நற்றிணை - 117. நெய்தல்
பெருங் கடல் முழங்க, கானல் மலர, இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர, வள் இதழ் நெய்தல் கூம்ப, புள் உடன் கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர, செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம் |
5 |
கல் சேர்பு நண்ணிப் படர் அடைபு நடுங்க, புலம்பொடு வந்த புன்கண் மாலை அன்னர் உன்னார் கழியின், பல் நாள் வாழலென்- வாழி, தோழி!- என்கண் பிணி பிறிதாகக் கூறுவர்; |
10 |
பழி பிறிதாகல் பண்புமார் அன்றே. |
தோழீ ! நீ வாழி; பெரிய கடல் முழங்காநிற்கவும் கடல் அருகிலுள்ள சோலை ஒருங்கே மலர்தலைச் செய்யவும், கரிய கழியின் நீர்வெள்ளம் நமது மனையெல்லை கடந்து நிறைந்து வாராநிற்பவும்; பெரிய இதழையுடைய நெய்தல் மலர் குவியவும்; காக்கைகள் ஒருசேர மணம்வீசும் பூஞ்சோலையிலுள்ள தம்தம் கூடுகளிலே சென்று தங்கா நிற்பவும்; வளைந்த ஆதித்த மண்டிலம் சிவந்து தோன்றி அத்தமனக் குன்றைச் சென்றடைந்து எங்கும் முன்பு பரவிய சுடர் மழுக்கமடையவும்; அவற்றை நோக்கித் துன்பங்கள் எல்லாம் ஒருங்கே யான் அடைந்து நடுங்கும்படி அதனையுடன் கொண்டுவந்த புன்கண் செய்யும் மாலைப்பொழுதில்; அத்தலைவர் தாம் என்னை நினையாராகி அகன்றொழிந்தால்; அதனா லென்பாலுண்டாய காமநோயாலாய வேறுபாடு முருகு அணங்கியதால் வந்ததாகுமென்று ஊரிலுள்ளார் கூறுவர், யான் எய்திய நோயை வேறொன்றன் மேலிட்டு¢ அங்ஙனம் பழி பிறிதொன்றாக அயலார் கூறுதல் பண்புடையதன்றாதலின்; இனி யான் நெடுநாள்காறும் உயிரேடு வாழ்ந்திரேன் காண் !
வரைவு நீட ஆற்றாளாய தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது; சிறைப்புறமும்ஆம். - குன்றியனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 115 | 116 | 117 | 118 | 119 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - யான், கடல், நெய்தல், கூறுவர், ஒருங்கே, வாழி, பெரிய, புன்கண், சுடர், சிவந்து, மண்டிலம், கழியின்