுள தாய வுயிர்ப்பிர தேச முணர்வதுபோல் வானுளம் போயுழி மன்னு மறிவிலை யேலதனை நானுள தென்றுரை யேனதற் கியாரினி நாட்டுகிற்பார். |
715 | ஒன்றென நின்ற உயிர்தானுருவின தாதலினாற் பொன்றுந் துணையும்பல் போழெய்தும்பூசணிக் காயினைப்போ லின்றெனி னாகம மாறதுவாமினி யவ்விரண்டு மின்றெனிற் சால வெளிதாம்பிறவத னின்மையுமே. |
716 | எண்டனை யாக்கி யிடவகை யுட்பொரு ளீறுசொல்லி மண்டல மாக்கி மறுத்துங் கொணரு மனத்தினையேற் கண்டிலை நீமெய்ம்மை காழ்ப்பட்டு நின்ற கனவுயிர்க்கெண் ணுண்டெனி னில்லை யகன்றடுமாற்ற முலப்பின்மைபோல். |
717 | மேற்சீர தீயோ டுயிர்காற்று விலங்கு சீராம் பாற்சீர நீரு நிலந்தானும் பணிந்த சீரா மேற்சீர மேற்போம் விலங்கோடு விலங்கு சீர்கீ ழாற்சீர வீழும் மவையென்னினு மாவ தென்னோ. |
718 | தீயு முயிருந் தமக்காய திசையி னாலே போயு மொழியா திவணிற்றல் பொருத்த மன்றால் வீயும் வகையும் வினையாக்கும் திறமு மெல்லாம் நீயு மவற்றை நினைவாயுள வாக வன்றோ. |
719 | தென்றை யதுளையத் திசைதானுறப் போய காற்றேற் பின்றை யொருநாட் பெயராததோர் பெற்றி ய·தான் முன்றை தழுவி முனிவாக்கும் வடந்தை யத்தா வின்றைப் பகலே யிதன்மெய்ம்மை யிசைக்கிற்றியோ. |
720 | முன்சென்று வீழுந் நிலநீரை முகிலு ணின்று பின்சென்று பெய்யுந் துளிதானும் பெருந்த வத்தா யென்சென்ற தெய்துந் திறந்தன் னையெனக் குணர நின்சென்ற வாற்றா லுரைத்தானெறி யாற்ற நன்றே. |
721 | பாலெங்கு மோதப் படுகின்ற பதப்பொ ருட்குக் காலங்கள் சொல்லா யதுதானுன் கணக்கு மென்றாற் சீலங்கள் காத்துக் குணனின்மையைச் செப்பு கின்றாய் மாலிங் குடையை யதுதீர்க்கு மருந்து முண்டோ. |
722 | நோயுற்ற நுன்போற் குணமொன்றில னாய யானும் பேய்மற் றிவடா னெனக்கண்டோர் பெரிய வன்றா னீமற்றி துண்ணென் றறநல்க விளங்கப் பெற்றேன் வாமத்து ணீயும் மதுபோலு மருந்தில் லையே. |
723 | நோயைத் துணிந்தே யுறுநோய்முத னாடியந்நோய்க் காய மருந்தே யறிந்தூட்டும· துண்டு காட்டிற் பாய மறுக்கும் படியாமது பல்லு யிர்க்கும் கூயத்தி னென்னை குரவருப தேச மென்றாள். |
724 | சாதி முதலாப் பிணிதாமிவை யப்பி ணியிற் காதி யறியில் லவைதீவினை யூண தனாற் றீதின் றிதனில் லழுந்தல்திரி தோடத் தினால் வேத னையது தீர்ப்பது மெய்யுணர் வாமே. |
725 | மானின்ற நோக்கின் மறவேனெடுங் கண்ணி னல்லாய் மேனின்ற வெல்லா மிகநல்லவிம் மெய்யுணர்ச்சி தானின்ற தன்மை தவிராதுரைக் கிற்றி யேனின் னூனின்ற வாறே பொருணோக்குவன் யானு மென்றான். |
726 | நின்ற விரலுந் நிலையாழ்ந்து முடங்க லாயிற் சென்றவ் விரலும் மெனத்தானின் கூற்ற தாயிற் றொன்றவ் விரலே யுறலுண்மையு மின்மை யும்மா மென்றவ் விரலே யிதுவென்றனள் வேற்க ணல்லாள். |
727 | ஆழ்ச்சி யொருபா லதுவல்லன தம்மோ டாழா தேழ்ச்சி யொன்பா லதுதன்னொடு மின்ன தென்னச் சூழ்ச்சி யமைந்த துணைத்தோளியர் சொற்க ளென்று தாழ்ச்சி மனத்தா லிதுதத்துவ மென்ற னன்னா. |
728 | பொய்ந்நின்ற வெல்லாம் புரைத்தாயினிப் பூர ணன்னே மெய்ந்நின்ற பெற்றி யறிந்தாயிதன் மேலு நன்றாக் கைந்நின்று முண்டுங் கடைப்பள்ளி வழியு மாக்கிச் செய்ந்நின்று நீசெய் தவந்தானெனச் செப்பி னளே. |
729 | கல்லா தறிந்த கடவுள்ளிறை யாகு மெய்ந்நூல் சொல்லானு மல்ல னவன்சொல்லின தாகு மும்மூன் றெல்லாப் பொருளுந் தம்பான்மை யியல்பு மேன்று பொல்லாத போக்கி யினிப்பூரண சென்மி னென்றாள். |
சாங்கிய வாதம்
730 | ஆங்கவன் சொல்லவவ் வத்தின புரத்து ளோங்க வொருகொடி நட்டுரைக் கிற்பவ னாங்க ணெவர்க்கு மறையென் றிருந்தவச் சாங்கியன் றன்னைத் தலைப்பெயச் சென்றாள். |
731 | சென்றா ளவன்றன் சிரத்தையைக் கண்டோத நின்றா ளவன்றா னெறிபகர் கின்றனன் பின்றான் பிரளையத் தாக்கமும் பேர்ச்சியு மொன்றா வகையா லுரைகளை யொட்டா |
732 | பாலொத்து நின்ற பரமாத் துமனொடு மூலப் பகுதியு மல்லாப் பகுதியு மேலொத் தியன்ற விதிவிகற் போடு நூலிற் கிடந்தவ நுண்பொரு ளன்றே. |
733 | ஒருங்கிருந் தார்கட் குடனவை யெல்லாம் பருங்கினன் மெய்யும் பராசரன் றன்னை விரும்பினள் போல வினவின ளன்றே யருங்கல மாய வறிவினுள் மிக்காள். |
734 | என்னைப் பயந்தீரி· தென்னெனக் கேட்டன ணன்னுத லாயிது வென்னெறி யென்றன னன்னன· தாயி னறிவி யெனச்சொல வின்னன கேளென் றெடுத்தனன் சொல்லும். |
