நற்றிணை - 340. மருதம்

புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்- கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன் படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென, கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி, |
5 |
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து, செஞ் சால் உழவர் கோல் புடை மதரி, பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும் வாணன் சிறுகுடி அன்ன, என் கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே! |
10 |
மகிழ்நனே! பாகன் கூறு மொழிக் குறிப்பன்றிப் பிறவற்றைக் கற்றறியாத யானையையும் விரைந்து செல்லுந் தேரினையும் உடைய செழியன் பெயராலே செய்த மாட்சிமைப்பட்ட பெரிய குளத்து நீர் மடையடைத்திருந்தது திறந்துகொண்டோடியதனாலே; அக்குளத்தினின்றும் புறம்போந்து கால்வாயை யடைந்து சென்று திரும்பிய திரண்ட கோட்டினையுடைய வாளைமீன்; அக் கால்வாயினின்றும் சேற்றையுடைய வயலினுள்ளாலோடி; ஆங்கு உழுது வருகின்ற எருமைக்கடாவின் காற்சேறுபட்ட புள்ளியுடைய வெளிய மேற் புறத்தோடு செவ்விய பலபடியாக மறித்து உழுகின்ற உழவர் தங் கைக்கோல் கொண்டு புடைத்தற்கும் அஞ்சாது பெருக்குற்று; நீர் பொருந்திய சேற்றின்மேல் வரம்படியிலோடி அப்பாற் போக இயலாமையால் அவ்வரம்படியிலே புரளுகின்ற; வாணனது காவிரியின் வடபாலுள்ள 'சிறுகுடி' என்னும் ஊர்போன்ற; என்னுடைய கோற்றொழிலமைந்த அழகிய ஒளி பொருந்திய வளை நெகிழும்படி செய்த நின்னை; புல்லவுஞ்செய்யேன்; அதனால் நின்னை வெறுத்தேனுமல்லேன்; அயலாந் தன்மையேனாதலின் என்னைத் தீண்டாதேகொள்!
பரத்தையிற் மறுத்தந்த தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது. - நக்கீரர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 338 | 339 | 340 | 341 | 342 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நீர், பொருந்திய, நின்னை, செய்த, சிறுகுடி, உழவர், செழியன்