முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 275. முல்லை - தோழி கூற்று
குறுந்தொகை - 275. முல்லை - தோழி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற பருவம் வந்த காலத்துத் தலைவியை நோக்கி, "மணி ஒலி செவிப்படுகின்றது; அது தலைவனது தேர்மணி ஓசையோ என்று சென்று பார்ப்போம்" என்று தோழி கூறியது.)
முல்லை யூர்ந்த கல்லுய ரேறிக் கண்டனம் வருகஞ் சென்மோ தோழி எல்லூர்ச் சேர்தரும் ஏறுடை யினத்துப் புல்லார் நல்லான் பூண்மணி கொல்லோ செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு |
5 |
வல்வில் இளையர் பக்கம் போற்ற ஈர்மணற் காட்டாறு வரூஉம் தேர்மணி கொல்லாண் டியம்பிய வுளவே. |
|
- ஒக்கூர் மாசாத்தியார். |
முடிபு: ஆண்டு இயம்பிய உள; ஆன் பூண்மணி கொல்? தேர்மணி கொல்? ஏறிக் கண்டனம் வருகம்; சென்மோ.
கருத்து: தலைவனது தேரின் மணியோசை கேட்டலின் அவன் வருகின்றானே்னத் தோற்றுகின்றது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 273 | 274 | 275 | 276 | 277 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 275. முல்லை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், முல்லை, ஓசையோ, குறுந்தொகை, கூற்று, தேர்மணி, உடைய, தேரின், கொல், பூண்மணி, தலைவனது, எட்டுத்தொகை, சங்க, கண்டனம், சென்மோ