நற்றிணை - 167. நெய்தல்
கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினை விருந்தின் வெண் குருகு ஆர்ப்பின், ஆஅய் வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற பண் அமை நெடுந் தேர்ப் பாணியின், ஒலிக்கும் தண்ணம் துறைவன் தூதொடும் வந்த |
5 |
பயன் தெரி பனுவற் பை தீர் பாண! நின் வாய்ப் பணி மொழி களையா- பல் மாண் புது வீ ஞாழலொடு புன்னை தாஅம் மணம் கமழ் கானல், மாண் நலம் இழந்த இறை ஏர் எல் வளைக் குறுமகள் |
10 |
பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே. |
புன்னையினது மேலோங்கி வளைந்த கரிய அடித்தண்டினையுடைய பெரிய கிளையிலே புதுவதாக வந்து தங்கிய வெளிய நாரை நரலுதல; கடையெழு வள்ளலுள் ஒருவனாகிய ஆஅய் அண்டிரனது பெரிய மகிழ்ச்சியையுடைய நாளோலக்கத்திலே இரவலர் பரிசிலாகப் பெற்ற அலங்காரமமைந்த நெடிய தேரினது ஒலிபோல ஒலியாநிற்கும்; குளிர்ச்சியையுடைய துறையை உடைய கடற்கரைத் தலைவனாகிய காதலன் நின்னைத் தூதாக விடுத்தலினாலே வந்த நீ பெறும் பயனுக்குத் தக்கபடி கூறும் பனுவலையுடைய வருத்தமில்லாத பாணனே !; நின் வாயினாலே கூறப்படுகின்ற மெல்லிய பொய்ம்மொழிகள்; பல மாட்சிமைப்பட்ட புதிய ஞாழன்மலரொடு புன்னைமலரும் உதிர்ந்து பரவிய மணம் கமழ்கின்ற கடற்கரையிலுள்ள சோலையின்கண்ணே; முன்பு நுகரப்பட்டுப் பின்பு தனது மாட்சிமையுடைய நலத்துடனே கையிலுள்ள அழகிய வளையும் இழந்த இளமை மாறாத மடந்தையினது; பிறை போன்ற அழகிய நெற்றியிலுண்டாகிய பசலையை; நீக்குவனவல்ல காண்; ஆதலின் நீ இங்கு நில்லாது மீண்டு செல்வாயாக!
தோழி பாணற்கு வாயில் மறுத்தது; தூதொடு வந்த பாணற்குச் சொல்லியதூஉம் ஆம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 165 | 166 | 167 | 168 | 169 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வந்த, பிறை, பெரிய, அழகிய, இழந்த, பாணற்கு, மணம், பெற்ற, நின், மாண், ஆஅய்