நற்றிணை - 334. குறிஞ்சி
கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளை பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி, ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கை வெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப, கலையொடு திளைக்கும் வரைஅக நாடன்- |
5 |
மாரி நின்ற ஆர் இருள் நடு நாள், அருவி அடுக்கத்து, ஒரு வேல் ஏந்தி; மின்னு வசி விளக்கத்து வருமெனின், என்னோ- தோழி!- நம் இன் உயிர் நிலையே? |
தோழீ! கரிய விரலையும் சிவந்த முகத்தையுமுடைய பெருங்கூட்டமாகிய முசுக்களைச் சுற்றமாகவுடைய பெண்குரங்கு; பெரிய மலைப்பக்கத்து அருவியில் விளையாடி; உயர்ந்த மூங்கிலிலேறி அதன் நுனியை ஊசலாகக் கொண்டு ஊசலாடி; மலையில் வேங்கையின் அழகிய நறிய மலர் அங்குள்ள சுனையிலே மிக உதிர்ந்து விழும்படி அதன் கிளையிலேறிக் கடுவனொடு புணராநிற்கும் மலையகநாடன்; மழை பெய்கின்ற மாந்தர் இயங்குதற்கரிய இருள்நிறைந்த நடுயாமத்தில்; அருவியையுடைய மலைப்பக்கத்தின் கண்ணதாகிய நெறியில் ஒப்பற்ற வேற்படையை யேந்தி; மழையின் மின்னலானது இருளைப் பிளக்க அம்மின்னல் விளக்கத்தில் வருவதாகக் கருதினனென்றால்; அவன் வருநெறியை நினைந்து வருந்துகின்ற நம்முடைய இனிய உயிர் இனி எவ்வாறு நிலைத்திருக்குமோ? அறிகின்றிலேன்;
தோழி இரவுக்குறி முகம் புக்கது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 332 | 333 | 334 | 335 | 336 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அதன், உயிர், தோழி, அருவி, அடுக்கத்து