நற்றிணை - 62. பாலை

வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து, குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து, உள்ளினென் அல்லெனோ யானே- 'முள் எயிற்று, |
5 |
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல், எமதும் உண்டு, ஓர் மதிநாட் திங்கள், உரறு குரல் வெவ் வளி எடுப்ப, நிழல் தப உலவை ஆகிய மரத்த கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது' எனவே? |
10 |
வேர்கள் ஒன்றோடொன்று பிணிப்புண்ட மூங்கில்களிலே காற்று மோதுதலால் உண்டாகிய ஒலிக்கின்ற ஓசையானது; தறியிலே கட்டப்பட்ட யானை வருந்தி நெட்டுயிர்ப்பெறிந்தாற் போன்றது; கோடை நிலைபெற்ற மூங்கில் பிறங்கிய சுரத்து நெறியில்; மலைவாய்ச் செல்லும் திங்களை நோக்கி நின்று சிறிது கருதி; முட்போன்ற பற்களையும் திலகமிட்ட மணங் கமழ்கின்ற அழகிய நெற்றியையும் உடைய நாள் நிரம்பிய மதித்திங்கள் என்பது ஒன்று எம்முடையதும் உண்டு; அத்திங்கள் இப்பொழுது யாண்டையதோ வெனில் முழங்குகின்ற ஓசையையுடைய வெவ்விய காற்றானது வீசுதலாலே இலையுதிர்ந்து நிழல் செய்யும் தன்மை நீங்க வெறுங் கொம்புகளாய் நிற்கின்ற மரங்களையுடைய கற்கள் விளங்கிய கரிய மலை மீதுள்ளதாயிரா நின்றது என்று; யான் நினைத்திருந்தேன் அல்லனோ ?
முன் ஒரு காலத்துப்பொருள்வயிற் பிரிந்து வந்த தலைவன், பின்னும் பொருள்வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் செலவு அழுங்குவித்தது. - இளங்கீரனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 60 | 61 | 62 | 63 | 64 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - உண்டு, நிழல், நின்று, நோக்கி, யானை, பிணி