முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 222. குறிஞ்சி - தலைவன் கூற்று
குறுந்தொகை - 222. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தலைவியும் தோழியும் நீராடி ஒருங்கிருந்த இடத்து அத்தோழியின்பால் தலைவிக்குளதாய ஒற்றுமையை அறிந்து, “இவளே தலைவியைநாம் பெறுதற்குரிய வாயில்; இனி இவள் வாயிலாக நாம் இரந்து குறைபெறுதும்” என்று தலைவன் நினைந்தது.)
தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும் கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும் புணைகை விட்டுப் புனலோ டொழுகின் ஆண்டும் வருகுவள் போலு மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் |
5 |
செவ்வெரி நுறழும் கொழுங்கடை மழைக்கட் டுளிதலைத் தலைஇய தளிரன் னோளே. |
|
- சிறைக்குடி யாந்தையார். |
முடிபு: தளிரன்னோள் தலைப்புணைக் கொளின்தலைப் புணைக்கொள்ளும்; கடைப்புணைக் கொளின் கடைப்புணைக் கொள்ளும்; ஒழுகின் வருகுவள் போலும்.
கருத்து: இத்தோழி தலைவியோடு மனமொத்த நிலையினள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 220 | 221 | 222 | 223 | 224 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 222. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், கடைப்புணைக், தலைவன், இவள், கொள்ளும், குறிஞ்சி, தலைப்புணைக், குறுந்தொகை, கூற்று, தெப்பத்தின், கொள்வாள், போலும், தலைவி, வருகுவள், எட்டுத்தொகை, கொளினே, சங்க, உடைய