முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 76. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 76. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவனது பிரிவைத் தலைவியிடம் உணர்த்தச் சென்ற தோழியை நோக்கி, "நான் அச்சிரக் காலத்தில் துன்புறும்படி தலைவர் பிரிவாரென்று முன்பே அறிந்தேன்; நீ சொல்வது மிகை" என்று கூறித் தலைவி புலந்தது.)
காந்தள் வேலி ஓங்குமலை நல்நாட்டுச் செல்ப என்பவோ கல்வரை மார்பர் சிலம்பிற் சேம்பின் அலங்கல் வள்ளிலை பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇத் தண்வரல் வாடை தூக்கும் |
5 |
கடும்பனி அச்சிரம் நடுங்கஞர் உறவே. | |
- கிள்ளி மங்கலங்கிழார். |
முடிபு: அச்சிரக் காலத்தில் அஞருறக் கல்வரை மார்பர் செல்ப வென்ப.
கருத்து: தலைவர் பிரிவை முன்னரே உணர்ந்தேன்; அவர் பிரியின் நான் துன்புறுவேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 74 | 75 | 76 | 77 | 78 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 76. குறிஞ்சி - தலைவி கூற்று , தலைவி, இலக்கியங்கள், கூற்று, தலைவர், குறிஞ்சி, நான், குறுந்தொகை, செல்ப, மார்பர், கல்வரை, காலத்தில், எட்டுத்தொகை, அச்சிரக், சங்க