முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 243. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 243. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி வருந்தியது கண்டு, "நீ ஆற்றி இருக்க வேண்டும்" என்று வற்புறுத்திய தோழியை நோக்கி, "நான் தலைவனை நினைப்பதனால் ஆற்றாமை மீதூர்கின்றது; இனி நினையேன்" என்று இரங்கித் தலைவி கூறியது.)
மானடி யன்ன கவட்டிலை அடும்பின் தார்மணி யன்ன ஒண்பூக் கொழுதி ஒண்தொடி மகளிர் வண்ட லயரும் புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை உள்ளேன் தோழி படீஇயர்என் கண்ணே. |
5 |
- நம்பி குட்டுவனார். |
முடிபு: தோழி, சேர்ப்பனை உள்ளேன்; என்கண் படீஇயர்.
கருத்து: தலைவனை நினையாது இருத்தல் அரிதாதலின் ஆற்றாமையும் நீங்கல் அரிது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 241 | 242 | 243 | 244 | 245 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 243. நெய்தல் - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், நெய்தல், உடைய, தோழி, தலைவனை, குறுந்தொகை, கூற்று, ஒள்ளிய, உள்ளேன், சேர்ப்பனை, எட்டுத்தொகை, நினையேன், யன்ன, சங்க