நற்றிணை - 358. நெய்தல்
'பெருந் தோள் நெகிழ, அவ் வரி வாட, சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர, இன்னேம் ஆக, எற் கண்டு நாணி, நின்னொடு தௌத்தனர் ஆயினும், என்னதூஉம், அணங்கல் ஓம்புமதி, வாழிய நீ!' என, |
5 |
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய், பரவினம் வருகம் சென்மோ- தோழி!- பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல் சிறு வெண் காக்கை நாள் இரை பெறூஉம் பசும் பூண் வழுதி மருங்கை அன்ன, என் |
10 |
அரும் பெறல் ஆய் கவின் தொலைய, பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே. |
தோழீ! பெரிய செவ்விய பஞ்சுபோன்ற தலையையுடைய இறாவின் முடங்கலை; சிறிய வெளிய காக்கை
நாட்காலையில் இரையாகப் பெறுகின்ற பசிய பூணை அணிந்த பாண்டியனது மருங்கூர் போன்ற;
எனது அரிதாகப் பெற்ற நுண்ணிய அழகெல்லாம் கெடும்படியாக; என்னைப்பிரிந்து அங்கே
தங்குதற்கு வல்ல தலைவர்; முன்னொருபொழுது நம்முடைய பெரிய தோள் தளர்வடைய அழகிய வரி (இரேகை)கள்
வாட்டமுறச் சிறிய மெல்லிய கொங்கைகளிலே பெரிய பசலை பரவ; நாம் இத் தன்மையேமாதலும்
அவர் தம் காதலியைப் பிரிதலால் இவ்வண்ணம் ஆயினாள் என்று என்னைக் கண்டு வெட்கமுற்று;
தெய்வத்தை முன்னிலைப் படுத்தி இனி ஒருபொழுதேனும் பிரியேனென்று நின்னுடனே
சூளுற்றனராயினும் அங்ஙனம் கூறிய சூள் பொய்த்தலானே அதுகாரணமாக; எவ்வளவேனும் அவரை
வருத்தாதேகொள்! அவரைப் பாதுகாப்பாயாக! நீ வாழிய என்று; கணங்களையுடைய அக் கடவுளுக்கு
உயர்ந்த பலியையிட்டு நீர்வளாவிச் சாந்தி செய்து பரவுக்கடன் கொடுத்து இறைஞ்சினமாகிப்
பின்பு வருவோம், அதற்காக ஆண்டுச் செல்வோமோ? ஒன்று ஆய்ந்து கூறுவாய் காண்!
பட்டபின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்த காலத்து, தோழி, 'இவள் ஆற்றா ளாயினாள்; இவளை இழந்தேன்' எனக் கவன்றாள் வற்புறுத்தது; அக் காலத்து ஆற்றா ளாய் நின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 356 | 357 | 358 | 359 | 360 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெரிய, சிறிய, என்று, காலத்து, ஆற்றா, காக்கை, சிறு, கண்டு, வாழிய, தோழி, தோள்