735 | மன்னுயிர் தெற்றென வில்லது மான்செருக் கென்னவு மிந்திய மைந்தைந் தொருமன மன்னதன் மாத்திரை யைந்தைந்து பூதமும் பன்னிய வையைம் பதப்பொரு ளென்றான் |
736 | எத்திறத் தின்னுஞ்செய் யான்குண மொன்றிலன் றத்துவ னின்பன பேதன லேபக னித்திய னெங்கு முளனெடுங் காட்சியன் றுத்த லுடையனென் றோன்றலு மென்றான். |
737 | நின்று பரந்தரு வாய்ப்பொறி யேதுமிக் கொன்று கிரிகையின் றப்பியத் தம்மது சென்று செய் மானிற் செருக்கத்தி னீரெட்டு மன்றியு மைவகைப் பூதமு மன்றே. |
738 | நின்று பரந்தரு வாய்ப்பொறி யேதுமிக் கொன்று கிரிகையின் றப்பியத் தம்மது சென்று செய் மானிற் செருக்கத்தி னீரெட்டு மன்றியு மைவகைப் பூதமு மன்றே. |
739 | கதக்களி யானைமுன் கல்லெறிந் தாற்போற் பதப்பொரு டம்மைப் பழுதென் றுரைப்ப மதத்தினின் மிக்கவன் மாதரை நோக்கி யுதப்பென்னுங் குற்ற முரையெனக் கென்ன. |
740 | செய்யா துயிரெனச் செப்புகின் றாய்நின்னை வையா யுயிருள தன்றெனின் வாக்கிவை மெய்யாம் பிறசெய்கை யாதலி னாலிவை மையா மினிநின்றன் மார்க்கமு மன்றே. |
741 | எத்திறத் தின்னுஞ்செய் யானவ னென்றலிற் றத்துவஞ் சொல்லுந் தலைமக னாகிய சித்தியு மில்லாந் திருட்ட விரோதமும் பொய்த்தலுள் ளிட்டவும் புல்லுமற் றென்ன. |
742 | பெருமை யுயிர்க்குரை யேன்செய்கை பின்னும் இருமை யுயிரென தாமிடை யொன்றுங் கரும வுயிரு மிவற்றினி னன்றே யருமை யுடைச்செய்கை யாக்கமு மென்றான் |
743 | செய்யு முயிர்களுஞ் செய்யா வுயிர்கனும் மெய்யி னுளவெனின் மேற்கோ ளழிதலும் பொய்யும் பொதியறை மையுமற் றல்லவு மெய்து மிதற்கினி யென்செய்தி யென்றாள். |
744 | சோம்பன் குணமிலன் றோன்றா வொளிப்பின னோம்பற் கருமையி னுண்ணுமாற் றானுயி னாம்பின்னைச் செய்ததெ னன்கவ னின்றியும் போம்பொழு தேலவ னாற்பொரு ளென்னோ. |
745 | ஆண்டரு வாய்த்தொழில் யாதுமில் லாயின் வேண்டின்மெய் யாகி விகிர்தி விகற்பொடு தீண்டலு மொட்டலுந் தோ¢னி லாதவன் காண்டற்குந் துத்தற்குங் காரண மென்னோ. |
746 | முத்தாத் துமனை முனிந்தோ வதுவன்றிப் புத்தாத்து மாக்கட் புரிந்தோ விரிந்தெங்குஞ் சித்தாத் துமனாய்த் திரிவின்றி நின்ற சுத்தாத் துமைச் சுழற்றுவ தென்றாள். |
747 | பரமாத் துமனைப் பளிங்கடை போல வருமாத்து மாக்களின் மன்னும் விகாரம் தருமாத் திரையன்றித் தக்கதொன் றாக வொருமாத் துமனை யுரைத்திடு கென்றாள். |
748 | செல்லு மெனினுஞ் சிதையுஞ் செல்லானென்று சொல்லு மெனினுமுன் சொல்லிய தாமெய்தும் பல்லுநுன் னாவும் பதையா துரையன்றி யெல்லுந் துணையு மிருவினை யென்றே. |
749 | யானென தென்னுஞ் செருக்கினை யீன்பது மானெனப் பட்டது மன்னுமோர் சேதனை தானினை யாக்குத றக்கின்ற சேதனை மேனினைத் தானுரைத் தானல்ல னென்றாள் |
750 | மான்றான் பகுதி வழித்தோ வழித்தன்றித் தான்றான் பிறிதோர் பொருளோ யிரண்டொடு மூன்றாவ தொன்றினி யின்றா விருந்தவிச் சான்றா ரறியவுஞ் சாற்றினி யென்றாள். |
751 | முதற்பொரு ளேயாங் குணமது வாகின் அதற்பிறி தென்னி னதுமனனு முண்டா லிதற்கினி நீசொலற் பாலதென் னென்றாள் சுதப்பொருண் மேனன்றுஞ் சொல்லுதல் வல்லாள். |
752 | அருவாய காரண மாயவ் வியத்த முருவா மறுதலை யொப்பிக்கு மென்பாய் மருவாத சொல்லினை மாதிரந் தானே பருவாய்ப் பதக படைத்திடு மென்னாய். |
753 | பகைக்குண மாகிய பகுதி விகுதி மிகைக்குணந் தோன்றுநின் மேற்கோ ளழித்துத் தொகைக்கணம் யாவையுஞ் சூனிய மாமா நகைக்குண மல்லது நம்பலை யென்றாள். |
754 | புத்தேந் திரியமுங் கம்மேந் திரியமும் பத்தேந் திரியத்தோ டொன்றாய்ப் படைத்தனை பித்தேந் திரியமும் பேயேந் திரியமும் குத்தேந் திரியமுங் கொண்டிலை யன்றே. |
755 | தந்திர மாவன தாமிடைத் தோன்றுவ வந்தர வாத்துவ னைந்தென வேண்டினை சிந்தனை யுள்ளிட்டுச் சீவன் குணமெனி னிந்திரன் றானு மிணைநுனக் காமோ. |
756 | கைகளுங் காலு மிருசா ரிடக்கரு மெய்திய வாக்குமற்றிந்திய மாமெனிற் செய்யும் புலனு மறியு மறிவுமற் றெய்த வுணர்ந்திங் கெடுத்துரை யென்றாள். |
757 | காட்டிய வாறுங் கருமத்தி னாமெனி னூட்டு முலையு முதடும் புருவமு மாட்டுங் கவுளு மறமெல்லும் பற்களும் கூட்டி மிடறுங் கொளக்குற்ற மென்னோ. |
758 | ஐந்துதன் மாத்திரை தாமணுவாற் றொடர் கந்தங்க ணாதியிற் காம்புல னேயவை வந்துபெருகி வரிசையி னான்மிகும் புந்தியி னால்வகைப் பூதமு மென்றாள். |
