முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 287. முல்லை - தோழி கூற்று
குறுந்தொகை - 287. முல்லை - தோழி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்து, "தலைவர் நம்மைத் துறந்தார்; இனி வாரார்" என்று கவன்ற தலைவியை நோக்கி, "இதோ கார்ப் பருவம்வந்தது; இனி அவர் துறந்திரார்; வருவர்" என்று தோழி கூறியது.)
அம்ம வாழி தோழி காதலர் இன்னே கண்டுந் துறக்குவர் கொல்லோ முந்நாற் றிங்க ணிறைபொறுத் தசைஇ ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு |
5 |
விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச் செழும்பல் குன்றம் நோக்கிப் பெருங்கலி வான மேர்தரும் பொழுதே. |
|
- கச்சிப்பேட்டு நன்னாகையார். |
முடிபு: தோழி, காதலர் பொழுது கண்டும் துறக்குவர் கொல்லோ?
கருத்து: கார்ப் பருவம் வந்தமையின் இனித் தலைவர் விரைவில் மீள்வர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 285 | 286 | 287 | 288 | 289 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 287. முல்லை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், முல்லை, கார்ப், உடைய, கொண்டு, தலைவர், குறுந்தொகை, கூற்று, கொல்லோ, துறக்குவர், காதலர், நோக்கி, எட்டுத்தொகை, வருவர், சங்க