முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 353. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 353. குறிஞ்சி - தோழி கூற்று
(பகற்குறி வந்தொழுகும் தலைவன், தலைவி இல்லினின்றும் வெளிப்போதலால் ஊரினர் அறிவரோவென அஞ்சி இரவுக்குறி விரும்பிச்சிறைப்புறத்தே நிற்பத் தலைவியை நோக்கிக் கூறுவாளாய், “நம் அன்னையின் காவல் இரவில் மிக்கது” என்று தோழி இரவுக்குறி மறுக்கும் வாயிலாக வரைவு கடாயது).
ஆர்கலி வெற்பன் மார்புபுணை யாகக் கோடுயர் நெடுவரைக் கவாஅற் பகலே பாடின் அருவி ஆடுதல் இனிதே நிரையிதழ் பொருந்தாக் கண்ணோ டிரவிற் பஞ்சி வெண்திரிச் செஞ்சுடர் நல்லிற் |
5 |
பின்னுவீழ் சிறுபுறந் தழீஇ அன்னை முயங்கத் துயிலின் னாதே. |
|
- உறையூர் முதுகூற்றனார். |
முடிபு: பகலில் அருவியாடுதல் இனிது; இரவில் அன்னை முயங்கத்துயில் இன்னாது.
கருத்து: காப்பு மிகுதியால் இரவுக்குறி பெறற்கு அரிது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 351 | 352 | 353 | 354 | 355 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 353. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, இரவுக்குறி, குறுந்தொகை, கூற்று, இரவில், அன்னை, எட்டுத்தொகை, சங்க