நற்றிணை - 96. நெய்தல்
'இதுவே, நறு வீ ஞாழல் மா மலர்தாஅய், புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை, புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே, பொம்மற் படு திரை நம்மோடு ஆடி, புறம் தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் |
5 |
துவரினர் அருளிய துறையே; அதுவே, கொடுங் கழி நிவந்த நெடுங் கால் நெய்தல் அம் பகை நெறித் தழை அணி பெறத் தைஇ, தமியர் சென்ற கானல்' என்று ஆங்கு உள்ளுதோறு உள்ளுதோறு உருகி, |
10 |
பைஇப் பையப் பசந்தனை பசப்பே. |
தோழீ ! நறு மணம் கமழ்கின்ற பூவையுடைய ஞாழலின் சிறந்த மலரும் புன்னையின் சிறந்த மலரும் உதிர்ந்து பரவி நெருங்கிய வெளிய மணற்பரப்பினொருபால்; என்னைப் புதுவதாக இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த சோலை இதுவே என்றும்; பொலிவு பொருந்திய கடலில் நம்மோடு நீராடி என் முதுகிலே தாழ்ந்திருண்ட விளங்கிய ஐம்பாலாக வகுக்கும் கூந்தலைப் பிழிந்து துவட்டினராயருளிய துறை உதுவே என்றும்; வளைந்த தண்டு உயர்ந்த நீண்ட காம்புடைய நெய்தலின் அழகிய ஒன்றோடொன்று மாறுபடத் தொடுத்த நெறிப்பையுடைய தழையை அழகுபெற எனக்கு உடுப்பித்துத் தமியராய்ச் சென்றுவிட்ட கழிக்கரைச் சோலை அதுவே யென்றும்; அவ்வண்ணம் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் உள்ளமுருகி மெல்ல மெல்லப் பசப்பை மேற்கொண்டு பசந்து காட்டினை; இனி எவ்வாறுய்குவாய்?;
சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய் வரைவு கடாயது. - கோக்குளமுற்றனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 94 | 95 | 96 | 97 | 98 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மலரும், சிறந்த, சோலை, என்றும், நினைக்குந்தோறும், உள்ளுதோறு, அதுவே, இதுவே, புணர்ந்த, உதுவே, நம்மோடு, நெய்தல்