முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 390. பாலை - கண்டோர் கூற்று
குறுந்தொகை - 390. பாலை - கண்டோர் கூற்று
(பாலைநிலவழியே சேர்ந்துபோகும் தலைவனையும் தலைவியையும் கண்டோர், “பொழுது போயிற்று; ஆறலை கள்வரால் ஏதம் நிகழும்”என்று அறிவுறுத்தி மேற்செல்லுதலைத் தடுத்தது.)
எல்லும் எல்லின்று பாடுங் கேளாய் செல்லா தீமோ சிறுபிடி துணையே வேற்றுமுனை வெம்மையிற் சாத்துவந் திறுத்தென வளையணி நெடுவேல் ஏந்தி மிளைவந்து பெயரும் தண்ணுமைக் குரலே. |
5 |
- உறையூர் முதுகொற்றனார். |
முடிபு: சிறுபிடி துணையே, எல்லும் எல்லின்று; குரலின் பாடும் கேளாய்; செல்லாதீம்.
கருத்து: மேலே இந்நிலத்திற் செல்லுதலைத் தவிர்மின்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 388 | 389 | 390 | 391 | 392 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 390. பாலை - கண்டோர் கூற்று, இலக்கியங்கள், கண்டோர், பாலை, குறுந்தொகை, கூற்று, ஏந்தி, துணையே, வந்து, சிறுபிடி, பெயரும், எல்லும், எட்டுத்தொகை, சங்க, எல்லின்று, கேளாய்