759 | ஒன்றாய்ப் பரந்திவ் வுலகு மலோகமுஞ் சென்றாய்க் கிடந்த தசேதனை தானென்று மன்றா யருவா யதுவவ்வா காயமு மென்றா ளெழினெடுங் கண்ணிணை நல்லாள். |
760 | தானரு வாய பொருளது வாமொலி மேன்மரு வாதுரு வாதலி னான்மெய்ம்மை நூன்மரு வாதுசொன் னாயிது வென்றனள் மான்மரு வாவந்த நோக்கு மரியாள். |
761 | பகுதியின் மானில்லை யி·தினு ம·தில்லை தொகுதிசெய் பல்குணந் தோற்றமு மில்லா மிகுதிசெய் பூதத்து மெய்ம்மை பெறாமற் றகுதியின் றத்தநின் றத்துவ மென்ன. |
762 | குருடனும் பங்குவுங் கூட்டத்திற் கூட்டிப் பொருடம் தாக்கமும் போத்தந் துரைப்பிற் றெருட லிலையவர் செய்கையிற் செய்கை யிருடன்னை யின்றி யிவையெய்து மென்றாள். |
763 | எவ்வகை யின்னும் விகார மிலாப்பொருட் கிவ்வகை தம்மை யெடுத்துரை யென்செயும் மெய்வகை யாலொப்பின் மேற்கோண் முதலிய வவ்வகை யெல்லா மழிவுள தாமே. |
764 | கூடியு மாகாக் குணத்தின் நீயவட் பாடி யுரைத்த வுயிரும் பகுதியும் பேடிகள் சாரினும் பிள்ளை பெறாமையை நாடியுங் காணென்று நன்னுத னக்காள். |
765 | இல்லுளி யின்றிமற் றெங்கு மிவைமுன்னும் புல்லின வேயாற் புணர்ச்சி புதிதெனச் சொல்லின தென்செயத் தோற்றப் படுபொருள் பல்லன தாமவை பண்டு முளவே. |
766 | ஆட லழித்தல் படைத்த லடங்குதல் வீடுபெற் றாங்கண் விளங்க நிலைமையுங் கூடிய வைந்து குணத்தின னாதலி னாடிய குற்றங்க ணண்ணல வென்ன. |
767 | ஓதிய வெல்லா மொருவனி னங்கொரு நீதி வகையா னெறிமைப் படுதலும் வாதுசெய் வார்கள் பிறராய் வருவது மூதிய மில்லை யொழியென் றுரைத்தாள். |
768 | யானை குதிரை முதலாப் படைகுடி யேனைய தாங்களு மெல்லா மவனெனிற் றானென்று மாள்வது தன்னை யெனினங்கள் கோனிவ னாமெனக் கூறினார் யாரோ. |
769 | என்னை யொழித்தினி யெல்லா மவனெனச் சொன்ன முறைமைய னாகு மவனெனிற் றன்னை யொழித்துத் தபுத்துடன் றின்றிடிற் பின்னை யவனையோர் பித்தனென் னாமோ |
770 | தன்கையிற் றன்கண்ணைத் தானே பொதக்குத்தி யென்செயக் குத்தினை யென்பார் பிறரில்லை தன்கையிற் றன்கண்ணைத் தான்பொதக் குத்துவ தென்செய வோவிதன் காரணஞ் சொல்லாய். |
771 | தன்னைப் படைப்பின்முன் றானின்மை யாலில்லை பின்னைப் படைக்கிற் படைக்கப் படுவதின் முன்னைப் படைப்பென் முடிவில்லை மூடனே நுன்னைப் படைத்தவர் யாரினி நோக்காய். |
772 | கொன்றுகொன் றிட்டுத் தவஞ்செய்யி னத்தவம் பொன்றுமற்றாதலி ன·தும் பொருத்தமின் றின்றிதின் றிட்டுப் படைப்பிற் றெருட்சிமற் றென்று மிலன்பெரி தேழையு மாமே |
773 | ஓர்ப்பவன் சொல்லவ னூனவன் றீனவன் றீர்ப்பவ னோயவன் சீறு மவனுயிர் நீப்பவன் சாபவ னீப்பவ னேற்பவன் பேர்ப்பவ னாயும் பெறுகின்ற தென்னோ. |
774 | நாயாய்க் கடிக்கு நரியாய்ப் பலகொல்லும் பேயாய்ப் புடைத்துண்ணும் பெற்றமு மாய்க்குத்து மீயாய் நலியு மெறும்பாய்த் தெறுமெங்கும் தீயா னொருவனின் றேவனு மென்றாள். |
775 | வீடு தலைபெற வெந்துநெஞ் சாண்டிடத் தாடி தவஞ்செய்த தன்கா லழித்திடப் பாடிய கையிற் படைக்கு மிவனெனின் மூடர்கட் டேற்ற முடிவுமுண் டாமோ. |
776 | நித்திய மாய பொருணின வாதலின் வித்தினு ளுண்டென வேண்டுதி நீள்பனை யெத்துணை யோவது வென்னினு நுன்கைக்கு மித்துணை யுண்டென்ப தென்னைகொ லேழாய். |
777 | இப்பொழு தில்லை யெதிரதற் குண்டெனி னப்பொழு துண்மையு மின்மையு மாக்கி னெப்பொரு டாங்களு மின்னன வேயெனச் செப்பினள் தத்துவஞ் சேயரிக் கண்ணாள். |
778 | உருவோ டருவமா காயமு மூன்று மிருபதின் மேலுமைந் தாக விசைத்தனை யருவோ டலோக மசேதன மூன்றிற் செருவோ டுரிமையிற் சேர்பவு மன்றே |
779 | ஒன்றொன்றி னொன்றி யுலகுள் வழியெங்குஞ் சென்றவ னுண்மை பகுதி யிதுமன்னு மென்றனை யெண்முறை யறிமற் றீண்டுபு நன்றன வீறா நிலமுத னான்கே. |
780 | பத்தனை யாய்நின் பரமாத் துமனையுஞ் சித்தனை யாகக் கருதியல் சீவன்கட் கத்தன்மை ஞானமு மென்னா யவனுக்குத் துத்தலுங் காண்டலுஞ் சொல்லினை யன்றோ. |
781 | வண்டார் குழற்பெயர் மாணிழை யிற்றெனக் கொண்டே னெனவவன் கூறினன் கூறலும் பண்டே லறியெனப்பராசர நீயினிக் கண்டா யெனச் சொல்லிக் காட்சி கொடுத்தாள். |
782 | ஐந்து மிருபது மாகிய சொற்பொரு டந்திவை யல்லது தத்துவ மில்லென்ற சிந்தை யொழித்துச் சினவரன் சேவடி வந்தனை யேசெய்து வாழிநீ யென்றாள். |
வைசேடிக வாதம்
