நற்றிணை - 389. குறிஞ்சி
வேங்கையும் புலி ஈன்றன; அருவியும் தேம் படு நெடு வரை மணியின் மானும்; அன்னையும் அமர்ந்து நோக்கினளே, என்னையும்- களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென, |
5 |
'சிறு கிளி முரணிய பெருங் குரல் ஏனல் காவல் நீ' என்றோளே; சேவலொடு சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம் முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப் பல நன் பொன் இமைக்கும் நாடனொடு |
10 |
அன்புறு காமம் அமைக நம் தொடர்பே. |
எம் தந்தையானவன் களிற்றியானையின் முகத்தைப் பிளந்த சிறந்த அம்பையுடைய கொலைத் தொழிலன்றிப் பிற கல்லாத ஏவன் மக்களாகிய வீரருடனே; விலங்கின்பின் வேட்டைமேற் சென்றதனாலே; சிறிய கிளிகள் கொய்தழிக்கின்ற பெரிய கதிர் களையுடைய தினைப்புனம் இனி உன்னாலே காவல் செய்யப்படுவதாக என்றனள்; அதுமுதலாக நாம் அதன் கண்ணே காவலோம்பி வருங்காலைச் சிலம்பிலே சென்ற கிளைகின்ற கோழி தன் சேவலுடனே பழங் கொல்லையின் மேற்புறத்தைக் கிளைத்த புழுயிடையே; மிகப் பலவாகிய நல் பொன் ஒளிவீசாநின்ற நாடனுடன்; அன்பு மிக்க காமமே தலைக்கீடாக யாம் தொடர்ச்சியுடையேம் ஆயினேம், வேங்கையும் புலி ஈன்றன அங்ஙனமாகிய தொடர்ச்சி விரைவினீங்குமாறு தினை கொய்யுங்காலம் புலிபோன்ற பள்ளிகளையுடைய மலர் அரும்பி மலர்ந்தன; அருவிகளெல்லாம் தேன்மணமிக்க நெடிய மலையிடத்தில் நீலமணி போலத் தௌ¤வடைந்தன; தினை கொய்யுங் காலமும் மணம்புரியுங் காலமும் ஒருசேர வந்தமை கருதிப் போலும் எம் அன்னை அமர்ந்து நோக்கி நின்றனள்; இனி நமது தொடர்பு யாதாய் முடீயுமோ? அறிகின்றிலேன்!
பகற்குறி வந்து ஒழுகாநின்ற காலத்துத் தலைமகன் கேட்பச் சொல்லியது. - காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 387 | 388 | 389 | 390 | 391 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மிகப், பொன், தினை, காலமும், கிளைத்த, காவல், புலி, ஈன்றன, அமர்ந்து, வேங்கையும்