நற்றிணை - 247. குறிஞ்சி
தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக் கொன்ற யானைச் செங் கோடு கழாஅ, அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி, எஃகுறு பஞ்சிற்று ஆகி, வைகறைக் கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீ |
5 |
நல்காய்ஆயினும், நயன் இல செய்யினும், நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல் விருந்து இறைகூடிய பசலைக்கு மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே! |
முதிர்ந்த வலியுடனே பகை மிகுதலாலே சினந்து புலியைக் கொன்ற யானையின் சிவந்த தந்தம் கழுவும்படி; வீழ்கின்ற மழையைப் பெய்த இனிய முழக்கத்தையுடைய மேகம் வில்லால் எறியப்பட்ட பஞ்சு போல் ஆகி; விடியற்காலத்திலே சிகரம் உயர்ந்த நெடிய மலையிலே இயங்காநிற்கும் நாட்டையுடையோனே!; நீ தலையளி செய்யாயாயினும் அவள் விரும்பாத வற்றை வெறுக்கும்படி செய்தாயெனினும்; நின் உள்ளஞ் சென்றவழி நடக்கும் என் தோழியின் நல்ல நெற்றியில்; இருந்து நிலை மிகுதலைக்கொண்ட பசலை நோய்க்கு நீயே மருந்தாவதன்றி மற்றொரு மருந்தில்லாமையை நீ நன்றாக அறிந்தனையாகில் பின்பு செல்வாயாக!
'நீட்டியாமை வரை' எனத் தோழி சொல்லியது. - பரணர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 245 | 246 | 247 | 248 | 249 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோழி, நின், கோடு, கொன்ற