783 | ஆட்டினா ளவனையு மாக்கிச் செல்பவள் வீட்டினார் நெறியென விரித்த மேலையோர் காட்டினார் பலருளுங் கணாத னேயெனு மீட்டினா னுலோகன திடத்தை யெய்தினாள். |
784 | வனப்புடை மாதரைக் கண்டு மாதவன் சினப்புடைக் கருத்தின ளென்னச் சிந்தித்தே நினக்கினி நெறிவயி னின்ற மெய்ம்மையை மனக்கொளக் கிளக்குவேன் மன்னுங் கேளென. |
785 | நெறியெனப் படுவது நின்ற மெய்ம்மையங் கறிதலுக் கரியன வாறு சொற்பொருள் செறியயான் சொலிற் றிரப்பியங் குணந்தொழில் பொறியினாய் பொதுசிறப் புடன் புணர்ப்பதே. |
786 | பூதமைந் தொடுதிசை மனம்பொ ழுதுயி ரோதினப் பொருள்கடா மொன்ப தாமவை நீதியிற் குணமவற் றியல்பு செய்கையும் போதரும் பொருட்புடை பெயர்ச்சி யாகுமே. |
787 | பெரியதும் பின்னது மாய தப்பொது உரிதினிற் பொருள்களைச் செலுத்து மொற்றுமை தெரிவுற வருவது சிறப்ப தாங்குணக் கிரியைக ளிதற்கெனக் கிளத்தல் கூட்டமே. |
788 | ஆறின் முதன்மூன் றத்தி மற்றவற் றீறின் மும்மையு மின்மையை யெய்தின கூறின பொருள்களுங் குணனுஞ் செய்கையும் வேறென விரித்தனன் விசேட வாதியே. |
789 | தத்துவ மிவையெனத் தலையுந் தூக்கினாட் கொத்ததன் றோவென வுரைநல் லாயினி யித்தவ மிப்பொரு டேறி யான்செயிற் பொய்த்தவ மாதலிற் போவ னென்னவே. |
790 | மெய்ந்நெறி யிதுவென விரிப்பக் கேட்டிருந் திந்நெறி யமைதியின் றென்னுஞ் சொல்லினாய் பொய்ந்நெறி யாதலைத் தேற்றிப் போகெனக் கைந்நிறுத் தாளது காட்டக் கேளென. |
791 | நிலமுதற் பூதமாய் நின்ற நான்மையுங் குலமுதன் மூர்த்தியாய்க் கூறி னொன்றவை யலமுதற் பொருள்களாய்ப் பன்னி னாயவை வலமுறை யிடமுறை வருதல் காட்டுகோ. |
792 | உரியதோர் நீரணைந் துப்ப தாகுநெய் யெரியெழு முளர்ச்சியா லிரைக்குங் காற்றதாம் பெரியதோ ருருமுநீர்ப் பிண்டம் வந்துநீ¡; வரிசையிற் படலமாய் வந்த வல்லவோ. |
793 | ஒலியதன் குணமென வுரைத்தி யாதலால் வலியுடை நிலையில மற்றெப் பூதமும் ஒலியொடு முதறம்முட் புல்ல லின்மையாற் கலிசெய லொழிகநின் காய மென்றனள். |
794 | சுட்டின திசைத்திறஞ் சொல்லிற் சூரியன் பட்டது மெழுந்ததும் பற்றி நான்குமாய் யெட்டெனப் பலவென வின்ன தன்மையாற் கட்டினர் வழங்கினுங் காய மெய்துமே. |
795 | மண்டிலம் பலரையு நிறுவி மத்திமங் கொண்டுநின் றான்றிசை கூறு மின்னென வெண்டிசை யவன்வயிற் பிறக்கு மென்பவேற் கண்டில நின்பொருள் காட்ட வல்லையோ. |
796 | அத்திசை யவனுமா யல்ல னும்மென வெத்திசை யவர்களு மிசைப்பி னேகநீ பத்திசெய் தினியென்னைப் பரமன் பாதமே சித்தியு முடிவெனச் சேர்ந்து வாழ்தியே. |
797 | மன்னுமம் மனமெனப் படுவ தாவதே யின்னுயி ருருவினோ டியைந்த வொற்றுமை யின்னுமக் காலமு மிருமைத் தாகலி னின்னுடைப் பொழுதவ ணிற்ற லில்லையே. |
798 | குணங்களுந் தொழில்களுங் கூறி வேறெனிற் பிணந்தனைச் சீவனாய்ப் பெற்ற தென்னையோ வுணர்ந்தில னுரையுமொன் றிலனெனி னுறுதிநாம் புணர்ந்தில மவன்வயிற் போந்த தில்லையே. |
799 | எப்பொரு ளெக்குணத் தானு மில்லையே லப்பொரு ளக்குணத் தயல தாதலாற் செப்பிலக் குளிரினாற் றீய துண்மைபோற் றுப்பெனப் பொருள்களுந் தோற்ற மில்லையே. |
800 | குணத்தொடு குணிகளைக் கூறி வேறெனப் புணர்ப்பதோர் பொருளினை வேண்டிற் பொய்யெனிற் குணத்தொடு குணிகளுங் கூட்ட மின்மையா லுணர்த்துதற் கரிதவை யுளவு மல்லவே. |
801 | ஒன்பதுந் தத்தும துண்மை யாற்பல வென்பது மெனைத்தென வெண்ணப் பட்டதும் வன்பிதன் குணமிது வென்னப் பெற்றது மன்பதற் குடைமையி னறியப் பட்டதே. |
802 | அதனது குணமதற் கயல தாதலா லிதனது குணமென விழுக்கிற் றென்னையோ உதனமு முணர்விலை யொன்ற தென்றக்கால் விதனமும் படாயது மெய்யு மாகுமே. |
803 | கெடக்கெடும் பொருளெனிற் கேடு முண்டெனப் படப்பெறு மதற்குநி பரிவ தென்னையோ வடக்குந்தன் றோற்றமு மொட்டி மும்மைய மடக்கிலு மதுபெரி தழகி தாகுமே. |
804 | குணங்கடாங் குணியெனுங் கூற்று முண்மையிற் பிணங்கலாய்ப் பொருள்வயிற் பேறு முள்ளதே யிணங்கலா யிருமைய தின்மை யுண்மையும் வணங்கலாம் வகையதோர் மாட்சி மிக்கதே. |
805 | பண்பினாற் பொருள்களுக் காய பல்பயஞ் செண்பினா னறிவினான் செறிவி னானென மண்பொனாற் குணநிலைக் காய மாட்சியா நண்பினா னல்லது நடத்த லில்லையே. |
806 | விலைபெறு நன்மையால் வெறுப்ப தீமையால் கொலைபெறுங் களவினாற் குணத்தி னக்குண நிலைபெறும் பொருளினா னின்ற வொற்றுமை யலைபெறும் வேறெனி னாவ தில்லையே. |
