நற்றிணை - 311. நெய்தல்
பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி, இருங் கதிர் நெல்லின் யாணரஃதே: வறப்பின், மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து, இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும், அழியா மரபின் நம் மூதூர் நன்றே- |
5 |
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி, சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே; ஒன்றே- தோழி!- நம் கானலது பழியே: கருங் கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி, இருங் களிப் பிரசம் ஊத, அவர் |
10 |
நெடுந் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே. |
தோழீ! அழியாத மரபினையுடைய நம் பழைமையான ஊரானது; மழை பெய்தாலோ எங்கும் உலாவா நின்ற உழையாகிய மான் கூட்டங்கள் செறியத் தோன்றப் பெற்றும் பெரிய கதிர்களையுடைய நெல்லின் புதுவருவாயினை உடையதாயிராநின்றது; அங்ஙனம் மழைபெய்யாது வறந்து விட்டாலோ, பெரிய கழிநீரிடத்து முள்ளிச்செடியின் மலருதிர்ந்து பரந்து சேறெல்லாம் ஒருசேரக் காய்ந்து கரிய கழிச் சேற்றிட மெங்கும் வெள்ளையாகிய உப்பு விளையாநிற்கும் பெருமையுடைய தாயிராநின்றது; இவையேயுமன்றிக் கொழுத்த மீன்சுடுபுகை தெருக்களினுள்ளே கலந்து சிறிய மலரையுடைய ஞாழல் மரங்கள் மிக்க துறையும் இனியதாயிராநின்றது; இவ்வளவு வளம் வாய்ந்த நம்மூர்க்கண் உள்ள கடற்கரைச் சோலையொன்றுமோ ஊரார் எடுக்கும் ஒரு பழியை உடையதாயிராநின்றது; அதுதான் யாதோ வெனில்; கரிய கிளையையுடைய புன்னை மலரில் உள்ள தேனைப் பருகிக் களிப்பினையுடைய கரிய வண்டுகள் நன்னிமித்தமாக எதிர்வந்து ஒலியாநிற்ப; நங் காதலராகிய அவர் வருகின்ற நெடிய தேரின் செவிக்கு இனிய ஓசையைக் கேட்பதுதான் அரியதாயிராநின்றது; இவ்வருமையொன்று இல்லையாய்விடின் நம்மூருஞ் சோலையும் மேதக்கன வாதலொடு அவர்வந்து நம்மைக் கூடின் அதுவும் மிக்க நல்லதாக நமக்குத் தோன்றுங்காண்;
அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது. - உலோச்சனார் >
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 309 | 310 | 311 | 312 | 313 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கரிய, இருங், உடையதாயிராநின்றது, பெரிய, மிக்க, உள்ள, அவர், தோழி, கழிச், நெல்லின், உப்பு, ஞாழல், மான், புன்னை