முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 202. மருதம் - தலைவி கூற்று
குறுந்தொகை - 202. மருதம் - தலைவி கூற்று
(பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனுக்குத் தூதாகவந்த தோழியைநோக்கி, “தலைவர் இப்பொழுது எனக்கு இன்னாமையைத் தரும்ஒழுக்கத்தினராதலின் என் நெஞ்சு வருந்தும்; அவரை ஏற்றுக் கொள்ளேன்” என்று தலைவி கூறியது.)
நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங் கினிய செய்தநங் காதலர் இன்னா செய்தல் நோமென் னெஞ்சே. |
5 |
- அள்ளூர் நன்முல்லையார். |
முடிபு: என் நெஞ்சு நோம்; என் நெஞ்சு நோம்; நம் காதலர்இன்னா செய்தலால் என் நெஞ்சு நோம்.
கருத்து: தலைவர் இன்னாராகி ஒழுகுதலால் என் நெஞ்சம் வருந்தும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 200 | 201 | 202 | 203 | 204 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 202. மருதம் - தலைவி கூற்று, நெஞ்சு, நோம், இலக்கியங்கள், தலைவி, நோமென், னெஞ்சே, குறுந்தொகை, கூற்று, மருதம், எட்டுத்தொகை, தலைவர், சங்க, இப்பொழுது, வருந்தும்