முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 339. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 339. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் வருந்தியதலைவியை நோக்கி, “தலைவனோடு அளவளாவிய காலத்தில்அவ்வொழுக்கம் நினக்கு இனிதாயிருந்தது; இப்பொழுது வருந்துதல்எவன்?” என்று தோழி கூறியது.)
நறையகில் வயங்கிய நளிபுன நறும்புகை உறையறு மையிற் போகிச் சாரற் குறவர் பாக்கத் திழிதரு நாடன் மயங்குமலர்க் கோதை நன்மார்பு முயங்கல் இனிதுமன் வாழி தோழி மாயிதழ்க் |
5 |
குவளை யுண்கண் கலுழப் பசலை யாகா வூங்கலங் கடையே. |
|
- பேயார். |
முடிபு: தோழி, பசலையாகா ஊங்கலங்கடை நாடன் மார்பு முயங்கல் இனிதுமன்.
கருத்து: தலைவன் மணந்தக்கால் இன்புற்ற நீ அவன் நின்பொருட்டுப் பிரிந்தக்கால் துன்புறுதல் தக்கதன்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 337 | 338 | 339 | 340 | 341 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 339. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, தலைவன், இனிதுமன், பசலை, முயங்கல், சங்க, எட்டுத்தொகை, நாடன்