முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 87. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 87. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் தெய்வங் காட்டிச் சூளுற்றுப் பின் பிரிந்து நீட்டித்தானாக, அத்தெய்வம் ஒறுக்குமோவென்று அஞ்சிய தலைமகள், “என்பால் உண்டான வேறுபாடுகளுக்குக் காரணம் தலைவர் கொடுமையன்று; என் மனநிலையேயாகும்” என்று கூறியது.)
மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும் கொடியர் அல்லரெங் குன்றுகெழு நாடர் பசைஇப் பசந்தன்று நுதலே ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே. |
5 |
- கபிலர். |
முடிபு: கடவுள் கொடியோரைத் தெறூஉம் என்ப; எம் நாடர் கொடியர் அல்லர்; என்நுதுல் பசைஇப் பசந்தன்று; ஞெகிழத் தோள் ஞெகிழ்ந்தன்று.
கருத்து: என்பால் உண்டான வேறுபாடுகளுக்குத் தலைவர் காரணரல்லர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 85 | 86 | 87 | 88 | 89 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 87. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், குறிஞ்சி, குறுந்தொகை, தலைவர், தலைவி, கூற்று, நாடர், பசைஇப், பசந்தன்று, ஞெகிழ்ந்தன்று, தோள், கொடியர், தெறூஉம், சங்க, உண்டான, கடவுள், எட்டுத்தொகை, என்ப