நற்றிணை - 236. குறிஞ்சி
நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும் தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே- ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர், 'பையென முன்றில் கொளினே நந்துவள் பெரிது' என, நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு |
5 |
உரை, இனி- வாழி, தோழி!- புரை இல் நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து அண்ணல் நெடு வரை ஆடி, தண்ணென வியல் அறை மூழ்கிய வளி என் பயலை ஆகம் தீண்டிய, சிறிதே. |
10 |
தோழீ! நீ வாழ்வாயாக!; எனக்குண்டாகிய காமநோயும் அளவு கடப்பப் பெரிதாய் இராநின்றது; என்னுடம்பும் தீயை உமிழ்கின்ற கொதிப்பினால் வெப்பமுடையதாயிரா நின்றது; ஆதலின் என் உடம்பை மெலிவித்துக் குற்றமற்ற நுண்ணிய நேர்மையையுடைய ஒளி பொருந்திய வளையைக் கையினின்று கழலச் செய்த தலைமகனது மலையிலே; பெருமைபொருந்திய நீண்ட கொடுமுடியின் கண்ணே பரவி நின்று குளிர்ச்சியுறும்படி அகன்ற பாறையில் அளாவிய காற்றானது; என்னுடைய பசலைநோயுற்ற மெய்யிலே சிறிதுபடவேண்டி; நீ விரைந்து சென்று "அங்கு உயர்ந்த நம்முடைய முன்றிலிலே இவளைச் சிறிதுபோது மெல்லக் கிடத்தினால் இவள் பெரிதும் நோய் நீங்கப்பெறுவள்" என்று; அவ்விடத்து என்னைக் கொண்டுபோய்விட்டு நரகம் போன்ற கொடிய நெஞ்சத்தையுடைய அன்னைக்கும் இப்பொழுதே உரைப்பாயாக!;
தலைமகன் சிறைப்புறமாக, வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நம்பி குட்டுவன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 234 | 235 | 236 | 237 | 238 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -