முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 335. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 335. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவி இற்செறிக்கப்படுதலை உணர்த்திய தோழி, “அவள் ஊர்வெற்பிடை நண்ணியது” என்றும், “அவள் வல்விற் கானவர் தங்கை”என்றும் கூறி இரவுக்குறி பெறுதற் கரிது என்பதைத் தலைவனுக்குப் புலப்பட வைத்தது.)
நிரைவளை முன்கை நேரிழை மகளிர் இருங்கல் வியலறைச் செந்தினை பரப்பிச் சுனைபாய் சோர்விடை நோக்கிச் சினையிழிந்து பைங்கண் மந்தி பார்ப்போடு கவரும் வெற்பிடை நண்ணி யதுவே வார்கோல் |
5 |
வல்விற் கானவர் தங்கைப் பெருந்தோட் கொடிச்சி யிருந்த வூரே. |
|
- இருந்தையூர்க் கொற்றன் புலவனார். |
முடிபு: கொடிச்சி இருந்த ஊர் வெற்பிடை நண்ணியது.
கருத்து: தலைவியை இரவுக்குறியிற்கண்டு அளவளாவுதல் அரிது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 333 | 334 | 335 | 336 | 337 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 335. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, மகளிர், வெற்பிடை, கொடிச்சி, கானவர், தலைவி, எட்டுத்தொகை, சங்க, “அவள், வல்விற்