நற்றிணை - 315. நெய்தல்
ஈண்டு பெருந் தெய்வத்து- யாண்டு பல கழிந்தென, பார்த் துறைப் புணரி அலைத்தலின், புடை கொண்டு, மூத்து, வினை போகிய முரி வாய் அம்பி, நல் எருது நடை வளம் வைத்தென, உழவர் புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு, |
5 |
நறு விரை நன் புகை கொடாஅர், சிறு வீ ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல் முழவு முதற் பிணிக்கும் துறைவ! நன்றும் விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின் தவறும்; நன்கு அறியாய்ஆயின், எம் போல், |
10 |
ஞெகிழ் தோள், கலுழ்ந்த கண்ணர், மலர் தீய்ந்தனையர், நின் நயந்தோரே. |
நெருங்கிய பெரிய தெய்வமெனப் பெயர்கொண்ட யாண்டுகள் பல சென்றதனாலே; கரையையடுத்த துறையிலே கடனீர் அலைத்தலால் மோதப்பட்டு முதிர்ந்து தொழில் செய்ய வுதவாது ஒழிந்த முரிந்த வாயையுடைய தோணியை; நல்ல எருது முன்புள்ள நடையின் சிறப்பு நீங்கியதேயென்று அதனை உழவர் புல்லையுடைய தோட்டத்திலே தொழில் செய்யாதபடி விட்டொழிந்தாற்போல; நறிய வாசனையுடைய நல்ல தூமங் கொடாராய்; சிறிய மலரையுடைய ஞாழலொடு சேர்ந்தோங்கிய புன்னையின் கொழுவிய நிழலிலே குடமுழாப்போன்ற அந்த மரத்தின் வேரடியிலே பிணித்துப் போகடுந் துறையையுடைய தலைவனே!; பெரிதும் சிறப்பினதாகக் கொண்ட நட்பின்கண்ணே நுட்பமாகிய தவறும் வாராதபடி நன்றாக அறிந்து நடக்க வேண்டும். அதனை நீ அறியாயாயின்; நின்னால் விரும்பப்படுவோர் எம்மைப் போல நெகிழ்ந்த தோளும் கலுழ்ந்த கண்ணும் உடையராய் மலர்ந்து முறையே உதிர்ந்து கழியாது மலர்ந்தவுடன் தீய்ந்தாற் போல்வர்காண்;
தலைமகனைப் பரத்தை நொந்து சொல்லியது. - அம்மூவனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 313 | 314 | 315 | 316 | 317 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தொழில், கலுழ்ந்த, நல்ல, தவறும், அதனை, கொண்ட, உழவர், ஞாழலொடு, எருது