முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 48. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 48. பாலை - தோழி கூற்று
(தலைவன் பகல் பொழுதில் வந்து தலைவியுடன் பழகும் காலத்தில் அவனைக் காணாது நெடுநேரம் கழிவதனால் துயருற்ற தலைவியினது மேனியிற் பசலை முதலிய வேறுபாடுகள் உண்டானமை கண்டு வருந்தி, “தலைவர் இவளை வரைந்து கொள்வோம் என்று சொல்லாரோ!” என்று தோழி கூறியது.)
தாதிற் செய்த தண்பனிப் பாவை காலை வருந்துங் கையா றோம்பென ஓரை யாயங் கூறக் கேட்டும் இன்ன பண்பி னினைபெரி துழக்கும் நன்னுதல் பசலை நீங்க வன்ன |
5 |
நசையாகு பண்பின் ஒருசொல் இசையாது கொல்லோ காதலர் தமக்கே. |
|
- பூங்கணுத்திரையார். |
முடிபு: ஆயம் கூறக்கேட்டும் உழக்கும் நன்னுதலின் பசலை நீங்க ஒரு சொல் காதலர் தமக்கு இசையாது கொல்?
கருத்து: தலைவன் இத்தலைவியை வரைந்து கொண்டால் இவள் தன் துன்பத்தினின்றும் நீங்குவாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 46 | 47 | 48 | 49 | 50 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 48. பாலை - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, பசலை, குறுந்தொகை, பாலை, கூற்று, நீங்க, காதலர், தன்மையையுடைய, வரைந்து, இசையாது, பொழுதில், எட்டுத்தொகை, சங்க, தலைவன், தலைவியினது, முதலிய