807 | நல்வினைப் படுதலுந் தீவினைப் படுதலும் பல்வினைப் பாகினாற் பயங்க ளெய்தலு மில்வினைக் குணங்கடா மென்றும் வேறெனிற் சொல்லில சுழற்சியும் வீடுந் தோற்றமே. |
808 | ஆட்டுடை யாடன வாட றாங்களு மோட்டுடைக் குதிரையு மோட்டு மென்றின்ன கூட்டிய வப்பொருட் கொடைய வாதலான் மீட்டவை யொன்றென வேண்டல் வேண்டுமே. |
809 | கூத்த ராடலுங் குதிரை யோடலு மோத்துரை யுள்பட வொழிந்த யாவையு நீத்தன வேயல்ல நிலையு முண்மையிற் போத்தரல் வேண்டினப் பொழுதி னாகுமே. |
810 | பிணங்கல வாய்த்தம்முட் பிறக ளாகிய குணங்களுந் தொழில்களுங் குழுமிக கெட்டன புணர்ந்துடன் பொருள்வயிற் போந்த வாறுநீ யுணர்ந்திலை யதுவுநின் னுடைய தேபிற. |
811 | பாதுவெலாப் பொருளொடும் பொருந்தி நின்றதே லதுவெலாப் பொருள்களை யாக்கு மொற்றுமை யிதுவலா லவைதம்மு ளியைத லில்லையேல் செதுவலாம் பிறவது சென்ற தென்றலே. |
812 | அன்றியும் பொதுவது வந்தமில் பொருட் சென்றதே யென்றலாற் சிதர்ந்து பன்மையாய்க் குன்றியுங் கூடியு நின்றுங் கொள்பய மின்றியும் போதலா லென்னை யாயதோ. |
813 | பொதுவெனப் படுவதோர் போலி யாதலாற் பொதுவெனப் படுவன போன்ற தாங்களே யதுவென மீட்டிருந் தாறென் றெண்ணுவா யிதுவென வென்னையிங் கிதனோ டேழெனாய். |
814 | சிறப்பெனப் படுவது தெரியி னப்பொரு ளறப்பெற நின்றவக் குணம தாதலின் இறப்பவு மிதுதன தின்மை யேயினாய் புறப்படுத் திடுவனுன் பொருள ளெண்ணலே. |
815 | கூட்டினா லல்லது கூட்ட மில்லையேற் கூட்டுவான் செல்வதுங் கூட்ட மில்லையே பாட்டினாற் பலவுமாம் பயமி லாதன மூட்டினா லுரைத்தியோ முனிவு போக்கிதோ. |
816 | கொக்கொடக் கருமையைக் கூட்டு வித்தலுஞ் சுக்கொடத் துவர்ப்பினைத் துன்னு வித்தலுஞ் சிக்கென வேற்றுமை தீர்ப்பி நீயென நக்கன ளளியனோ நயவ னென்னவே. |
817 | என்றுமப் பொருள்களு மியல்புந் தங்களோ டொன்றென வருதலா லொன்று மாகுமே யென்றலி லிருமையுந் தெரியி னின்மையா லின்றினிக் கூட்டுவ தில்லை யில்லதே. |
818 | ஒன்றுநற் பொருள்கடாங் குணங்க டாம்பல வென்றுநீ யேகம் வேறென்ப தென்னெனப் பொன்றுமக் குணமெனிற் பொருட்கு மாமென நன்றினிக் குணமுண்மை நாட்ட மாமென. |
819 | குணிக்கணா னோக்கினாற் குணங்க ளில்குணத் தணிக்கணா னோக்கினா லதுவு மன்னதே பிணிக்கலாம் பிரிக்கலாம் பெற்ற நான்மையிற் றுணிக்கலாந் துருநெறி துன்னு நன்மையே. |
820 | இல்லையக் குணங்குணிக் குண்மை தானெனச் சொல்லினக் குணிகுணத் தொன்று மாதலா லல்லதக் குணங்களு மவைக ளாமென நல்லதித் துணிவென நயத்தி லெய்தினான். |
821 | பொருளொடக் குணந்தொழிற் குண்மை யொன்றெனத் தெருள்வது மும்மையிற் றெரிய வைப்பது மருளுடை யறநெறி யண்ணல் சேவடி யிருள்கெட நினைத்தலு மினையை யாகென. |
822 | ஓம்படுத் துலோகனை யொழியச் சொல்லியான் காம்புடைக் கடநெறி கடப்ப னென்னவே பேம்படுப் பவரொடும் பிரிவின் னாமையைத் தேம்படு கிளவிநீ சிந்தி யென்னவே. |
823 | ஒக்குமவ் வுரையென வுள்ள தேயென நக்கன ளாகிய நாதன் சேதியஞ் சிக்கென வேத்துதல் சிறந்த தென்னவே தக்கதென் றவன் சொலத் தானு நீங்கினாள். |
வேத வாதம்
824 | காதம் பலவும் கடந்தபின்காகந்திக் கடிநகருள் வேதமு மங்கமும் விச்சைகணிலைமையும் வேண்டுநர்கட் கோதவுங் கேட்பவு முரைத்தலினுலகினு ளறியப்பட்டான் பூதிக னெனப்படு மந்தணனோத்திடம் புக்கனளே. |
825 | என்னை யிங்குநும் பொருளெனவினவலு மிவ்விருந்த வன்னைதன் வரவிதே லாதியிலருமறை யதுமுதலாப் பின்னைவந் தனகளு மிவையெனப்பையவே யெர்த்துரைத்தான் முன்னமங் கிருந்தவோர் முதுமகனவைதன் முறைமையினே. |
826 | நாத்திக மல்லது சொல்லலையாயின்மு னான்பயந்த சாத்திர மாவது வேதமன்றோவது தான்சயம்பு சூத்திரி நீயது வல்லையலாமையிற் சொல்லுகிறாய் போத்தந்தி யோவதன் றீமையென்றான்பொங்கிப் பூதிகனே. |
827 | பூதிகன் றானது சொல்லலும் யானது வல்லனெல்லாம் சாதிகண் டாயெனத் தான்றள ராது சாற்றுகென்றாட் காதியென் றானுமோ ரந்தமென்றானுமுண் டேலதற்கு நீதியி னாலுரை நீயினி யானது நேர்வ னென்றான். |
828 | செய்கையும் புதுமையு முடைமையிற்றிருட்டத்தின் மறுதலையிற் பொய்யொடும் பொருளொடுங் குவகொடுஞ்சாலவும் பொருந்துதலின் மையறு மயக்கமு மாற்றொடுகொலைமன்னு மருவுதலின் ஐயமி றீக்கதிச் செலுத்துவததுவென்னை யாவதென்றாள். |
829 | யாரது செய்தவ ரறியிலிங்குரையெனி லங்கொருவ னூரது நடுவணொ ருஐறயுளில்மலம்பெய்திட் டொளித்தொழியிற் போ¢னு முருவினும் பெறலிலனாதலின் றாக்குறித்துத் தோ¢னு மினியது செய்தவரில்லெனச் செப்புவவே. |
