முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 358. முல்லை - தோழி கூற்று
குறுந்தொகை - 358. முல்லை - தோழி கூற்று
(தலைவனது பிரிவின்கண் வருந்திய தலைவியை நோக்கி, “இதோகார்ப்பருவம் வந்தது; அதனைத் தெரிவிக்கும் முல்லைக் கொடிகளும்அரும்பின; இனி அவர் வருவர்” என்று தோழி கூறியது.)
வீங்கிழை நெகிழ விம்மி யீங்கே எறிகண் பேதுற லாய்கோ டிட்டுச் சுவர்வாய் பற்றுநின் படர்சே ணீங்க வருவேம் என்ற பருவம் உதுக்காண் தனியோர் இரங்கும் பனிகூர் மாலைப் |
5 |
பல்லான் கோவலர் கண்ணிச் சொல்லுப அன்ன முல்லைமென் முகையே. |
|
- கொற்றனார். |
முடிபு: பேதுறல்; நின் படர் நீங்க வருவேமென்ற பருவம் உதுக் காண்; முல்லைமென்முகை சொல்லுபவன்ன.
கருத்து: தலைவர் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததாதலின்அவர் விரைவில் வருவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 356 | 357 | 358 | 359 | 360 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 358. முல்லை - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, முல்லை, குறுந்தொகை, கூற்று, தலைவர், பருவம், எட்டுத்தொகை, சங்க, வருவேம்