முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 347. பாலை - தலைவன் கூற்று
குறுந்தொகை - 347. பாலை - தலைவன் கூற்று
(பொருள்வயிற் பிரிய எண்ணிய தன் நெஞ்சத்தை நோக்கி,"தலைவியும் உடன் வருவாளாயின் நாம் பிரிதல் கூடும்" என்று கூறித்தலைவன் செலவு தவிர்ந்தது.)
மல்குசுனை புலர்ந்த நல்கூர் சுரமுதற் குமரி வாகைக் கோலுடை நறுவீ மடமாத் தோகைக் குடுமியிற் றோன்றும் கான நீளிடைத் தானு நம்மொடு ஒன்றுமணஞ் செய்தனள் இவளெனின் |
5 |
நன்றே நெஞ்சம் நயந்தநின் துணிவே. | |
- காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தங் கண்ணனார். |
முடிபு: நெஞ்சம், நீளிடையில் இவள்தானும் மணஞ் செய்தனளெனின் நின்துணிவு நன்றே.
கருத்து: தலைவியைப் பிரிந்து செல்லுதல் தக்கதன்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 345 | 346 | 347 | 348 | 349 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 347. பாலை - தலைவன் கூற்று, இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, தலைவன், கூற்று, நன்றே, நெஞ்சம், எட்டுத்தொகை, சங்க, நம்மொடு