830 | தோற்றமு நாற்றமுஞ் சுவையுடனூறிவற் றாற்றொடங்கி யாற்றவு மாயிரு வேதம்வல்லார்கள· தறிந்துரைப்ப மேற்குலத் தாரோ டிழிந்தவரென்பது மெய்ம்மைபெறா நூற்றிறஞ் செய்தவ ரறிகுவர்நுழைந்தறி வுடையவரே. |
831 | முயற்சியி னிசைத்தலி னெழுத்தினிற் பதத்தினின் முடிவதனால் செயற்பட லுடையத னியற்கையிற்செய்தவர் பெயர்பெறலா லியற்கைய தன்றுநின் வேதமென்றேதுவி னெடுத்துரைத்தாள் புயற்றிற லிகலிய கூந்தலின்பெயருடைப் புலமையினாள். |
832 | கதியவர் தம்பெய ரின்னவைசுட்டின காட்டலினு முதியவர் நாள்களொ டொப்பிலவிப்பொழு தொத்தலினும் விதியது வாதலின் வேதத்தையாஞ்சொல்லுங் கீதத்தைப் போற் புதியது வேயெனச் சொல்லுதுநாமது பொருந்து மென்றாள். |
833 | கொல்வது தீதெனப் பொருள்வழிவேள்வியிற் கொலப்படுவ வெல்லையொன் றிலதென்ப விணைவிழைச்சொழிகென்ப வம்முகத்தாற் செல்கதி யுளதென்ப தீர்த்துகநெறியென்றுந் தீயவென்று பல்லவர் துணிவுமெம் வேதத்தினுளவெனப் பயின்றுரைப்ப. |
834 | சாதிக்கட் பயவா தவப்பயந்தருமெனத் தந்துரைப்ப வாதிக்க ணான்வழி நால்வரதமைதியை யமர்ந்துரைப்ப சூதித்த தோற்றமும் பிழைப்பெனச்சூத்திரப் பிறவிகொள்ளார் வாதித்த வாறென்று தெருண்டவர்க்கிவையிவை மயாமயக்கே. |
835 | மறுதலை தத்தமு ளாக்கிமயக்கமுஞ் செய்தமையாற் பெறுதலை யென்னைகொ றத்துவந்தனையன்று பறுமுண்டே யுறுதியுஞ் சால்பு முடையனயாவையு முண்மையினாற் செறுதலை யேவில்லை சீர்த்தனசெய்விக்குஞ் சிட்டிதுவே. |
836 | வசுக்களொ டுருத்திரர் பிதிரரோடிவர்முத லாப்பலர்க்கும் பசுக்களோ டெருமைகள் குதிரைகள்புலியொடு நாய்முதலா விசுக்கிழிந் தனபல கொலைகளுமிரங்கலிர் கொன்றவரை யசிப்பவர் போன்றனி ராயினுமருவினை யாநுமக்கே. |
837 | தேவரும் பிதிரரும் நுதலிய கொலைகளிற் றீவினைதா மேவர வல்லன வேண்டுவல் யானென வேண்டுதியேல் யாவரையு நுதலியு மவரவர் செய்தன வவரவர்க்கே யாவரி னடையுமவ் வருவினை நுமக்கறி வரியதென்றாள். |
838 | ஊட்டுதும் யாமென் றுமர்களைநுதலியோர் சாலைவைத் தால் வீட்டினங் கிடலின்றி வினைநிலைநுமக்கறி வரியதுபோல் கூட்டிமற் றவர்களை நுதலியகொலைவினை தங்களையுங் காட்டுகில் லாரவர் தாமவையறிவதோர் கணக்கிலரே. |
839 | சிறந்தவர் தங்களுக் கெய்துகசென்றென்னுஞ் சிந்தையரா யறம்பல செய்தவர்க் கல்லதங்கவர்களுக் காகுமென்றாற் றுறந்தவர் வீடுபெற்றார்களைநுதலிய தொடர்வினையும் பிறங்கியிப் பிறவியிற் போக்குமற்றிவையென்ன பேதைமையே. |
840 | நண்பரை நுதலியும் பகைவரைநுதலியு மமிர்தொடுநஞ் சுண்பவர்க் கல்லதற் கவர்களுக்காமென வுரைக்குநர்யார் பண்பிலி தேவரை றுதலியகொலையினிற் பல்வினைதா னுண்பல வகையினி னடைந்தவைவிளையுங்க ணுமக்குமென்றாள். |
841 | கொன்றவர்க் கல்லது நுதலப்பட் டார்களைக் கூடலவேற் றின்றவர்க கியாவையுந் தீவினைசேரல தேவர்க்குப்போ லென்றுரைப் பாய்க்கெய்து மேழைமையுண்குவ வேலிமையார்க் கொன்றுவி யேனல னோவினையூன்றின்பவர்க் கொப்பவென்றாள். |
842 | ஈகளு நாய்களுங் கொன்றவரீவகண் டின்புறலிற் றீயவை யேசெய்யுந் தேவரத்தீவினை தீர்க்கிற்பவோ நோய்களும் பேய்களு மொழிக்குவமெனினவை நுங்களுக்கு மாய்விடி னுணரின· தாம்வினையகற்றுதற் கரியதென்றாள். |
843 | நம்முறு துன்பங்க ணாமொழிக்கல்லலம் பிறருறுப வெம்முறை யாயினும் போக்குதற்கரியவிங் கிவர்களைப்போற் றம்முறு துன்பமும் தாமொழிக்கில்லலர் பிறர்களையே லெம்முறை நோய்களுஞ் செய்குபவவரென விகழ்ந்தனளே. |
844 | நாங்கொன்று கொடுக்குமவ் விலங்கினைநலிவதோர் பசியினரேற் றாங்கொன்று தின்குவ ராய்விடினவர்களைத் தவிர்க்குநர்யார் தீங்கொன்று முரையன்மின் தேவர்தம்மூணினைச் சேணின்றுதாம் வாங்குத லல்லது முடையொடுசோறுண்ணும் வயிற்றினரே. |
845 | - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை. |
846 | - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை. |
847 | - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை. |
848 | - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை. |
849 | - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை. |
850 | - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை. |
