நற்றிணை - 51. குறிஞ்சி
யாங்குச் செய்வாம்கொல்- தோழி! ஓங்கு கழைக் காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்று ஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல் கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப் பெயல் ஆனாதே, வானம்; பெயலொடு |
5 |
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென, பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே; பெருந் தண் குளவி குழைத்த பா அடி, இருஞ் சேறு ஆடிய நுதல, கொல்களிறு பேதை ஆசினி ஒசித்த |
10 |
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே? |
தோழீ ! மேகமானது உயர்ந்த அடித்தண்டினையுடைய மூங்கில்கள் நிரம்பிய மலைப்பிளப்பிடமெல்லாம் எதிரொலி யெடுப்ப; பாம்புகள் வருத்தமுற்று உயர்ந்த துறுகல்மீது புரளுமாறு துன்புறுத்தி விரைந்த செலவையுடைய கடிய முழக்கமிக்க இடியேற்றுடனே மிக்க துளியைப் பெய்யத் தொடங்கி அப் பெயலை நிறுத்துகின்றிலது. பெயலொடு மின்னு நிமிர்ந்து அன்னவேலன் வந்தென அத்தகைய பெயலைக் கண்டு ஆற்றது ஏதம் அஞ்சி வேறுபட்ட என்னை உற்றதறியாது நற்றிறம் படர்ந்த அன்னை வெறியெடுத்தலும் அதற்காக மின்னலைச் செய்தமைத்தாற் போன்ற வேலைக் கையிலுடைய படிமத்தான் வந்தானாதலின்; இனிப் பின்னி விடுத்தற்குரிய கொண்டையிற் பூவைக் குலையாது காத்தலும் அரியதாயிரா நின்றது; ஆதலாற் பெரிய குளிர்ச்சியையுடைய பச்சிலை மரத்தை முரித்துழக்கின பரந்த அடிகளையுடைய கரிய சேற்றை யப்பிய நெற்றியையுடைய கொல்ல வல்ல களிற்றியானை; அறியாமையால் ஆசினியை முரித்து மலருதிர்ந்து பரவிய வேங்கை மரத்தின்கீழே தங்காநிற்கும் மலைகிழவோனுக்கு; என்ன செய்ய மாட்டுவேம்; கூறாய்,
ஆற்றாது ஏதம் அஞ்சி வேறுபட்டாள், வெறியாடலுற்ற இடத்து, சிறைப்புறமாகச்சொல்லியது. - பேராலவாயர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 49 | 50 | 51 | 52 | 53 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - உயர்ந்த, ஏதம், அஞ்சி, வந்தென, மின்னு, ஆனாதே, பெயலொடு, ஓங்கு