நற்றிணை - 192. குறிஞ்சி

'குருதி வேட்கை உரு கெழு வய மான் வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் மரம் பயில் சோலை மலிய, பூழியர் உருவத் துருவின், நாள் மேயல் ஆரும் மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை, |
5 |
நீ நயந்து வருதல் எவன்?' எனப் பல புலந்து, அழுதனை உறையும் அம் மா அரிவை! பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப் பூதம் புணர்த்த புதிது இயல் பாவை விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின் |
10 |
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே. |
இரத்தத்தை யுண்ணும் விருப்பத்தொடு அச்சத்தைச் செய்யும் வலிய புலி தன் எதிரே வலிமிக்க பெரிய இளைய களிற்றியானை வருதலை நோக்காநிற்கும்; மரங்கள் பொருந்திய சோலை நிரம்பப் பூழியருடைய நல்ல நிறத்தையுடைய யாட்டு மந்தைபோல மாரிக் காலத்து வைகறைப் பொழுதில் மேய்கின்ற கரடிகளையுடைய; மலைச்சுரத்து நீண்ட நெறியில் நீ என்னை விரும்பி வருதல் என்னை கொல்? என; பலவாகப் புலந்துகூறிக் கலுழந்துகொண்டிராநின்ற அழகிய மாமை நிறத்தினையுடைய மடந்தாய்!; பயன் மிக்க பலா மரங்களையுடைய கொல்லிமலையினுள் மேல் பாலாக முன்பு தெய்வத்தாலே செய்துவைக்கப்பட்ட புதுவதான நடைகொண்டு இயங்குகின்ற பாவை; விரிந்த ஞாயிற்றின் இளவெயிலிலே தோன்றி நின்றாலொத்த நினது அழகிய நலத்தைக் கருதி வருங்காலத்து நின்மேனி யொளியே எங்கும் பரவி இருளைப் போக்குவதாகத் தோன்றுதலானே; இம்மலையடியிலுள்ள நெறியானது எமக்குக் காவலையுடையதாகும் கண்டாய்; ஆதலின்; நீ அழுதுறைவதை விட்டொழிப்பாயாக!;
இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 190 | 191 | 192 | 193 | 194 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - என்னை, அழகிய, தோன்றி, பாவை, சோலை, வருதல், கெழு