முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 295. மருதம் - தோழி கூற்று
குறுந்தொகை - 295. மருதம் - தோழி கூற்று
(பரத்தையிற் பிரிந்துவந்த தலைவன் தோழியை வாயில் வேண்டியபொழுது அவள், “நீ பரத்தையரோடிருந்தமை தோன்ற வந்தாய்; நின்வளத்திற்குக் காரணமான தலைவியை நீத்து உறைந்தாய்” என்று கூறியது.)
உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயும் தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி விழவொடு வருதி நீயே யிதோ ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை பெருநலக் குறுமகள் வந்தென |
5 |
இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே. | |
- தூங்கலோரியார். |
முடிபு: துவன்றி நீ வருதி; இவ்வூர், ‘ஒரான் வல்சி வாழ்க்கை,குறுமகள் வந்தென விழவாயிற்று’ என்னும்.
கருத்து: நின் செல்வத்துக்குக் காரணமாகிய தலைவியைநீத்துறைந்தமையால் ஊரினர் பழி கூறினர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 293 | 294 | 295 | 296 | 297 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 295. மருதம் - தோழி கூற்று, இலக்கியங்கள், மருதம், குறுந்தொகை, தோழி, கூற்று, குறுமகள், வந்தென, வாழ்க்கை, சங்க, எட்டுத்தொகை, துவன்றி, வருதி