நற்றிணை - 71. பாலை
மன்னாப் பொருட் பிணி முன்னி, 'இன்னதை வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து' எனப் பல் மாண் இரத்திர்ஆயின், 'சென்ம்' என, விடுநள் ஆதலும் உரியள்; விடினே, கண்ணும் நுதலும் நீவி, முன் நின்று, |
5 |
பிரிதல் வல்லிரோ- ஐய! செல்வர் வகை அமர் நல் இல் அக இறை உறையும் வண்ணப் புறவின் செங் காற் சேவல் வீழ் துணைப் பயிரும் கையறு முரல் குரல் நும் இலள் புலம்பக் கேட்டொறும் |
10 |
பொம்மல் ஓதி பெரு விதுப்புறவே? |
ஐயனே ! நிலையில்லாத பொருளைத் தேட ஆசை பிணித்தலானே அதன்கண்ணே கருத்தைச் செலுத்தி இக்காரியத்தை வளையணிந்த முன் கையையுடைய நின் தோழிக்குக் கூறுவாயாக என்று; பல் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என விடுநள் ஆதலும் உரியள். பலவாக மாட்சிமைப்பட இரந்து கூறுகின்றனிராதலால், யான் சென்று கூறின் நீயிர் செல்லுவீராக என்று உம்மை விடுத்தலும் செய்வாள்; அங்ஙனம் அவள் நும்மை விடுப்பினும்; செல்வருடைய பலகட்டுக்கள் அமைந்த வீட்டின்கண்ணே உள் இறப்பிலிருக்கும் அழகிய சிவந்த கால்களையுடைய சேவற்புறா; தான் விரும்பிய பெண்புறாவைப் புணர்ச்சிக்கு அழைக்கும் காமத்தால், செயலறவு கொண்டு ஒலிக்கின்ற அக்குரலோசையை; நும்மைப் பிரிந்து தனிமையாயிருந்து கேட்குந்தோறும்; எம் பொலிவு பெற்ற கூந்தலையுடைய தலைவி பேரவாவால் நடுங்கி வருந்துமாறு; அவளுக்கு முன்பு நின்று நீயிர் அவளுடைய கண்ணையும் நெற்றியையும் தைவந்து பிரிந்து போதற்கு வன்¬யுடையீரோ ? உடையீராயின் சென்று சொல்லுவேன்;
தலைவனைத் தோழி செலவு அழுங்குவித்தது. - வண்ணப்புறக் கந்தரத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 69 | 70 | 71 | 72 | 73 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - என்று, நின்று, சென்று, நீயிர், பிரிந்து, முன், உரியள், மாண், சென்ம், விடுநள், ஆதலும், நின்