851 | - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை. |
852 | பொய்த்துரை யாநன்மை போதுவ தேலில்லை பூதிகனே சத்திய மேயுரை நீயெனத் தானும· தேயுரைத்தா னெத்திசை யார்களு மேத்துதற் கேற்றன னிவனுமென்றார் தத்துவ ரேநின்று தத்துவ ரெனப்படுந் தன்மையினார். |
853 | நன்பொரு ளாவன விவையெனவவனோடு நகரத்துள்ளா ரின்புறும் வகையினி னெடுத்தன ளுரைத்தபின் விடுக்கலுற்றாட் கன்புபட் டவர்களு மறநெறியறிவித்த வார்வத்தினாற் பின்புசென் றொழிதுமென் றதுசெய்துவலங்கொண்டு பெயர்ந்தனரே. |
பூத வாதம்
854 | வேத வாதம் வெளிறுசெய் தாளங்கோர் பூத வாதியும் பொங்கினன் மேற்செல வாத வாதி யிவனை யடக்கினா லேத வூதிய மில்லென வெண்ணித்தான். |
855 | நில்லப் பாவினி நீகண்ட தத்துவஞ் சொல்லற் பாலையிங் கென்னலுஞ் சொல்லுவான் மல்லற் றானை மதனசித் தன்னெனுங் கல்லொத் தோங்கிய தோட்களி யானையான். |
856 | அணிகொ ளாரத் தரசவை கேட்கெனப் பிணிகொள் மூஞ்சிப் பிசாசகன் சொல்லுவான் குணிகு ணம்மெனுங் கூற்றில னாலதென் றுணிவைம் பூதங்க ளேதொழில் சொல்லுவேன். |
857 | தண்ணென் றீநில நீர்வளி காயத்தாற் கண்ணு மூக்கொடு நாமெய் செவிகளாய் வண்ண நாற்றஞ் சுவையினொ டூறொலி யெண்ணுங் காலை யியைந்துழி யெய்துமே. |
858 | ஐந்துங் கூடிய றிவின்ப மாதியாய் வந்து தோன்றி மதுமயக் காற்றலி னந்தி நாளுங் குடஞ்சுடர் நாட்டம்போற் சிந்தி னாலவை சென்றினஞ் சேருமே. |
859 | உலகெ லாமவை யேயுயி ருண்டெனச் சொலவ லாரன சொற்றெளிந் தேநின்று பலக லாங்களுஞ் செய்வ பயனிலார் புலவ ராவதன் றோவங்குப் போந்ததே. |
860 | சென்ற காலத்துஞ் செல்கின்ற காலத்து நின்ற காலத்தி லும்மிந் நிகழ்ச்சியே யென்று மிவ்வுல கித்தன்மைத் தேயிது வன்ற தென்றுரைப் பாரயர்ப் பார்களே. |
861 | இட்ட மாவ திதுவெனக் கேட்டவள் சிட்ட ரன்றியுஞ் சென்றிருந் தார்க்கெலா மொட்டி மீட்டு முரைத்துளந் தான்கொளீஇக் கட்டு ரைய்யெடுத் தாள்கயற் கண்ணினாள். |
862 | வினையி னீங்கி விளங்கிய ஞானத்தோர் முனைவ னின்மையி னான்முதல னூலில்லை யனைய மாண்பின தாகம மாதலாற் புனைவ னின்னுரை பொய்யெனச் சொல்லியே. |
863 | கவைத்த கோலொடு கட்டில் கடிஞைகாத் தவத்திற் கொத்தன தாங்கினித் தாபதம் அவத்த மேபிற வாருயி ரில்லையேற் சுதத்தி னாலுய்த்தல் சூதது வாகுமே. |
864 | பூத மல்லது பொய்பிற நூலென்று வாதஞ் செய்து வருந்தி முடிப்பதென் நாத னன்னெறி நல்வினை நற்பயன் யாது மில்லை யெனின· தவத்தமே. |
865 | யாது மில்லை யுயிரிவை யாஞ்சொல்லும் பூத மேயெனப் போந்திருந் தென்னொடு வாதஞ் செய்கின்ற பூதமவ் வாதமோ யாதைம் பூதங்க டம்முள்ளு ம·தினி. |
866 | அளித்த வைந்திற் கறிவின்ப மாக்குவான் களித்தற் காற்ற லுடையன காட்டினாய் களித்தற் காரண காரிய மூர்த்தியா லொளித்து நின்ற வுணர்வுரு வென்றியோ. |
867 | உருவின் காரிய மேலுரு வென்றுண ரருவின் காரிய மேலவா காயக்கா மொருவன் காரிய மன்றுணர் வென்கின்றாய் மருவுங் காரண காரிய மற்றெனோ. |
868 | வையு மண்ணு மயிரு மலமுமோர் பையுள் வைக்கப் பளிங்கும் பயக்குமோ பொய்யைம் பூதம் புணர்ந்துணர் வோடின்பம் செய்யு மென்பது சிந்திக்கற் பாலதோ. |
869 | கள்ளப் பூதமுங் காமிக்கும் பூதமும் வள்ளற் பூதமும் மல்லவு மல்லவா லுள்ளப் பூதமொன் றாக்குவ துண்மையைக் கொள்ளப் பூதக் குணமவை யல்லவே. |
870 | பொறியைந் தாலைந்து பூதத்தி னாகிய வறிவைந் தாலைந்து மவ்வைந்திற் காகுமோ பிறிதொன் றோபொருட் பெற்றிமற் றிற்றெனக் குறிகொண் டாயொன்று கூறெனக் கென்னவே. |
871 | ஒன்றன் காரிய மொன்றென வொட்டினுஞ் சென்றெ லாமவை சேதனை யாகுமே யன்றெ லாமவை யாக்கமொன் றேயினி யென்ற லானும· தின்னுயி ரெய்துமே. |
872 | அனைத்துப் பூதமு மேயறி வாக்கினான் மனத்துக் கின்னுமோர் பூதத்தை மன்னுநீ நினைத்துக் காணன்றி நேடியுங் காணையா வெனக்கு நீசெய்வ தித்துணை யேயினி. |
873 | பிண்ட மாகிப் பிறந்தன யாவையும் உண்டுங் கண்டு முணர்ந்தவுஞ் செய்தவுங் கொண்டு மீட்டவை கூறுதல் கூறுங்கால் கண்ட பூதத்துக் காரிய மென்றியோ. |
874 | பிறந்த நாள்களுட் பிள்ளையு மல்லவு மறிந்து தாய்முலை யோடல்ல வுண்டிக ளறிந்த வாறென்கொ லோவைந்து பூதமுஞ் செறிந்த நாள்களுட் செய்வன வல்லவால். |
875 | புத்தி யானின்றிப் பூதத்தி னாயவேற் பத்து மல்லவும் பன்றிக்கு நாய்கட்கு மொத்த தன்மைய பன்மைய குட்டிகள் வித்தி னாய வினைவிகற் பாம்பிற. |
