நற்றிணை - 296. பாலை
என் ஆவதுகொல்? தோழி!- மன்னர் வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த பொன் செய் ஓடைப் புனை நலம் கடுப்ப, புழற் காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர் ஏ கல் மீமிசை மேதக மலரும், |
5 |
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும், வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச் செல்ப என்ப, காதலர்: ஒழிதும் என்ப நாம், வருந்து படர் உழந்தே. |
தோழீ! அரசருடைய போர்த்தொழில்வல்ல யானையின் புள்ளியையுடைய முகத்திலணிந்த பொன்னாற் செய்த நெற்றிப் பட்டத்தில் அலங்கரித்த அழகிய தோற்றம்போல; உள்ளே புழலமைந்த காயையுடைய சரக்கொன்றையின் கிளைகளில் அழகிய கொடிபோன்ற பூங்கொத்துகள் பெரிய மலையின் மிகவுயர்ந்த இடத்தில் மேம்பட மலராநிற்கும்; பிரிந்தோர் வருந்துகின்ற பெறுதற்கரிய கார்காலத்திலும்; தாம் செய்ய வேண்டிய காரியத்தையே கருதிய வுள்ளத்துடனே நங் காதலர் விரைந்து செல்வாராயினர்; அங்ஙனம் செல்லுகின்றவருடன் சேரவுஞ் செல்லாமல் நாம் வருந்துகின்ற துன்பத்திலுழன்று இங்கேயே தங்கியிருக்கக் கடவேமாயினோம்; இஃதென்ன கொடுமை? இவ்வண்ணம் பிரிதலால்; இனி யாதாய் முடியுமோ? ஒன்று சூழ்ந்து கூறாய்;
தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் சொல்லியது. - குதிரைத் தறியனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 294 | 295 | 296 | 297 | 298 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அழகிய, வருந்துகின்ற, நாம், காதலர், என்ப, பிரிந்தோர்