முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 207. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 207. பாலை - தலைவி கூற்று
(தலைவர் சொல்லாமற் பிரிந்து செல்வதைத் தோழி கூறிய பொழுது,“இங்ஙனம் சொல்லிய ஆர்வலர் பலர்; அவரைப் போல நீயும் சொன்னாய்; தலைவரைத் தடுத்தாயல்லை” எனத் தலைவி இரங்கிச் சொல்லியது.)
செப்பினஞ் செலினே செலவரி தாகுமென் றத்த வோமை அங்கவட் டிருந்த இனந்தீர் பருந்தின் புலம்புகொள் தெள்விளி சுரஞ்செல் மாக்கட் குயவுத்துணை யாகும் கல்வரை யயலது தொல்வழங்கு சிறுநெறி |
5 |
நல்லடி பொறிப்பத் தாஅய்ச் சென்றெனக் கேட்டனம் ஆர்வலர் பலரே. |
|
- உறையனார். |
முடிபு: என்று சென்றெனக் கேட்ட ஆர்வலர் பலர்.
கருத்து: தலைவர் செலவை யான் முன்னரே அறிந்தேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 205 | 206 | 207 | 208 | 209 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 207. பாலை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், பாலை, கூற்று, ஆர்வலர், குறுந்தொகை, சென்றெனக், நம்முடைய, கேட்ட, பலர், தலைவர், எட்டுத்தொகை, சங்க, பிரிந்து