876 | குறைந்து பூதங்கள் கூட்டமுண் டாமவ ணுறைந்த பூதத் துணர்வல்ல தின்மையா லறைந்த பூதங்க ளைந்துமங் கில்லெனின் மறைந்த பூதத்தி லுண்மைவந் தெய்துமால். |
877 | நீருங் காற்றுமல் லானில மில்லையோ வூருஞ் சங்கினோ டூர்மச்சி மூக்சில தோ¢ யுண்டலிற் றீயுமுண் டில்லைகண் காரி யஞ்செவி காணலங் காயக்கென். |
878 | ஒன்றொன் றாக வுணர்ச்சி முறைமையாற் சென்று பூதங்கள் சேர்வதற் கேதுவென் குன்றித் தத்தமுள் யாவையுங் கூடுமே னின்ற மெய்ம்மை நினதென நேர்வல்யான். |
879 | ஐந்து பூத மவற்றவற் றாலைந்து மிந்தி யங்க ளியையு மிவையெனுஞ் சிந்த னையொழி நீயெனச் செப்பினா ளுய்ந்து வாழு முயிருண்மை யொட்டினாள். |
880 | உணர்வு மின்பமு மோரறி வாதிக்கட் புணரு மேயெனிற் பொய்தொகைக் கண்ணென லுணர்வு மின்பமு முள்வழி யேயுயிர் புணரு மென்றனள் போதன கண்ணினாள். |
881 | காற்றி னாலுடம் பாமெனிற காற்றினே தோற்றி னாலுயிர் தான்றொகை யென்செயு மாற்றிவ் வைந்தினு மாருயி ராமெனு மாற்ற மாயின் மனங்கொளற் பாலதே. |
882 | வேறு வேறைந்து பூதமு மெய்ம்மையா லீறுந் தோற்றமு மில்லுயி ராயின பாறி யாவையும் பாழ்த்தொழி யும்மெனக் கூறி னாயது குற்ற முடைத்தரோ. |
883 | குழவிக் காலத்துக் கூறின யாவையுங் கீழவுக் காலத்துக்கண்ணவை கேட்டலா லிழவெக் காலு மிலானினி யார்களைத் தொழுவிப் பானங்கோர் தோன்றலுந் தோன்றுமே. |
884 | துன்பந் தூய்மையுந் துட்கென வுட்கலும் அன்பு மானமு மாயமு மாண்மையு மின்பு மென்றிவை யாக்கிய தீதென முன்பு நின்று முறுக்கவும் வல்லையோ. |
885 | கனவு மந்திரம் சிந்தனை வாழுநாள் வினவு சோதிடங் கேட்டுரை புட்குரல் அனகள் யாவையு மென்னைநின் பூதங்க ளனகொ னீயிங் கறிந்தனை சொல்லென. |
886 | வைத்த வத்து மறுபிறப் பிற்றமர்க் குய்த்துக் காட்டுத லேலுல கொட்டுமா லெத்தி றத்தினு மில்லுயு ரென்றிநீ செத்து வம்மெய்திற் சில்லைமை செய்பவால். |
887 | பேயு மில்லை பிறப்பது மில்லென்பாய் வாயுங் கிள்ளிப் புடைப்ப வருவதென் மாயத் தாலன்றி மந்திரத் தாற்றெய்வங் கூயக் காலறங் கோடலை யொட்டென. |
888 | ஒட்டி னேனென் றுரைப்ப வுணர்விலா முட்டை காண்கென முனகை முறுக்கியே சுட்டி னாளங்குத் தோற்றமு நோக்கென விட்டுத் தான்றன் விகுர்வணை காட்டுவாள். |
889 | கழுதுங் காணலராகிக் கலங்கியே யழுதுஞ் சாப வகலிடத் தாரிவன் முழுதுங் காணின் முடியு மெனமுன்னி வழுவில் வாயும் வளைபல்லுந் தோற்றலும். |
890 | கண் புதைத்துக் கவிழ்ந்தனன் வழவே திண் பதத்திற் றெருட்டி யெடுத்திரீஇப் பண்பு தக்கன சொல்லிப் பரியனின் நண்ப தென்று நடுக்கமுந் தீர்த்தபின். |
891 | பேய்கண் டாயதன் பெற்றி யுரையென வாய்கண் டேனென்னை வாழ்க்கை வலியன்மின் நோய்கொண் டேனென வஞ்ச னுனக்கவ டாய்கண் டாயென்றுஞ் சாதலில் லையென. |
892 | பெற்ற பேரும் பிசாசிக னென்பதே யற்ற மின்றி யவட்கு மகனைநீ குற்ற மில்லறங் கொள்ளின்மற் றெம்மொடு சுற்ற மாதலிற் சொல்லெனச் சொல்லுவான். |
893 | பிறப்பும் பேயு முதலாப் பிறகளுந் திறத்தி னீசொன்ன யாவையுந் தேறிநின் றறத்தை யானு மமைவரக் கொண்டனென் மறக்க லேனினி மன்னுமை யானென. |
894 | பேந்தரு தோற்றப் பிசாசிக னிற்றென வேந்துமவ் வேத்தவை யாரும் வியப்பெய்தி யாய்ந்த கேள்வியி னாளை யையா யென மாந்தர் யாரு மதித்தன ரென்பவே. |
நீலகேசி முற்றிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீலகேசி - Iynchiru Kaappiyangal - ஐஞ்சிறு காப்பியங்கள் - யென்றாள், மில்லை, வேண்டும், முடியவுள்ள, எட்டுச், செய்யுள், தென்னோ, செய்யுளும், செய்யுளிலிருந்து, அவற்றின், சுவடியில், உரைகளும், தத்துவ, காட்டாய், தில்லை, மென்றாள், மல்லது, னென்றாள், யெல்லா, மெய்ம்மை, சொல்லிய, யாவையும், நீசொன்ன, சென்று, சொல்லின, கண்டாய், துணையு, சொல்லுதி, மென்னேன், தென்றாள், செய்கையு, தோற்றமு, காட்டி, செய்யு, பூதங்க, தூய்மை, சொல்லும், பூதமும், னால்வினை, மில்லையே, னென்னவே, பூதத்தி, வெல்லா, சொல்லுவான், பெற்றி, முதலாப், மென்றான், பதப்பொரு, திரியமும், செய்கையும், நின்சொ, யுரைத்த, மாட்சி, செய்கை, கந்தங்க, போழ்தே, வொற்றுமை, காட்சி, வேயெனச், யாய்நின், சொல்லுத, மேற்கோ, ளெல்லாம், பிண்டம், வென்பது, செய்தவ, லங்கோர், யாயால், லுண்மை, திறமென்னை, றத்துவ, தின்மை, வல்லையோ